காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள் முன்னெடுப்பு

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை (20) விசாரணைகள் நடத்தப்பட்டன.

இதன்போது விசாரணைகளுக்காக மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென் மேற்கு மற்றும் மண்முனைப் பற்று ஆகிய பிரதேசங்களிலிருந்து காணாமல்போனவர்களின் உறவினர்கள் 40 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன.

காணாமல்போனவர்கள் பற்றிய அலுவலகத்தின்  ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, குழுத் தலைவர் விமலநாதன், பிராந்திய இணைப்பாளர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் இன்று காலையிலிருந்து முன்னெடுத்துள்ள இந்த விசாரணைகள் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.