இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பாது-இந்திய தூதரகம் அறிவிப்பு

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பாது

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் ஊடக அறிக்கைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம்  அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த விடயத்தை ந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்க விரும்புவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய தூதரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில்,

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பவது தொடர்பான இந்த அறிக்கைகள் மற்றும் அத்தகைய கருத்துக்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இல்லை.

அத்துடன் இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு உறுதுணையாக இருப்பதாகவே இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெளிவாக தெரிவித்திருந்தார் என  கூறப்பட்டுள்ளது.

Tamil News