Home Blog Page 2807

வெளிநாட்டு வாழ் இலங்கை முஸ்லிம் சகோதரர்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் உதவிக்கரம் நீட்டுகிறது முஸ்லிம் சமூகம்

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இனவாதிகள் தமது தாக்குதல்களை அட்டூழியங்களை மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் அரசாங்கமும் பாதுகாப்பு படையினர் கட்டளைகளை அமுல்படுத்தியும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

குறிப்பாக இன்று அவசரகால சட்டம் ,விசேட ஊரடக சட்டம் அனைத்தும் அமுல்படுத்தப் பட்டு இன்று வடமேல் மாகாணத்தில் குருநாகல், ஏனைய பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்ற நேற்றைய வன்முறைகளில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் மாவட்டம், நாத்தாண்டிய, கொட்டாரமுல்லை பகுதியை சேர்ந்த அமீர் என்பவரும், கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த பௌசுல் ஹமீத் என்பவருமே இவ்வாறு உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய பிரதேசங்கள் பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்துக் கொண்டிருக்கவே முஸ்லிம்களின் கடைகளும் பள்ளிவாசல்களும் உடைக்கப்பட்டு எரிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது ஆனால் பாதுகாப்பு படை வீரர்கள் கண்டும் காணாது போன்றும் இனவாதிகளை கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் காணப்படுகின்றனர்

இது இலங்கையில் நடக்கின்ற முதல் தடவை சிங்கள அடிப்படைவாத இனவாதிகளின் தாக்குதல் அல்ல இதற்கு முதல் அளுத்கம, திகன, அம்பாறை, தாக்குதல்கள் கடந்த வருடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டது ஒவ்வொரு புனித ரமலான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகள் தாக்குதல் நடத்துவது வரலாறாக காணப்படுகின்றது.

ஆகவே தயவு செய்து இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் சர்வதேச சமூகத்தில் கண்டிப்பாக கட்டளைகள் இலங்கை அரசாங்கத்திற்கும் இராணுவ படைக்கும் வழங்கப் படுகின்ற போது தான் இவற்றை கட்டுப்படுத்த முடியும் இல்லாவிட்டால் மீண்டும் ஒரு முஸ்லிம்களுக்கு எதிரான யூலைக் கலவரமாக இது மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.

அவசியமாக நீங்கள் செய்ய வேண்டிய உதவிகள்:

வெளிநாட்டில் வாழ்கின்ற எமது சகோதரர்கள் அந்தந்த நாட்டு வெளிநாட்டு தூதர் ஆலயங்களுக்கு சென்று இலங்கை முஸ்லிம் மக்களின் நிலைமை தொடர்பான தெளிவான ஆவணம் ஒன்றை சமர்ப்பித்து உதவி கோரல்

✓•குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் வாழுகின்ற எமது சகோதரர்கள் அந்த முஸ்லீம் நாட்டு தூதுவர்வர்களிடம் சென்று இலங்கைவாழ் முஸ்லிம்களுக்காக உணவு வைத்திய சேவைகள் தேவைப்படுவதால் நீங்கள் உடனடியாக தலையிட்டு இந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுவது.

✓•ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகின்ற எமது சகோதரர்கள் அங்கு காணப்படும் ஐக்கிய நாடுகள் சபை காரியாலயம் , மனித உரிமை நிலையம் போன்றவற்றில் முஸ்லிம்கள் மீது அடாத்தாக நடத்தப்படுகின்ற தாக்குதல்களையும் வன்முறைகள் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து பாதுகாப்பு உதவிகளையும் கேட்பது.

✓•வெளிநாட்டு ஊடகங்களுக்கு இலங்கை முஸ்லிம்களுக்கு இனவாதிகளால் நடத்தப்படுகின்ற அநீதிகள் தொடர்பான முழுமையான தகவல்களையும் ஆதாரங்களையும் வழங்கி வெளிநாட்டு ஊடக செய்திகளில் அவற்றை ஆதாரங்களாக வெளிப் படுத்துவது.

✓•வெளி நாட்டில் காணப்படுகின்ற அனைத்து முஸ்லிம் உறவுகளும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு முன்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக உதவிக்கரம் கோரியும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளுதல்.

✓•விஷேடமாக இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் அரசியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைவர்கள் உடனடியாக அவசரமாக வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பை மேற்கொண்டு தற்போது நடக்கிறது சிங்கள அடிப்படைவாத இனவாதிகளின் செயற்பாடுகளை தெளிவுபடுத்தி அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆகவே மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்வதன் மூலம் தான் இனவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி அரசாங்கம் உடனடியாக சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இங்கு இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களாலும், பாராளுமன்ற உறுப்பினர்களும், வெறும் பயனில்லாத அறிக்கைகளையும் பாராளுமன்றத்தில் வெறும் வீரப் பேச்சு களை மட்டும் தான் பேச முடியும் செயல்வடிவில் எதுவும் அமுல் படுத்தப் பட மாட்டாது இவர்களைப் பற்றி பெரும்பான்மை சமூகமும், பெரும்பான்மை அரசியல் தலைவர்களும் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள் அதனால்தான் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இனவாத செயற்பாடுகள் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவதற்குக் காரணமாக அமைகிறது.

சிறிலங்காவின் பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்த்தன

சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சரான மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமாக சீனா சென்றுள்ளதால், பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்ற வேளை அதிபர் மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் சென்றிருந்தார். அவ்வேளையில் பாதுகாப்பு பதில் அமைச்சுப் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இது நாட்டில் பல பிரச்சினைகளை தோற்றுவித்தது.

இவ்வேளையில் பாதுகாப்பு தொடர்பாக உரிய தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என எதிர்த் தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ வெளிநாடு செல்லும் போது, பாதுகாப்பு பதில் அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பார்.

ஆனால் 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் கடந்த ஏப்ரல் 21 வரை பாதுகாப்பு அமைச்சரான மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது, பாதுகாப்பு பதில் அமைச்சராக எவரையும் நியமிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

முள்ளிவாய்க்கால் கஞ்சியும் அரிக்கன் லாம்பும்

12.05.2019 அன்று கனடாவில் நடைபெற்ற ஈகுருவி நைற் என்ற நிகழ்வில் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஈகுருவி நைற் என நடைபெற்ற நிகழ்வானது முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நிகழ்வை நினைவு கூரும் நிகழ்வாக அமைந்தது. இந் நிகழ்வில் காலையில் வன்னி இறுதிப் போரின் போது நடைபெற்ற இனப்படுகொலைகளின் சாட்சியாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்களின் இறுதிப் போர்க்கால அனுபவங்கள் அடங்கிய.  Kass Ghayouri என்பவரால் எழுதப்பட்ட ”A note from no fire zone” என்னும் நூல் வெளியிடப்பட்டது.

இந் நூல் வெளியீட்டின் போது, மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, இரு சிறுமியர்கள் கைகளில் அரிக்கன் விளக்குகளை (Hurricane Lamp)  சபையோர் ஊடாக எடுத்து வந்தனர். இது மருத்துவர் வரதராஜன் அவர்கள் அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் மருத்துவ சேவை வழங்கியதை நினைவு கூர்வதற்காகவேயாகும்.

canada 1 முள்ளிவாய்க்கால் கஞ்சியும் அரிக்கன் லாம்பும்2010இல் M V Sun Sea கப்பலில் கனடா வந்து சேர்ந்த 492 ஈழத் தமிழர்களில் சிலரது அனுபவங்கள் ”முள்ளிவாய்க்கால்” என்ற பெயரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டது. இந் நூல் மாலையில், வெளியிடப்பட்டது.

போரின் இறுதிக் காலகட்டத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்ட போது, பெரிய கிடாரங்களில் கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே அந்தப் பகுதி மக்களை பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்ற உதவியது. இந்த நிகழ்வை நினைவு கூர்வதற்காக நிகழ்விற்கு வருகை தந்தோருக்கு, அறுசுவை உணவிற்குப் பதிலாக கஞ்சியே வழங்கப்பட்டது.

நாம் பட்ட துயரங்களை மறக்காமல் இருப்பதற்காகவும், இதை அடுத்த தலைமுறையினருக்கு அறிவிப்பதற்குமாகவே இது மேற்கொள்ளப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு கூரும் நிகழ்வில் இந்த ”முள்ளிவாய்க்கால் கஞ்சி” ஒரு நினைவு சின்னமாக விளங்கட்டும்.

உரிமைகள் மறுக்கபடுவதற்கு பின்னணியை புரிந்து கொள்வதற்கு கோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம் கலாநிதி ந. மாலதி

அன்றய வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (North-East Secretariat on Human Rights – NESoHR ) முக்கிய உறுப்பினரும், தாயகத்தில் பெண்கள் முன்னேற்றச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரும் தமிழர் உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான கலாநிதி. ந. மாலதி அவர்கள் இலக்கு இதழுக்காக வழங்கிய நேர்காணல்:

கேள்வி – முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட இன்றைய நிலையில் நீதி வழங்கப்படுவது, தமிழர்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படுவது தொடர்பில் எதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா?

பதில் – முன்னேற்றம் போன்ற சில தோற்றப்பாடுகளை ஐநா மனித உரிமை கவுன்சில் காட்டி வருகிறது. நாமும் அத்தோற்றப்பாடுகளை பார்த்து ஏமாந்து வருகிறோம் என்பது தான் உண்மை. இந்த ஐநா மனிதவுரிமை கவுன்சில் செயற்பாடுகள் நீர்ச்சுழல் போன்று அபாயமானது. ஈழத்தமிழர்களை உள்ளிழுத்து அவர்களின் வளங்களையும் சக்தியையும் விரயம் செய்வதற்கான ஏமாற்று வழிதான் இது.

இதுவரை கிடைத்த ஒரேயொரு முன்னேற்றம் ஜெர்மனியில் உள்ள பிரேமன் நகரில் 2013 டிசம்பர் மாதத்தில் அமர்ந்த நிரந்தர மக்கள் தீர்பாயம் வழங்கிய தீர்ப்பு ஒன்று மட்டுமே. ஐநா மனிதவுரிமை கவுன்சில் அமர்வுகளை ஈழத்தமிழர் ஊடகங்கள் பேசும் அளவுக்கு நிரந்தர மக்கள் தீர்பாயத்தின் தீர்ப்புகளை எமது ஊடகங்கள் பேசுவதில்லை. இது ஏன் என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.201803asia srilanka missing உரிமைகள் மறுக்கபடுவதற்கு பின்னணியை புரிந்து கொள்வதற்கு கோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம் கலாநிதி ந. மாலதி

கேள்வி – இவ்வாறானதொரு நிலைக்கான முக்கியமான காரணங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள்?

பதில் – எமது போராட்டம் அழிக்கப்பட்டதன் பின்னணியையும் தொடர்ந்து எமது உரிமைகள் மறுக்கப்படுவதற்கான பின்னணியையும் புரிந்து கொள்வதற்கு பூகோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம். எமது போராட்டத்தை பற்றிய ஆழமான அறிவு மட்டும் இத்தகைய தெளிவை தர மாட்டாது. உலகளாவிய ரீதியில் மக்களின் போராட்டங்களுக்கு என்ன நடந்தது நடக்கிறது என்ற வரலாற்று அறிவு அவசியம்.

இதை மையநீரோட்ட ஊடகங்களை படித்து அறிந்து கொள்ள முடியாது. அவை மேற்குலக நன்மை சார்ந்தே பாதி உண்மைகளை மட்டும் செய்திகளாக வெளியிடும்.
இலங்கை தீவின் பூகோள கேந்திர முக்கியத்துவம் பற்றி, அதனுடன் பின்னிப் பிணைந்து நிற்கும் பூகோள அரசியலின் யதார்த்தம் பற்றி ஈழத்தமிழ் அரசியல் வாதிகளோ வேறெந்த தமிழர் தரப்போ மக்களுக்கு பெரிதாக அறிவூட்டவில்லை. இதனால் நாம் இதுபற்றிய புரிதல் போதாமையில் இருக்கிறோம். தமிழரின் ஊடகங்களும் தமிழருக்கு இந்த விழிப்புணர்வை கொடுக்க தவறுகின்றன.

இலங்கை தீவின் கேந்திர முக்கியத்துவத்தினால் வல்லரசுகளுக்கு இத்தீவு மிகவும் தேவையாக உள்ளது. இது இன்று நேற்று தோன்றியதல்ல. காலனிய காலத்திலேயே தொடங்கிவிட்டது. சிங்களவர்களை ஆரியர்களாக அன்று பிரித்தானிய ஆய்வாளர்கள் சித்தரித்தது இதற்காகவே. ஆரியவாதம் மேலோங்கி இருந்த காலம் அது. இத்தீவின் தேவை வல்லரசுகளுக்கு இன்றும் இருப்பதால், ஆரிய போதை ஊட்டப்பட்ட சிங்கள மக்களை இன்றும் அது இலகுவாக கையாளுகிறது.

முள்ளிவாய்கால் போர்குற்றங்களை விசாரணை செய்வோம் என்று சிங்களவர்களை பயமுறுத்துவதும் இன்று மேற்குலகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். உலகெங்கும் கெட்டவர்களை அரசியலில் அமர்த்தி அவர்களை ”நமது கெட்டவர்களாக” நட்பு கொண்டாடுவது ஐ-அமெரிக்காவின் ஒரு கைவந்த கலை.
அண்மையில் ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கை தீவில் நடந்த தாக்குதல்களின் பின்னணியிலும் இந்த மேற்குலக வல்லரசுகளின் கை இருப்பதை வரலாறு தெரிந்தவர்கள் புரிந்து கொள்ளலாம். இஸ்லாமியர்களை தமிழர்களிடம் இருந்து பிரிப்பதற்காக 1980களில் இலங்கையில் உருவாக்கப்பட்டதே இந்த இஸ்லாமிய தீவிரவாதம்.

கேள்வி – வன்னியில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற பேரழிவுகளை ஏன் அனைத்துலக சமூகத்தால் தடுத்து நிறுத்த முடியாமற் போனது ?

பதில் – இன்றைய அனைத்துலக சமூகம் என்று நாம் எதை கருதுகிறோம். மேற்குலகமா? சீனாவா? இந்தியாவா? ஐ-நாடுகளா? இவற்றில் எவையாவது உலகில் நீதி நிலைநாட்டுவதற்காக தன்னலம் இன்றி உழைக்கின்றனவா? இல்லையல்லவா? அப்படியானால் இதை தடுப்பதால் இவற்றில் எவருக்கு இலாபம்? எவருக்கும் அதை தடுப்பதால் இலாபம் இல்லாமல் போனது ஈழத்தமிழரின் துர்ரதிஸ்டம். இருந்தாலும் இத்துணை மோசமாக ஒட்டுமொத்த மக்கள் அழிக்கப்படும் போது உலகம் கைகட்டி பார்த்துக்கொண்டு நிற்கும் என்பதை எம்மவர் எவரும் நம்பியிருக்க மாட்டார்கள். உலகில் நீதி எவ்வாறு கோலோச்சுகிறது என்பதையே இது காட்டுகிறது.

கேள்வி – இறுதிப் போரின் நேரடிச் சாட்சிகளுள் ஒருவர் என்ற வகையிலும், ஒரு மனிதவுரிமைச் செயற்பாட்டாளார் என்ற வகையிலும் அங்கு சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப் மனிதவுரிமை மீறல் செயற்பாடுகளாக, மானுடத்திற்கெதிரான குற்றச் செயலாளாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள்?

பதில் – 1956ம் ஆண்டிலிருந்த நடந்த நூற்றுக்கணக்கான படுகொலைகள், 1983ம் ஆண்டு ஜுலாய் படுகொலைகள், தென் தமிழீழத்தில் தமிழ் கிராமங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டது, தமிழீழம் எங்கும் தமிழர் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகள் சித்திரவதைகள், தமிழ்பெண்கள் மேல் நடாத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், இன்றும் தொடரும் நில அபகரிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு எல்லாமே மானுடத்திற்கு எதிரான குற்றச் செயல்கள்தான்.

முள்ளிவாய்க்கால் இவற்றிற்கு சிகரம் வைத்தது. தற்கால உலக நீதி இந்த கொடிய இனவழிப்பை தடுக்கும் என்று நாம் நம்பியது எமது தவறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இறுதி போரில் இடம்பெற்ற பல சம்பவங்களை நிசோர் பணியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விபரங்கள் சேகரித்தார்கள். அவற்றை தொடர்ச்சியாக நிசோர் அறிக்கைகளாக வெளியிட்டோம். 2008 டிசம்பர் மாதம் கொத்துக்குண்டுகள் வன்னியில் போடபட்டது பற்றியும் நிசோர் பணியாளர்கள் எடுத்து வந்த தரவுகளை வைத்து ஒரு அறிக்கை வெளியிட்டோம்.

இக்காலத்தில் நான் புதுக்குடியிருப்பில் இருந்த செந்தளிர் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்தேன். ஒரு குண்டு தக்குதலின் போது இச்சிறுவர் இல்லத்திலும் குண்டுகள் விழுந்தன. அருகிலிருந்த வள்ளிபுனம் பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முல்லைதீவு வைத்தியசாலையின் ஒரு கிளை மேல் சனவரி 2009 இல் எறிகணை தாக்குதல் நடந்தது

2009 மார்ச் மாதம் நாம் இடம் பெயர்ந்து முள்ளிவாய்காலுக்கு வந்து விட்டோம். பொதுமக்கள் நெரிசலாக கூடராங்களில் இருந்தோம். எமது கூடாரத்தை சுற்றி எறிகணைகளாலும் விமானத்தில் இருந்து போடப்பட்ட குண்டுகளாலும் நடந்த இறப்புக்கள் பற்றி எமது காதுக்கு செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. எமது கூடாரத்துக்கு மிக அருகில் விழுந்த ஒரு குண்டில் குழந்தைகள் உட்பட பலர் பலியானார்கள்.

கேள்வி – இனவழிப்புக்கான நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய தமிழர் உரிமைகளை மீள நிலைநிறுத்த தமிழர் தரப்புகள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள்?

பதில் – நாம் ஒரு போராடும் மக்கள். மேற்குலக அரசுகளுடன் கைகோர்த்து போராட்டத்தில் வெற்றி பெறலாம் என்பது மூடத்தனம். நாம் ஒரு போதையூட்டப்பட்ட அரசியல் தெளிவற்ற மக்களாக இருந்தால் மட்டுமே மேற்குலகம் எம்மோடு கைகோர்க்கும். அப்போதுதான் எம்மை சுலபமாக அது கையாளலாம்.
ஈழத்தமிழர் விடுதலைக்காக நாம் இரண்டு வழிகளை ஒரே நேரத்தில் பின்பற்றலாம்.DSC02444 உரிமைகள் மறுக்கபடுவதற்கு பின்னணியை புரிந்து கொள்வதற்கு கோள அரசியல் பற்றிய தெளிவு அவசியம் கலாநிதி ந. மாலதி

முதலாவது உலகெங்கும் உள்ள பல போராடும் மக்களுடன் நாம் கைகோர்க்க வேண்டும். நாம் வாழும் நாடுகளில் உள்ள உலக மக்களின் போராட்டத்தை ஆதரிக்கும் மக்களுடனும், சிங்களவர்கள் உட்பட நாம் இணைய வேண்டும்.
இரண்டாவது, தேசியம் மட்டுமே நீதிக்கான வழியல்ல என்பதை உணர்ந்து எமது அமைப்புக்களிலும் எமது சொந்த வாழ்க்கையிலும் நாம் சமூக நீதியை முன்னிறுத்த வேண்டும். சாதி ஒழிப்பு, சமத்துவம், ஆடம்பரமின்மை, கூட்டுணர்வு போன்றவை எம்மை உண்மையான விடுதலைக்கு தயார் செய்யும்.

விடுதலை ஒரு நீண்ட பயணம். ஈழத்தமிழராகிய நாம் அதில் நெடுந்தூரம் வந்து விட்டோம். மிகுதி தூரத்தையும் உறுதியுடன் கடக்கலாம். இன்று நாம் பல பிரிவுகளாக பிரிந்து நிற்கிறோம்.பிரிவுகள் இயற்கையானதே. பிரிவுகளிடையேயும் தேசிய விடுதலையும் சமூகநீதியும் என்ற இரட்டை நோக்கம் பற்றிய தெளிவு இருந்தால் நாம் ஒன்றாக பயணிக்கலாம். இலக்கை அடையலாம்.

இரு முஸ்லீம் மக்கள் படுகொலை, 30 கிராமங்கள் மீது தாக்குதல் – அமைச்சர்களை பதவி விலகுமாறு கோரிக்கை

சிங்கள இனத்தவர்களின் வன்முறைகளை தவிர்ப்பதற்காக சிறீலங்கா அரசு அவசரமாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்திய போதும் தென்னிலங்கையில் வன்முறைகள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலின் போது இரு முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மினிவாங்கொடையைச் சேர்ந்த பௌஸீல் ஹமீட் (40) மற்றும் கொட்டருமுல்லையைச் சேர்ந்த அமீர் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வீடுகளினுள் புகுந்த சிங்கள வன்முறையாளர்கள் அவர்களை அடித்தும் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர்.

இதனிடையே குருநாகல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வன்முறைகளில் இதுவரை 9 பள்ளிவாசல்கள் சேதமடைந்துள்ளதுடன், 30 முஸ்லீம் கிராமங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

மாளிகாவத்தை பகுதியில் உள்ள முஸ்லீம் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு முஸ்லீம் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள அதேசமயம் கொழும்பில் மயான அமைதி நிலவுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் முஸ்லீம் அமைச்சர்களை பதவி விலகுமாறு முஸ்லீம் சமூகம் கடுமையான அழுத்தங்களை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

kurunagal5 இரு முஸ்லீம் மக்கள் படுகொலை, 30 கிராமங்கள் மீது தாக்குதல் - அமைச்சர்களை பதவி விலகுமாறு கோரிக்கை

பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் மீது நேரடியாக பாய்கின்றது என்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களின் கைது முன்னுதாரணம் சனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சிறப்பு பேட்டி

பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் மீது நேரடியாக பாய்கின்றது என்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களின் கைது முன்னுதாரணம் என சனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சுட்டிக்காட்டியதோடு ஆபத்துக்கள் நிறைந்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாக்குவதற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சட்டத்தரணி கே.வி.தவராஜா அவர்கள் இலக்கு இதழுக்காக வழங்கிய நேர்காணல்:

கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னர் நாட்டில் அவசர கால சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- மிக மோசமாக நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களை அடுத்து பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட இரண்டு சட்டங்கள் அமுலில் இருக்கின்ற நிலையில் எதற்காக அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்பட்டது என்ற கேள்வி இல்லாமில்லை. தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் ஒரு சிறு குழுவினரே தொடர்புபட்டுள்ளமையால் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி நடவடிக்கைகளை எடுப்பதற்கு போதுமானது. எனினும், பயங்கரவாத தடைச்சட்டமானது கடந்த 41 ஆண்டுகளாக நாட்டில் அமுலில் உள்ளது. ஏறக்குறைய நிரந்தரச்சட்டம் போன்றாகி விட்டது.

அவ்வாறிருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தொடர்ந்தும் பயன்படுத்துவது நிரந்தரமாகவே பயங்கரவாத சூழலையும் அதற்கேற்ற அரசையுந்தான் உருவாக்குவதற்கு வழிசமைப்பதாய் இருக்கும். அவசரகாலச் சட்டத்தினைப் பொறுத்த வரையில் ஒரு மாதம் வரையில்த்தான் அதனை அமுலில் வைத்திருக்க முடியும். ஒவ்வொரு மாதத்திற்கு ஒரு தடவை பாராளுமன்றத்தின் அனுமதி அவசியமாக இருக்கின்றது. தற்போதைய தாக்குதல்களில் இஸ்லாம் அடிப்படை வாதத்தின் பிரகாரம் பணபலம் உள்ளிட்ட சகல வசதி படைத்தவர்கள் தான் ஈடுபட்டுள்ளார்கள். 1983 கலவரம், 30 ஆண்டு விடுதலைப்போராட்டம் ஆகியவற்றுக்கும் தற்போதைய தாக்குதல் களுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன.

அப்படிப் பார்க்கின்றபோது, நாட்டில் அவசரகால சூழல் ஏற்பட்டிருக்கின்றது என்ற அடிப்படையில்த்தான் அவசரகாலச் சட்டம் அமுலாக்கப்பட்டது. இதற்கு பாராளுமன்றத்திலும் ஏகமனதான அங்கீகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இவ்வாறு நடைபெறுவதுதான் வழமையாக இருக்கின்றது. ஆனால் அதன் பிரயோகத்தினையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.

கேள்வி:- பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதனால் பல்கலைகழக மாண வர்களின் கைதுவரை அதன் எதிர்வினையை தமிழர்கள் உணர்ந்தவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவ்வாறிருக்க, அவசரகால சட்டமும் அமுலாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சட்டங்களால் தற்போது தமிழர் தாயகம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்:- சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதுதான் பொதுப்படை. ஆனால் நடைமுறையில் என்ன நடைபெறுகின்றது என்பதை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. நான் இதற்கு இரண்டு உதாரணங்களை கூற விளைகின்றேன். தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிய குற்றச்சாட்டில் ஒரு கார் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கார் வியாபாரம் செய்வதற்காகவே குறித்த நபருடன் தொலைபேசி வாயிலாக கதைத்துள்ளார். இவருக்கு அந்த நபர் சிரியா சென்றாரா? பயிற்சி பெற்றாரா? என்றெல்லாம் தெரியாது.

அப்படியிருக்க கார் வர்த்தகர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார். ஆனால் இவர் மீது அவசரகால ஒழுங்கு விதிகளிலோ, அல்லது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழோ வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. பொதுச்சட்டத்தின் கீழ்த்தான் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் ஏனைய விசாரணை அறி க்கைகளின் பிரகாரம் இவர் தொடர்புபட்டு ள்ளாரா என்பதை கண்டறியும் வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று தான் வெல்லம்பிட்டி தொழிற்சாலையில் கடமையாற்றிய பத்துபேரில் ஒன்பது பேருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழோ அல்லது அவசரகால சட்டத்தின் கீழோ கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு சட்டமா அதிபரின் அனுமதியின்றி பிணை அனுமதி வழங்க முடியாது. ஆகவே தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்திலும் சுற்றிவளைப்புக்களின் போதும் நடைபெறும் அதிகமான கைதுகள் பொதுச்சட்டத்தின் கீழ் தான் மேற்கொள்ளப்படுகின்றது. அங்கு பயங்கரவாத தடைச்சட்டமோ அவசரகால ஒழுங்கு விதிகளோ பயன்படுத்துவதாக இல்லை.ஆனால், தாயகத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், தேநீர்ச் சாலை நபர் ஒருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் பயங்கர வாதத்திற்கு ஊக்கமளிக்கின்றார்கள் என்று கூறி அவர்களை பயங்கரவாத தடைச்சட் டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். தெற்கில், குண்டுகள் வெடித்து அதனுடன் தொடர்புடைய எத்தனையோ கைதுகள் இடம்பெற்றுள்ளன. எத்தனையோ பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அது தொடர்பிலும் கைதுகள் இடம்பெற்றுள்ளன. என்ன குற்றம் இழைக்கப்பட்டது. அதனுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்காவே தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அனைவரும் அறிவார்கள். அந்த குற்றத்தினை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இன,மத,மொழி வேறுபாடு இல்லை. அப்பிடியிருக்கையில், தெற்கில் ஒருமுறையிலும் வடக்கில் இன்னொரு முறையிலும் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இதனடிப்படையில் பார்க்கின்றபோது, அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் அவசரகால நிலைமையில் தமிழர்களை இலக்குவைத்து வலிந்து பாய்கின்றமைக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கைது உதாரணமாகின்றது.

கேள்வி:- பல்கலைக்கழக மாணவர்களின் கைது முறையற்றதொன்று என்ற பாரிய விமர்சனம் காணப்படுகின்றதே?

பதில்:- முதலாவதாக, பல்கலைக்கழக வாளகத்தினுள் சோதனை நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகின்றது. இரண்டாவதாக கைது செய்யப்பட்ட பல்கலைகழக மாணவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு வலு ஊட்டினார்கள் என்று கூறப்படுகின்றது. ஒளிப்படத்தினை அவர்கள் வைத்திருந்ததாகவும் கூறுகின்றார்கள்.

ஆனால் அவர்கள் பயன்படுத்திய கட்டடம் அவர்களுக்கு மட்டும் தனியான
உரித்தினைக் கொண்டிருக்கவில்லை. பதவிகள் மாறுகின்றபோது பதவிகளை ஏற்பவர்கள் அந்தக் கட்டடத்தினை பயன்படுத்துவதே வழமையாக இருகின்றது. அப்படியிருக்கையில், இந்த கைதின் தன்மையிலேயே பாரிய சந்தேகங்களும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன.

இவ்வாறு இருக்கையில் தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அமுலாக்குவதற்குதற்கான நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக அடுத்த வாரமளவில் பாராளுமன்றத்தில் அது சம்பந்தமான விவாதத்தினை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாகின்றபோது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இல்லை.

அவசரகால நிலைமைகளின் போதும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் கைதானவர்கள் அந்த சட்டங்கள் நீக்கப்பட்டாலும் அவர்கள் மீதான வழக்குகள் அந்தச்சட்டங்களின் தன்மைகளின் அடிப்படையில்த்தான் இருக்கும். அதில் மாற்றங்கள் நிகழும் என்று கூறுவது தவறாகும்.

கேள்வி:- புதிய பங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றபோதும் தற்போது உலகத் தீவிரவாதத்தினை கட்டுப்படுத்தவதற்கு அவசியமானது என்று காரணம் கூறப்படுகின்றதே?

பதில்:- முதலாவதாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் அமுலாகின்றபோது, அவசரகால ஒழுங்கு விதிகள் நாட்டில் நிரந்தரச் சட்டமாக மாற்றமடையும் சூழலே ஏற்படும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக நீதிக்காக, உறவுகளின் விடுதலைக்காக, சொந்த நிலங்களுக்காக போராடும் தமிழினத்தின் சனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்துமே கட்டுக்குள்ளாகும் பாரிய ஆபத்து உள்ளது. இதனை விடவும் நாட்டின் அன்றாட நிலைமைகள் ஒருவிதமான பதற்றத்துடனே இருக்கும் நிலைமைகளே ஏற்படும். தொழிற்சங்க போராட்டம் முதல் தனி நபரின் கோரிக்கைகளையே முழுமையாக கட்டப்படுத்தும் வல்லமை இந்த சட்டத்திற்கு காணப்படுகின்றது.

மேலும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் மரண தண்டனை உள்வாங்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் தனை சட்டமாக்குவதென்றால் சர்வசன வாக்கெடுப்பு அவசியமாகும். இந்த விடயத்தினை உயர்நீதிமன்றம் குறித்த சட்டம் மீதான வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருக்கும். ஆகவே அச்சட்டம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்போது அந்த விடயம் முக்கியமானதாக கருதப்படும். ஆகவே அவசாரகால சட்டமும், பயங்கரவாத தடைச்சட்டமும் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் அமுலாக்கப்படுவது தமிழர்களை மேலும் நெருக்கடியான கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு சூழலையே உருவாக்கும்.

கேள்வி:- ஒருவர் வெளிநாடு சென்று பயிற்சி பெற்றாலோ பயங்கரவாத தொடர்புகளைப் பேணிவந்தாலோ அவரை கைது செய்வதற்கு போதுமான சட்ட ஏற்பாடுகள் நாட்டில் போதுமானதாக இல்லையென பிரதமர் ரணில் கூறியிருக்கின்றாரே?

பதில்:- உண்மையிலேயே அது சட்டங்கள் பற்றிய அறியாமையின் வெளிப்பாடாகும். அவசரகால சட்டம் அமுலில் இல்லாது விட்டாலும், பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இல்லாது விட்டாலும், பொதுச்சட்டத்தின் கீழ் உள்ள குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் 120, 121 ஆம் பிரிவுகளின் அடிப்படையில் அரசுக்கு எதிராக எத்தகைய நபர்கள் குற்றம் புரிந்தாலும் அவர்கள் மீது விசாரணைகளை, வழக்குகளை தாக்கல் செய்து தண்டனை வழங்க முடியும்.

இதனை விடவும், குண்டுத்தாக்குதல் பற்றிய தகவல்கள் முன்கூட்டியே அறியப்பட்டள்ளதாகவும் அதனை தெரிந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. குண்டுத்தாக்குதல்கள் சம்பந்தமாக ஒருவர் மீது ஒருவர் விரல் சுட்டும் நிலமையில் பொறுப்புக்கூறுபவர் யார் என்பதும் வினாவாகின்றது.

குறிப்பாக, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட முக்கிய தரப்புக்கள் அறிந்துள் ளதாக கூறப்படுகின்றது. குற்றவியல் தண்டனைக்கோவைச் சட்டத்தின் கீழ் நட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தில் தகவல்களை அறிந்து கொண்டு மௌனம் காப்பதும் குற்றமாகும்.அதனடிப்படையில் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அதே போன்று தேசிய பாதுகாப்பு சார்ந்த விடயத்தில் தமது கடமையை சரியாக செய்யவில்லை என்ற அடிப்படையிலும் அத்துறை சார்ந்தவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கும் குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளன.

ஏத்தகைய சவால்கள் வந்தாலும் சனநாயக கடமைகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கம் போவதில்லை – கிரிசாந்தன்

அண்மையில் யாழ் பல்கலைக்களத்தினுள் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்,கைதுகள் தொடரிப்பில் யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் இராஜரட்ணம் கிரிசாந்தன் அவர்கள் இலக்கு இதழுக்காக வழங்கிய நேர்காணல்:

கேள்வி:- யுத்தம் நிறைவடைந்து பத்தாண்டுகளாகின்ற நிலையில் இராணுவத்தினர் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன்?

பதில்:- யுத்தகாலத்திலும் சரி, அதற்கு பின்னரும் சரி இராணுவத்தினர் பல்கலைக்கழத்தினுள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. மாணவர்களும் அதனை விரும்பியிருக்கவுமில்லை. அப்படியிருக்க, ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னர் நாட்டில் அசாதாரண சூழலொன்று உருவெடுத்தது. இக்காலத்தில் யாழ்.பல்கலைக்கழகமும் குண்டுதாரிகளின் இலக்கிற்கு உள்ளாகலாம் என்று அச்சமும் காணப்பட்டது.

அதேநேரம் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் சோதனையிட்டு மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவும் பாதுகாப்புத்தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இதற்கு பல்கலைக்கழக நிருவாகமும் அனுமதி அளித்திருந்த நிலையில் ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகத்தின் நலனைக் கருத்திற்கொண்டு மாணவர்களாகிய நாமும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தோம். DSC 0141 ஏத்தகைய சவால்கள் வந்தாலும் சனநாயக கடமைகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கம் போவதில்லை - கிரிசாந்தன்

கேள்வி:- சோதனை இடுவதற்காக வருகை தந்திருந்த இராணுவம் ஒளிப்படம் வைத்திருந்ததாக காரணம் காட்டி இரு மாணவர்களை கைது செய்வதற்கு ஏன் விளைந்தது?

பதில்:- பல்கலைக்கழகத்தினுள் சோதனைகளைச் செய்து குண்டுத்தாக்குதல் சம்பந்தமான அச்சநிலையை போக்கி பாதுகாப்பினை உறுதி செய்வது உள்நுழைந்திருந்த இராணு வத்தின் நோக்கமாக இருந்தது. இந்த நோக்கத்தில் வந்திருந்த இராணுவம் தமிழீழ தேசிய தலைவரின் ஒளிப்படம் இருப்பதையும், மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலையில் மருத்துவ பீட பழைய மாணவரான தியாக தீபம் திலீபனின் ஒளிப்படம் இருப்பதையும் காரணம் காட்டி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகியோரையும் சிற்றுண்டிச்சாலை ஊழியரையும் கைது செய்தனர்.

உண்மையிலேயே இன விடுதலைக்கான போராட்டத்தில் தலைமையேற்று நடத்தியவர் என்ற அடிப்படையிலும் தேசத்தின் விடுதலைக்காக ஆறு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன்னுயிரை தியாகம் செய்த முன்னாள் பல்கலை மாணவன் என்ற அடிப்படையிலும் அந்த ஒளிப்படங்கள் பல ஆண்டுகளாக காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக வந்த இராணுவம் தனது நோக்கத்தினை மாற்றி பயங்கரவாத தடைச்சட்டமும், அவசரகால சட்டமும் நடை முறையில் இருப்பதை தமக்கு சாதகமாக்கி ஒளிப்படம் இருப்பதை காரணம் காட்டி மாணவர்களை கைது செய்தது.

நீண்டகாலமாக இருக்கும் ஒளிப்படங்களுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர்களை இராணுவம் தருணம் பார்த்து கைது செய்தமையானது கவலையளிப்பதோடு இராணுவத்தின் முகத்திரையை கிழித்து உண்மையான தோற்றத்தினை உலகறியச் செய்துள்ளது. இதற்கு நாம் கடுமையான கண்டனத்தினை வெளியிடுகின்றோம்.

கேள்வி:- இராணுவம் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து திட்டமிட்டு செயற்படுகின்றது என்று கருதுகின்றீர்களா?

பதில்:- இராணுவத்தின் ஆழ்மனது சிந்தனை பல்கலைக்கழக மாணவர்களை அடக்குவதாகத்தான் இருக்கின்றது. யாழ்.பல்கலைக்கழகம் என்பது வெறுமனே கற்கைகளை வழங்கும் ஒரு ஸ்தாபனம் மட்டுமல்ல. தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டத்தில் ஆரம்பம் முதல் தற்போது வரையில் பின்னிப்பிணைந்துள்ளது.

ஆகவே யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தினர் என்றுமே கழுகுப்பார்வையுடன்தான் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் போர் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காவும், உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் முன்னெடுக்கப்பட்ட சனநாயக போராட்டங்களில் முன்னின்று உழைத்தார்கள். அதிலும் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ் மக்களின் கோரிக்கைகள் மலினப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டங்களில் பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு கணிசமாக இருந்தது.

மிகமுக்கியமாக ஐ.நா.வில் இலங்கையின் பொறுப்புக்கூறலை செய்வதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டபோது அதனை மிகக் கடுமையாக பல்கலை சமூகம் எதிர்த்ததோடு சர்வதேசம் வரையில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான நடவடிக்கையில் நேரடியாகவே பங்கேற்றிருந்தது.

இதுமட்டுமன்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேடையில் அரசியல் பிளவுகள் ஏற்பட்டபோது பல்கலைக்கழக மாணவர்கள் உயிர்களை ஆஃகுதியாக்கியவர்களுக்காக உணர்வுடன் நினைவேந்தலைச் செய்வதற்கான கடந்த ஆண்டு முன்வந்திருந்ததோடு இந்த ஆண்டும் அதற்குரிய செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.D1wqEpbWoAAoq0Q ஏத்தகைய சவால்கள் வந்தாலும் சனநாயக கடமைகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கம் போவதில்லை - கிரிசாந்தன்

அதுமட்டுமன்றி உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு நிகழ்ந்த மறுதினமே பல்கலையில் நினைவஞ்சலியை நாம் செய்திருந்தோம். ஆகவே இதுபோன்ற பல விடயங்களில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சமூகத்தின் பங்குதாரர்களாக முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றமையை ஆட்சியாளர்கள் விரும்பவில்லைபோலும். ஆகவே தற்போதைய தருணத்தில் இராணுவத்தினை பயன்படுத்தி பல்கலை மாணவர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்து அச்சுறுத்தி வைத்து விடலாம் என்று கருதுகின்றார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.

கேள்வி:- கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை தொடர்பில் சனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? அதில் முன்னேற்றங்கள் காணப்படுகின்றவா?

பதில்:- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையால் அவர்களை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் அவசியமாகின்றது. அந்த ஒப்புதல் கிடைக்காத நிலையில்த்தான் அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில்த் தான் சனாதிபதியுடன் பேச்சுக்களை நடத்துவதற்காக 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கொழும்புக்குச் சென்றிருந்தோம்.

சனாதிபதிக்கு அவசர அலுவல்கள் காரணமாக கண்டிக்குச் செல்ல வேண்டியேற்பட்டுள்ளதால் அவரை நேரில் சந்தித்திருக்க முடியவில்லை.
இருப்பினும் சனாதிபதியின் செயலாளர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தோம். அவர்களுக்கு ஒளிப்படம் மற்றும் இராணுவத்தின் செயற்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தோம். அவர்களும் அந்தவிடயம் பொருத்தமற்ற செயற்பாடு என்பதை ஏற்றுக்கொண்டதோடு சட்டமா அதிபர் புதிதாக பதவி ஏற்றுள்ள நிலையில் 13ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கின்றார். அன்றைய தினமே இவ்விடயம் சம்பந்தமாக சாதகமான முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்துள்ளனர்.

கேள்வி:- மாணவர்களின் கைது அடுத்து நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் மக்களின் நீதிக்கான போராட்டத்திலும் ஒட்டுமொத்த பல்கலை மாணவர்களின் பங்களிப்பினை வலுவிழக்கச் செய்துவிடுமா?

பதில்:- நாம் மக்களின் நியாயமான நீதிக்கான கோரிக்கைகளுக்கும், உயிர் நீத்தவர்களுக்காகவுந்தான் குரல் கொடுத்து வருகின்றோம். இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுக்குழுவில் எமது அங்கத்துவமும் இருக்கின்றது. அந்த அடிப்படையில் நாம் முழுமையான பங்குதாரர்களாக இருப்போம். அதில் எவ்விதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. மாணவர்களின் கைது இடம்பெற்றவுடனேயே அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் என்றே வலியுறுத்தினார்கள்.

இருப்பினும் பதற்றமான நிலைமையை தோற்றுவிக்க விரும்பவில்லை. சட்டங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதால் அதனைக்கூட சட்ட ரீதியாக அணுக வேண்டும் என்ற மனநிலையில் பொறுமை காத்து வருகின்றோம். மாணவர்களின் விடுதலைக்காக அரசியல் பேதமின்றி பலதரப்பினரும் முன்வந்துள்ளனர். அவர்களுக்கு எமது நன்றிகளை கூறுவதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதில் பின்னடிப்புக்களைச் செய்தாலோ அல்லது எதிர்காலத்தில் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்தாலோ நாம் கைகட்டி வேடிக்கை பார்க்கப்போவதில்லை.

அரசாங்கத்துடன் மல்லுக்கட்ட வேண்டும் என நாம் சிந்திக்கவில்லை. ஆனால் மாணவர்களின் சக்தி மாபெரும் சக்தி என்பதையும் உணரச்செய்வதோடு ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமும், எமது மக்களும் நிச்சயமாக சனநாயக ரீதியில் வீதிக்கு இறங்குவதில் பின்னிற்கப் போவதில்லை. இதற்கு அனைத்து தரப்பினரதும் ஆதரவும் கிடைக்கும் என்ற பெருநம்பிக்கையும் எமக்குள்ளது. தற்போது மாணவர்களின் விடுதலைக்காக நாம் செல்லும் சுமுகமான பயணம் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஒருவேளை அதில் தோல்வியைச் சந்தித்தால் அவர்களின் விடுதலைக்கான குரல் ஓங்கி ஒலிக்கும். அதேநேரம் சனநாயக போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுவோம். அச்சமயத்தில் நாம் பின்னிற்கப்போவதில்லை என்பதையும் கூறி வைக்க விரும்புகின்றோம்

முஸ்லீம் தலைவர்களின் அழுத்தத்திற்கு பணிந்தது சிறீலங்கா அரசு – கண்டதும் சுட உத்தரவு

இன்று (13) மாலை சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் அவசரமாக இடம்பெற்ற பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரிஷாட் பத்தியூன் வன்முறையில் ஈடுபடும் பெரும்பான்மை இனத்தவரை கண்டதும் சுட வேண்டும் என மீண்டும் மீண்டும் உரத்த குரலில் சத்தமிட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அச்சமடைந்த சிறீலங்கா பிரதமர் கண்டதும் சுடுவதற்கான உத்தரவை தான் பிறப்பிப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் சிறீலங்கா இராணுவத் தளபதிக்கு கட்டதும் சுடும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் குருநாகல் மாவட்டத்தில் தற்போது வன்செயல்கள் உக்கிரமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

kurunagal முஸ்லீம் தலைவர்களின் அழுத்தத்திற்கு பணிந்தது சிறீலங்கா அரசு - கண்டதும் சுட உத்தரவுபல்வேறு இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் 6 பள்ளிவாசல்கள் உட்பட முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான பல வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெட்டிபொலவில் முஸ்லீம் மக்களின் சொத்துக்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்று முன்னர் மினுவாங்கொடையிலும் முஸ்லீம் இனத்தவரை சிங்கள இனத்தவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

வன்முறையில் ஈடுபடும் சிங்கள இனத்தவர்களை தடுக்காது சிறீலங்கா காவல்துறையினரும், இராணுவத்தினரும் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தென்னிலங்கையின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்திருந்த சிறீலங்கா அரசு தற்போது நாடு முழுவதும் இரவு 9 மணியில் இருந்து காலை 4 மணிவரையிலும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது நாட்டின் பாதுகாப்பு முற்றாக சீர்குலைவு நிலைக்குச் சென்றுள்ளதை இது காண்பிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா வெளிநாட்டுப் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளதால் சிறீலங்காவில் தாக்குதல் நடைபெறலாம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சிறீலங்கா அரசு நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புச் சபை கூட்டத்தின் பின்னர் பேசிய ரணில் விக்கிரம சிங்கா வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்றால் நாட்டின் உறுதித்தன்மை பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் வட மேற்கு மகாணங்களில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சற்று முன்னர் அவர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

kurunagal3 முஸ்லீம் தலைவர்களின் அழுத்தத்திற்கு பணிந்தது சிறீலங்கா அரசு - கண்டதும் சுட உத்தரவுபயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பாதுகாப்பு படையினரின் கவனத்தை திசை திருப்பவே இந்த வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த முற்படுகின்றனர். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய அதிகாரங்களை நாம் படையினருக்கு வழங்கியுள்ளோம்.

தற்போதைய வன்முறைகள் வெசாக் பண்டிகையை பாதிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலிருந்து ஒரு பகிரங்க அறைகூவல் – கணிதன்-

தமிழ்த் தேசிய இனத்தின் விடிவிற்கான உரிமைக்குரல் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் ஒரு கட்டமைப்புசார் இனப்படுகொலையுடன் தமிழர்களின் நியாயமான ஆயுத போராட்டம் மே 18 இல் மௌனிக்கச் செய்யப்பட்டது.

27 சர்வதேச நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் சிறீலங்காவின் ஆட்சியாளர்களுடன் கை கோர்த்து இனப்படுகொலை அரங்கேற்றத்திற்கு அச்சாணியாக இருந்தன. இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டு பத்தாண்டுகளாகிவிட்டன. ஆனால் இன்றும் கட்டமைப்பு சார் இனவழிப்பு செவ்வனே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழனம் எழுபது ஆண்டுகளாக போராடுகின்றது. சனநாயக ரீதியில், ஆயுத ரீதியில் என்பதையெல்லாம் கடந்தே வந்திருக்கின்றது.

2009ஆம் ஆண்டு மே 18 மௌனிப்புக்கு பின்னர் எம் தமிழினத்தின் விடுதலையை தன் தோளில் சுமக்கும் பொறுப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எடுத்தது.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் நாங்களே என்று சிங்கள பெருந்தேசியவாதிகளின் முன்னிலையில் மார்பு தட்டினீர்கள். வெளிநாடுகள் உட்பட எங்கு சென்றாலும் உங்கள் மீது தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற முத்திரையையே பதித்தீர்கள். அதுமட்டுமா, 2009 இலிருந்து 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 பாராளுமன்ற தேர்தல் வரையில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழ் மக்களிடத்தில் இன்னுயிர்களை ஈகம் செய்தவர்களையும், உறவுகளைத் தொலைத்தவர்களையும், சிறையில் வாடிக்கொண்டிருப்பவர்களையும் பிரதானப்படுத்தி ஆணை கேட்டீர்கள். பாதிக்கப்பட்ட நாமும் பெரும் நம்பிக்கையில் பெருவாரியாக வாக்குகளை அள்ளி வழங்கினோம்.

எமது நியாயமான கோரிக்கைளையும், உரிமைகளையும் பெற்றுக்கொடுத்து அபிலாசைகளை பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் ஏகப்பிரதிநிதித்துவ அந்தஸ்து வழங்கிய கூட்டமைப்பினரான நீங்கள் அல்லவா இதற்கான அனைத்துப் பொறுப்பினை ஏற்க வேண்டும். தற்போது உறவுகள் மறக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு மன கிலேச்சத்துடன் அன்றாட பொழுதை நகர்த்த வேண்டிய மிக மோசமான நிலைக்குள் அல்லவா நாம் இருக்கின்றோம். ஆனால் தெற்காசியாவின் சாணக்கியன் என்று பெயர் பூத்திருக்கும் சிரேஸ்ட தலைவர் சம்பந்தன் ஐயா எமது நலன்களை மறந்து அரசாங்கத்துடன் தேனிலவு அல்லவா கொண்டாடிக்கொண்டிருக்கின்றார். 003 16263 முள்ளிவாய்க்காலிருந்து ஒரு பகிரங்க அறைகூவல் - கணிதன்-

இத்தனை காலம் சென்றும் தென்னிலங்கையை நம்பிக்கொண்டிருக்கும் உங்களின் பெரும் தன்மையை என்னவென்று சொல்வது. அன்று, முள்ளிவாய்க்கால் எனும் ஒரு குறுகிய நிலப்பரப்பில் வன்னி மாவட்ட மக்களாகிய நாம் முடக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நன்கறிந்திருந்த ஐயா சம்பந்தரும் அவருடைய பரிவாரங்களும் எம்மை விடுவிக்கும்படி ஒரு உரத்த குரலை உங்களால் முன்வைக்க முடியாமல் போனதேனோ?

முள்ளிவாய்க்காலில் விதையாகிப்போன தேசிய இன விடுதலையை நேசித்த ஒவ்வொரு ஜீவனினதும் ஏக்கங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உள்ளிட்ட ஒவ்வொரு பிரதிநிதியினதும் மனச்சாட்சியை தட்டவில்லையா?

யுத்தம் என்ற பெயரில் எம்மீது நடாத்தப்பட்ட கொடூரத்தாக்குதல்கள் முடிவிற்கு வந்ததன் பின்னர் நாம் அனைவரும் வவுனியா மெனிக்பாம் திறந்தவெளி சிறைச்சாலைக்கு வந்தபொழுது அரசாங்கம் எங்களைப் பார்ப்பதற்கு உங்களுக்கு அனுமதி மறுத்திருந்தது.

எங்களை திறந்தவெளி சிறைச்சாலையில் வைத்திருந்து சனாதிபதித் தேர்தலையும், 2010ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலையும் அரசாங்கம் நடத்தியிருந்தது. அப்பொழுதும் நாங்கள் எங்களின் உயிர்களைத் துச்சம் என நினைத்து நீங்கள் கைகாட்டிய சனாதிபதி வேட்பாளருக்கும், நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கும் வாக்களித்தோம். சம்பந்தன் ஐயா அவர்களே, பொதுத்தேர்தல் முடிந்த பின்னர், மீள்குடியேற்றம் ஆரம்பித்திருந்த வேளையில், அப்பொழுதுதான் மீள்குடியேறியிருந்த எங்களை நீங்களும் உங்களது நாடாளுமன்ற குழுவினரும் எங்களை வந்து எமது இடங்களில் சந்தித்தீர்கள்.

மீள்குடியேற்றம் என்ற பெயரில் நாங்கள் எப்படி ஒரு வெட்டவெளி காணியிலும் புல்மண்டியிருந்த பற்றைகளிலும் இரவோடு இரவாக இறக்கிவிடப்பட்டிருந்தோம் என்பதை நீங்கள் நேரில் கண்டறிந்தீர்கள்.இடிந்த பாடசாலை கட்டிடங்களையும், மரங்களின் கிளைகளில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஏணைகளையும் கண்டு உங்கள் குழுவினர் கலங்கி நின்றதையும் நாங்கள் அவதானித்தோம். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை எடுத்துச் சொன்னதை நீங்களும் குறிப்பெடுத்துக் கொண்டீர்களே நினைவிருக்கா உங்களுக்கு?ஆண் துணையின்றி கொடுத்த தகரங்களையும், இரும்புக் கம்பிகளையும் கொண்டு தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளை மரக்கிளைகளில் கட்டிய ஏணையில் கிடத்தி பெண்கள் ஒன்று திரண்டு கொட்டில்கள் அமைத்ததைக் கண்ணுற்றபோதும் உங்களது இதயங்கள் வலிக்கவில்லையா?

எவ்வளவு பேர் தங்களது இன்னுறவுகளைக் காணவில்லை என்று உங்களிடம் ஓலமிட்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் இவ்வளவுபேர் இறந்துள்ளனர் என்றும் இவ்வளவு பெண்கள் கணவனை இழந்துள்ளனர் என்றும் எத்தனைபேர் உங்களிடம் புள்ளி விபரம் வழங்கினர். நீங்கள் எடுத்த நடவடிக்கையை வெளிப்படுத்துவீர்களா? எத்தனை பாடசாலை அதிபர்கள் உங்களிடம் இந்தப் பாடசாலையில் குறைந்த பட்சம் இத்தனை மாணவர்கள் இறந்துள்ளனர் என்று முறையிட்டிருப்பர்? அவற்றை நீங்கள் கணக்கெடுத்ததுண்டா?

மக்கள் தெரிவித்த கருத்துக்களையும் வேதனைகளையும் செவிமடுத்து மீண்டும் வந்து ஆவணப்படுத்துவதற்கான தரவுகளைப் பெற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்தீர்களே இன்றுவரை அதனைச் செய்யாததன் காரணமென்ன? இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பினரும், தொல்பொருள் திணைக்களத்தினரும், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களமும், வனப்பாதுகாப்பு திணைக்களமும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையும் கையகப்படுத்திய காணிகளின் மொத்த அளவும் மக்கள் போராட்டத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவும் எஞ்சிய காணிகளின் அளவும் உங்களிடம் இருக்கிறதா?

வடக்கு-கிழக்கின் நிலத்தொடர்பை நிரந்தரமாகப் பிரித்து, எமது வாழிடங்களிலேயே எம்மை இரண்டாந்தரக் குடிகளாக மாற்றும் நோக்கில் வலிந்து சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் அரசின் சூழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தீர்களா? உங்களால் புதிதாக அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவர்களுக்கு எம்மினம் பட்ட துன்பங்களை எடுத்துரைத்து அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினீர்களா? எமது விடுதலைப் போராட்டம் பற்றியும் நாம் கடந்துவந்த பாதை பற்றியும் கொஞ்சமாவது அவர்களுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் நீங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டியிருப்பார்களா?எமது உறவுகள் தெரிவித்த கருத்துக்களை வைத்து அறிக்கை தயாரித்து இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் கொடுத்திருந்தீர்கள். அதன் தொடர்ச்சியாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிடுவீர்களா?

கிடைத்தற்கரிய துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி இராஜதந்திர அணுகுமுறையை மேற்கொண்டு எம்மினத்தின் விடுதலையை வென்றெடுப்பீர்கள் என்பதற்காகத்தானே நீங்கள் மூடிமறைத்த விடயங்களையும் திரைமறைவில் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் சகித்துக்கொண்டோம்.உங்களது அணுகுமுறை தற்போது சர்வதேச உதவிகளையும் கேள்விக்குட்படுத்திவிட்டதே. அரசாங்கத்துடன் ஒத்தூதி சகல தென்னிலங்கை ஆளும் வர்க்கத்தினரையும் காப்பாற்றிவிட்டீர்கள். அடுத்தநொடியே உங்களுக்கே பிரதிபலன் கிடைத்தாகிவிட்டது. இப்படியிருக்க எம் விடுதலை வேட்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கருதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பத்தாவது ஆண்டு வருகிறது.

உறவுகளை நினைவு கூருவதை யாரும் தடுக்கமுடியாது என்று அறிக்கை விடுவீர்களா? இல்லை அடுத்து தேர்தல்கள் என்பதால் நீங்களே முள்ளிவாய்க்கால் திடலுக்கு நேரில் வருவீர்களா என்று தெரியவில்லை. அது உங்களின் இராசதந்திரம்.

இப்போது வரையில் நாங்கள் நம்பிக்கெட்டவர்களே! உங்களின் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்து விட்டன. தீவிரவாதத்தின் பேரால் எமது உரிமைப்போராட்டமே முற்றாக முடங்கும் அபாய நிலையில் இருக்கின்றோம். ஆகவே உங்கள் தலைமையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் எந்தவொரு நபரும் புனிதம் நிறைந்த முள்ளிவாய்க்கால் திடலில் காலடி பதிப்பதை தவிர்ப்பதே சிறந்தது. அரசியலுக்காக நீலிக்கண்ணீர் வடியுங்கள். ஆனால் ஆஃகுதியானவர்களின் நெஞ்சில் ஏறி நின்று உங்கள் நாடகத்தினை அரங்கேற்றாதீர்கள் என்பதே எமது தயவான கோரிக்கை. ஆகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ‘நினைவேந்தல் நிகழ்வு’ என்ற கோட்பாட்டில் நடைபெறுவதற்கு வழிசமைத்து ஒதுங்கிவிடுவதே சாலச்சிறந்தது

பெற்றால் தான் அன்னையா ? – தீபச்செல்வன்-

உலகின் தலைசிறந்த போராளிகள் அதிகமும் சூரியனுக்கும் புயலுக்கும் நெருப் பிற்கும் தான் அதிகம் ஒப்பிடப்படுகின்றனர். ஈழத்தின் சூரியனாய், ஈழத்தின் புயலாய், ஈழத்தின் நெருப்பாய் ஒப்பிடப்படுகின்ற தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், மனிதப் பிறப்பில் உன்னதமாக மதிக்கப்படும் தாய்மைக்கும் ஒப்பிடப்படுகின்றமைதான் தனிச்சிறப்பானது. தாயைப் போன்ற தலைவன் என்ற ஈரமான முகத்தை, அரவணைப்பை, அன்பை எங்கள் ஈழ மண் முழுதாய் அனுபவித்திருக்கிறது. அதுவே தலைவர் பிரபாகரன் உலகின் தலைசிறந்த போராளி, இதுவரை உலகம் கண்டிராத ஒப்பற்ற போராளி என்பதை சொல்கிற வரலாற்று உண்மை.

தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகின் வீரம் செறிந்த ஒரு போராட்டம். தலைவர் பிரபாகரன், தமிழீழத்தின் அத்தனை படைக்கட்டுமானங்களையும் உருவாக்கி, உலகத்தின் கவனத்தையே ஈர்த்த தலைவர். தமிழர்களின் வரலாற்றில் சோழ மன்னன், தனது வீரத்தால் அழியாத சரித்திரத்தை எழுதிச் சென்றான். அதன் பின்னர் தலைவர் பிரபாகரன் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வழியாக முன்னெடுத்த போர் மரபுகளும் நிலக் கட்டுமானங்களும் புதியதொரு வீர வரலாற்றையும் நிர்வாகத் திறனையும் எழுதியுள்ளமை இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனையாகும்.

சிறந்ததொரு தலைவன், வீரமான தலைவனின் ஈரமான பக்கங்கள்தான், அவரை தாயைப் போன்ற தலைவன் என்று உலகத் தமிழினத்தால் மெச்ச வைக்கின்றது. தமிழர்களின் தலைசிறந்த தலைவனாக, எமது உரிமையையும் நிலத்தையும் வென்றெடுப்பதில் கொண்டிருந்த வீரத்திற்கு நிகராக ஈழ நிலத்தின் ஒவ்வொரு உயிர்களையும் ஒரு தாயைப் போல தலைவர் நேசித்தார். ஒரு தாயைப் போல தலைவர் காத்து நின்றார். அன்னையர் தின நாட்களில் அன்னை போலான எம் தலைவரின் பக்கங்களை பேசுவது, இன்றும் எமது மண்ணை எப்படி நாம் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தான் வலியுறுத்துகிறது, அல்லது

photo7 1 பெற்றால் தான் அன்னையா ? - தீபச்செல்வன்-
National Leader with children

வழிகாட்டுகிறது.

இன்று ஈழத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு பெருங்கேள்விக் குறியாகிவிட்டது. சிறுவர் இல்லங்கள் என்ற பெயரில் பணம் பறிப்புக்கள் நிறையவே நடக்கின்றன. பேருந்துகளில் குழந்தைகள் பிச்சை எடுக்கின்றனர். ஊது பத்தி விற்கும், கடலை மா பொதிகளை விற்கும் குழந்தைகளை தினமும் வீதிகளில் காண்கிறோம். அவர்களுக்கு சரியான கல்வி இல்லை. அவர்கள் சிறுவர் தொழிலாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருள் சுமக்கும் தொழிலாளியாக, அதற்கு அடிமையாகும் குழந்தைகளாக இன்றைய ஈழத்தின் தலைமுறை மாற்றப்பட்டுள்ளது. மிகக் கடுமையான போர் காலத்தில் – தமிழீழ காலத்தில் இந்த நிலையில்லை.
தலைவர் அவர்களினால் உருவாக்கப்பட்ட செஞ்சோலை அமைப்பு, ஆதரவற்ற குழந்தைகளின் இல்லமானது. குழந்தைகளின் மகிழ்ச்சியான பாதுகாப்பான வீடாக அமைந்த செஞ்சோலை, போரினாலும், சமூகப் பிரச்சினைகளாலும் அனாதரவாக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்தது.

தமிழீழக் காலத்தில் தெருக்களில் ஆதரவற்ற குழந்தைகளைக் காண முடியாது. பிச்சை எடுக்கும் குழந்தைகளைக் காண முடியாது. தமிழீழ நிலத்தில் எந்தவொரு குழந்தைகளும் அல்லல்படக்கூடாது என்ற பெருந்தாயுள்ளத்துடன் செஞ்சோலை உருவாக்கப்பட்டது.தலைவர் பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கிய செஞ்சோலைக் குழந்தைகள் பேரன்பு கொண்ட தாய்மையால் வளர்த்து ஆளாக்கப்பட்டனர். இவ்வாறு ஆளாக்கப்பட்ட பலரும் இன்று மிகப் பெரிய இடத்தில் உள்ளனர். தலைவரால் வளர்க்கப்பட்ட அந்தக் குழந்தைகள், எமது தலைவனின் தாயுள்ளத்திற்கு சாட்சிகளாக இன்றும் வாழ்கின்றனர். அவர்களுக்கு கல்வி, திருமண வாழ்க்கை என யாவும் சிறப்பாக அமைத்துக் கொடுக்கப்பட்டது.

பலர் பல்கலைக்கழகம் சென்று இன்று நல்ல தொழில் நிலைகளில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். செஞ்சோலை மாத்திரமின்றி, காந்தரூபன் அறிவுச்சோலை, குருகுலம், பாரதி இல்லம் என இல்லங்களை அமைத்து குழந்தைகள் காக்கப்பட்டனர்.

போராளித் தலைவன், போரில் மாத்திரமே கவனம் செலுத்துவார் என்ற பொது அபிப்ராயத்தை மாற்றிய பெருமை தலைவருக்கு உண்டு. ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாத்திரமல்ல, ஆதரவற்ற தாய், தந்தையருக்குமான தமிழீழ முதியோர் இல்லங்களை தலைவர் அமைத்தார். மதிவதனி பிரபாகரன் அவர்கள், ஈழத்தின் மிகச் சிறந்த முதியோர் இல்லத்தை கிளிநொச்சியில் திறந்து வைத்த அந்த நாட்களை எவரும் மறந்துவிட முடியாது. தன் குழந்தைகளைக் காட்டிலும், தன் பெற்றோரைக் காட்டிலும் இந்த மண்ணின் குழந்தைகளையும் முதியவர்களையும் நேசித்தவர் தலைவர் என்பதை சிங்கள தலைவர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.1534240628 பெற்றால் தான் அன்னையா ? - தீபச்செல்வன்-

இனப்படுகொலையாளி சரத்பொன்சேகாவும், இனவாதி ஞானசார தேரரும்கூட பிரபாகரன் அவர்கள் சிறந்த தலைவர் என்றும் அவர் தன்னுடைய மக்களுக்கு சிறந்த தலைவராக வாழ்ந்தார் என்றும் அப்படி சிங்களத் தலைவர்கள் எவருமில்லை என்று கூறியதும் இங்கே சுட்டிக்காட்ட தக்கது. எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத தலைவன், எமது தலைவர். அதனால்தான் இன்றும் செஞ்சோலை என்ற பெயரை சிங்கள அரசால் மாற்ற முடியாதுள்ளது. இன்றும் செஞ்சோலை இலங்கை அரசினால் இயக்கப்பட்டாலும், அந்தப் பெயர் பலகையுடன் பள்ளி செல்லும் பேருந்தை காண்கையில் தலைவரின் நினைவு எவருக்கும் வரும்.

அண்மையில் ஒரு முன்னாள் போராளி அண்ணா, ஒருவர் பேசிக் கொண்டிருந்தபோது, தலைவர் தன்னை பிள்ளை என்றுதான் அழைப்பார் என்றார். “என்ட பிள்ளை“ என்றழைக்கும் எங்கள் தாயுமானவர், தந்தையுமானவர் என்று அந்த நாட்களை நினைவுகூர்ந்தார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் போரில் பங்குபற்றிய சிங்கள இராணுவத்தினன் ஒருவன், வெற்றிக் பிறகு, மீன் சந்தையில் மீன் வெட்டி பிழைப்பு நடத்துவதாக ஒரு செய்தி இணையங்களை அலங்கரித்தது. தலைவர் பிரபாகரன், போராளிகளுக்கும் அவர்களின்