மீனவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக முன்னணியின் எம்.பிகள்!

மீனவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக முன்னணிமீனவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக முன்னணி: அத்துமீறும் இந்திய மீனவர்களால் கடற்தொழிலாளர்களின் தொழில் உபகரணங்கள் சேதமடைவதைக் கண்டித்தும், உயிர்கள் பறிக்கப்படுவதையும் கண்டித்து அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கெதிராகவும், கடற்தொழில் அமைச்சருக்கும் எதிராக யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதி மீனவர்கள் 751 பேருந்த வழித்தடை வீதியை பல இடங்களில் மறித்துத் தொடர்ச்சியான போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் போராடும் மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.