Home Blog Page 2779

யாழ் நூலக எரிப்பு ஈழத் தமிழினத்தின் மீதான அறிவழிப்பு – தீபச்செல்வன

ஈழத் தமிழ் இனம், அறிவாலும் ஆற்றலாலும் உலகறியப்பட்ட இனம். இதுவே ஈழத் தமிழ் மக்களின் உரிமை பறிப்புக்கும், அவர்களை இரண்டாம் தரப் பிரசைகளாக அடிமை கொள்ள வேண்டும் என்ற பேரினவாத ஆதிக்கத்திற்கும் காரணமாகும். இலங்கை இன ஒடுக்குமுறை வரலாற்றில், 1983 யூலைப் படுகொலை மிகப் பெரும் முன் ஈழ இன அழிப்பாக கருதப்படுகின்றது. அதைப்போலவே, 1981 ஆம் ஆண்டு யாழ் நூலக அழிப்பும் ஈழத் தமிழ் இனத்தின் அறிவு மீதான மாபெரும் இன அழிப்பு.

யாழ் நூலகம் ஆசியாவிலேயே புகழ்பெற்ற நூலகம். அங்கு உலகின் அரிய புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், சாஸ்திரங்கள் என பலவகைப்பட்ட பொக்கிசங்கள் இருந்தன. ஈழத்தின் பழம்பெரும் நூல்கள், தமிழின் கிடைத்தற்கரிய நூல்களை எல்லாம் கொண்டிருந்தது யாழ் நூலகம். சிறையில் சிக்கிய சிங்கள தலைவர்களை மீட்பற்கு பிரித்தானியா சென்ற ஈழத் தமிழ் தலைவர்கள், அறிவினால்தான் பிரித்தானிய அரசின் செல்வாக்குரியவர்களாக இருந்தனர்.

பிரித்தானிய இலங்கையில் அதிகம் அரச தொழிலில் இருந்தவர்களும் ஈழத் தமிழ் மக்களே. முதல் கட்டமாக தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டு, அவர்களின் வேலைகள் பறிக்கப்பட்டன. அத்துடன் இன மேலாதிக்க வெறி முடிந்துவிடவில்லை. அதன் பிறகு கல்வி தரப்படுத்தல் சட்டம். எல்லாவற்றையும் விஞ்சும் கொடூரமாக யாழ் நூலகம் எரியூட்டப்பட்டது. உலகில் பள்ளிக்கூடங்களையும் நூலகங்களையும் அழிக்கக்கூடியவர்கள் மிகவும் கொடூரமானவர்களாயிருப்பர். அவர்களிடம் சனநாயகம் இருப்பதில்லை. அவர்கள் மனித இனத்திற்கு எதிரான விலங்குகள்.

அத்தகைய கொடூரச் செயல்தான் யாழ் நூலக எரிப்பு. 1981ஆம் ஆண்டு யூன் 1ஆம் நாள். அதாவது மே 31 அன்று நள்ளிரவு யாழ் நூலகம்மீது தீயிடப்பட்டது. மே 1ஆம் திகதி வரையில் யாழ் நூலகம் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய தலைவர், ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசே இந்த பயங்கரவாதத்தை நிகழ்த்தியது. அன்று ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் நேரடியாக இவ் இன அறிவழிப்பில் களமிறங்கினர் என்பதற்கும் சிங்கள தலைவர்களே சாட்சி.

பிரித்தானியருடன் இத் தீவின் சுதந்திரத்திற்காக போராடிய இனத்தின் உரிமைகளை மறுத்து, அவர்களை ஒடுக்கியபோது, அவர்கள் தமது உரிமைகளை கோரி சனநாயகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதற்கு பதிலாக சிங்கள அரசு, ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. அவர்களின் சொத்துக்களை அழித்தது. இங்கே மாபெரும் அறிவுச் சொத்து 97 ஆயிரம் புத்தகங்களை அழித்தது. ஈழத் தமிழ் மனிதர்களுடன் மாத்திரம் இன வன்முறை செய்யப்படவில்லை. ஈழ நூலகங்களில் உள்ள புத்தகங்களுடனும் இன வன்முறைகள் புரியப்பட்டன.

யாழ் நூலக எரிப்பு ஈழத் தமிழ் மக்களில் நெஞ்சங்களில் ஆறாத வடுவாக பதிந்தது. மனிதர்கள் வெட்கி தலைகுனிகின்ற செயல் இதுவாகும். இன்றளவிலும் இலங்கை அரசு நிகழ்த்திய மாபெரும் குற்றமாக இது காணப்படுகின்றது. ஈழத் தமிழ் மக்களை மாத்திரமின்றி, உலக மக்களையே இது பாதித்த நிகழ்வு. புத்தகங்களுடன் இன வன்முறை செய்பவர்கள், மனிதர்களை என்ன செய்வார்கள் என்ற புரிதலை ஏற்படுத்தியது. சிங்களப் பேரினவாதிகள், தமிழர் நிலத்தில் உள்ள மரங்கள் முதல் பறவைகள் வரை அழிப்பதில் குறியாய் இருப்பவர்கள்.

யாழ் நூலக எரிப்பு என்பது, ஈழத் தமிழ் அறிவுச் சொத்தழிப்பாகவும், பண்பாட்டு அழிப்பாகவும் நிகழ்த்தப்பட்டது. ஈழத் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டதுடன் இவ் விரண்டு அழிப்பிலும் சிங்கள அரசு திட்டமிட்டு கவனம் செலுத்தியது. பிற்காலத்தில், தமிழீழ மண்மீது திட்டமிட்ட அழிப்புப் போரை தொடங்கியபோது, கிராமம் கிராமமாக நூலகங்களும் புத்தகங்களும் அழிக்கப்பட்டன. ஈழத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை வரை எத்தனையோ நூலகங்களில் அரிய அறிவுப் பொக்கிசங்கள் இருந்தன.

அவை எல்லாம் அழிக்கப்பட்டிருக்கின்றன. போர் நடவடிக்கைகளின் போது, வீடுகளில் இருந்த புத்தகங்கள் சிங்கள இராணுவத்தால் தீயிடப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்பட்ட இன அழிப்புப் போரில் நாம் எத்தனையோ அரிய புத்தகங்களை இழந்துவிட்டோம். அவ்வளவும் இன அழிப்பு செய்யப்பட்டன. போராட்ட காலத்தில் வன்னியில் எழுதப்பட்ட அத்தனை படைப்புக்களும் உருவாக்கப்பட்ட ஆவணங்களும் அழிக்கப்பட்டன. எத்தனையோ அரிய பத்திரிகைகளும், வெளியீடுகளும் வன்னியில் சேகரிக்கப்பட்டன. அவை யாவற்றின்மீதும் தீயை வைத்தது சிங்களம்.

யாழ் நூலகத்தின் சுவர்கள் மாத்திரம் சிங்களப் படைகளால் எரியூட்டப்படவில்லை. எத்தனையோ நூலகச் சுவர்கள் எரியூட்டப்பட்டன. எத்தனையோ கலாசார மரபுரிமை கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஒரு இனத்தின் அடையாளத்தை அழிப்பதால், ஒரு இனத்தின் கல்வியை அழிப்பதால், ஒரு இனத்தின் பண்பாட்டு மரபுரிமையை அழிப்பதால், அவர்களை அழித்து விடலாம் என்பது ஆக்கிரமிப்பாளர்களின் இன அழிப்பாளர்களின் கணிப்பு. அதையே சிங்களமும் செய்தது.

2009 போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ் நூலகத்திற்கு சுற்றுலா வந்த சிங்களப் பிரயாணிகள் நூலகத்தின் அலமாரிகளில் அடுக்கியிருந்த புத்தகங்களை இழுத்தெறிந்து வீசி தமது வெறுப்பை வெளிப்படுத்திய நிகழ்வு, ஊடகங்களில் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கிட்டத்தப்பட்ட 28 வருடங்களின் முன்னர் எமது நூலகத்தில் தீயை வைத்ததைப்போலவே இன்றும் தீயை வைக்கும் மனநிலையில் இன்னமும் வரும் பேரினவாதிகளை என்னவென்பது? இப்படியான மனநிலை இன்னமும் இருக்கிறது என்பது நமக்கு பல புரிதலை தர வேண்டும்.

அண்மையில், நான் எழுதிய நடுகல் நாவலை, எடுத்துச் சென்ற சகோதரி ஒருவர், இராணுவத்தின் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும், அதற்கு பெரும் விளக்கம் கொடுக்க நேரிட்டதாக சொன்னார். இப்போதும், எமது புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இப்போதும் எமது புத்தகங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து ஈழம் வரும் புத்தகங்கள் எல்லாம் விசாரணைகளின் பின்னரே கையளிக்கப்படுகின்றன. தமிழர் பூமி புத்தகம் இலங்கை வந்தபோது, அதன் அட்டைப்படம் குறித்த விசாரணைக்குச் சென்றிருந்தேன்.

எமது மண்ணின் தலைமுறைகள், எமது மண்ணின் மனிதர்கள் எமது புத்தகங்களையும் எமக்கு தேவையான புத்தகங்களையும் படிக்க கூடாது என்பதில் இராணுவமும் அரசும் தெளிவாக இருக்கிறது. இலங்கை அரசும், சிங்களப் பேரினவாதிகளும் சொல்லித் தரும் கதைகளையும் வரலாற்றையும் படிக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அல்லது அவர்களின் ஞானஸ்தானம் பெற்ற தமிழ் புலி எதிர்ப்பு படைப்பாளிகளின் நூல்களை படிக்கலாம். அன்று யாழ் நூலக எரிப்பு எமது போராட்டத்தை வலுப்படுத்தியது. புத்தகங்களைப் பெருக்கியது. நாம் சாம்பலாகிவிடாமல், புதிய பக்கங்கள் எழுதப்படுகின்றன. புதிய புத்தகங்கள் எழுதப்படுகின்றன. புதிய நூலகங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏனெனில், அறிவாலும் போராடி இவ் உலகை வெல்ல வேண்டும் என்ற தலைவர் பிரபாகரனின் சிந்தனை விதைக்கப்பட்ட மண் இது.

காணியை திட்டமிட்டே அபகரிக்கிறார்கள் போராட்டத்தை  கைவிடமாட்டேன்திருமலை(நேர்காணல்) – திருமதி. கோகிலறமணி

திருமலைதிருமதி. கோகிலறமணி இலக்கு மின்னிதழுக்கு  வழங்கிய  சிறப்பு நேர்காணல்

தமிழினத்தின் அடையாளங்களை அழிப்பதே பேரினவாதத்தின் பிரதான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகும். தமிழினம் தாயகத்தின் பாரம்பரியத்தினைக் கொண்ட இனம் என்ற வரலாற்று உண்மைகள், தடையங்களை அழிப்பதோடு பேரினவாத அடையாளமாக முன்னிறுத்துவதும் சிங்கள, பௌத்த மாற்று அடையாளங்களை இலங்கை தீவு எங்கும் நிறுவுதைக் கொண்ட நிகழ்ச்சி நிரலே போர் நிறைவடைந்து தற்போது பத்தாண்டுகளாகின்ற நிலையில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றது.

பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலில் கடந்த பத்து வருடங்களில் திருமலையில் திரிவுபடுத்தப்பட்ட வரலாற்றின் அடிப்படையில் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமாக பாழடைந்துவரும் மிக நீண்ட வரலாற்று ஆதாரமான கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில் புனர் நிர்மாணப் பணிகள் தொடர்ந்து தடுக்கப்பட்டே வந்திருந்தன. தற்போது ஒருபடி மேலே சென்று கடந்த 21ஆம் திகதி அப்பிள்ளையார் ஆலயப்பகுதியை கிண்டிக்கிளறி கிணற்றில் போட்டு மூடுமளவிற்கு நிலைமைகள் சென்றுள்ளன.IMG 20190523 WA0003 காணியை திட்டமிட்டே அபகரிக்கிறார்கள் போராட்டத்தை  கைவிடமாட்டேன்திருமலை(நேர்காணல்) - திருமதி. கோகிலறமணி

முன்னதாக, தற்பேதைய வில்கம் விகாரை காணப்படுகின்ற பிரதேசம் மன்னராட்சிக் காலத்து சிவன் கோவில் என்பதும் தேரர்களின் தந்திரத்தினால் காலப்போக்கில் அது வில்கம் விகாரையாக மாற்றப்பட்டதாகவும் திருக்கோணமலை மூத்த தமிழர்களால் கூறப்படும் வாய்மொழிக்கதையொன்றும் இல்லாமில்லை.

அப்படியிருக்க, வில்கம் விகாரதிபதிகளின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் பலமாதங்களுக்கு முன்னரே மெதுவாக ஆரம்பித்தாகிவிட்டது. கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் பௌத்த விகாரை ஒன்று அமைப்பதற்காக நிதி சேகரிப்பு நிலையம் ஒன்றை வில்கம் விகாரை பௌத்த பிக்கு ஒருவர் நடாத்த ஆரம்பித்திருந்தார்.

அத்துடன் கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதியின் பின்பக்கத்தில் அமைந்துள்ள மலை அடிவாரத்தில் பௌத்த விகாரை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து பார்க்கின்றபோது கன்னியா பிள்ளையார் கோவிலை அகற்றி அந்த வரலாற்றுப்பகுதியை கையகப்படுத்துவதற்கு வர்த்தமானி அறிவிப்பினையும் விடுத்து சிறீலங்கா அரசாங்கமும் துணைபோயிருக்கின்றது என்பது வெளிப்படையாகின்றது.

இந்நிலையில் கன்னியா மடத்தடி முத்துமாரி ஆலயத்தின் அறங்காவலரும், பிள்ளையார் கோவில் அமைந்திருக்கும் கன்னியா காணி உரிமையாளருமான திருமதி,க.கோகிலறமணி அம்மா அவர்களை நேரடியாக சந்தித்து நிைலமைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தோம். அப்போது இலக்கு மின்னிதழுக்கு அவர் வழங்கிய  சிறப்பு பேட்டிff 1 காணியை திட்டமிட்டே அபகரிக்கிறார்கள் போராட்டத்தை  கைவிடமாட்டேன்திருமலை(நேர்காணல்) - திருமதி. கோகிலறமணி

கேள்வி:- பிள்ளையார் கோவில் மற்றும் காணி உரிமம் பற்றி கூறுங்கள்?

பதில்:- கன்னியா காணியானது எனது பேரனான செல்லையா மணியம் அவர்களுக்கு ஆங்கிலேயர்களால் பரிசாக வழங்கப்பட்டது. 1833ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் இதற்கான உறுதியும் வழங்கப்பட்டள்ளது. எனது பேரன் 1964ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதுவரையில் அவரே இதனை பராமரித்து வந்திருந்தார். அதன் பின்னர் எமது குடும்பத்தினரே பரம்பரைபரம்பரையாக பராமரித்து வருகின்றோம். கன்னியா காணியானது 8ஏக்கரும் 22பேர்ச்சஸ் பரப்பினைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இந்தக்காணியின் பின்பகுதியில் வெந்நீர் ஊற்று உள்ளது. அங்கு உள்ளுர், வெளியூர் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். பௌத்த தேரர்கள் முதலில் அதனையே ஆக்கிரமித்தனர். பின்னர், எனக்குச் சொந்தமான இந்த பகுதியில் எமது இந்து மக்கள் 31ஆம் நாள் உள்ளிட்ட அந்தியேட்டி கிரியைகளை செய்து வந்தனர்.

இப்படியிருக்க 2002ஆம் ஆண்டு இக்காணியில் இருந்த பிள்ளையார் கோயிலின் ஒருபகுதியை இடித்து பௌத்த விகாரையை அமைப்பதற்கு முனைந்தார்கள். அச்சமயத்தில் நான் போராட்டங்களை நடத்தி அதனை தடுத்திருந்தேன்.

எனினும் அக்காலப்பகுதியில் பாரம்பரிய வரலாற்று இடத்தினை டோசர் மூலம் உடைத்து விட்டதாக பொய்யான குற்றம் சாட்டப்பட்டு உப்புவெளி காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆதரவுனும், தேரர்களின் பின்னணியுடனும் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் எனது தாயாரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினார்கள். அவர் பத்தாயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதோடு குறித்த வழக்கு நான்கு வருடங்களாக நடைபெற்றது. எனினும் வில்கம் விகாரதிபதி இந்த வழக்கின் நேரடி சாட்சியமாக இருந்தபோதும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததன் காரணமாக பொய்வழக்கு எனக்கூறப்பட்டு ஆலய அறங்காவலராக இருந்த எனது தாயார் விடுவிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கேள்வி:- தொல்பொருள் திணைக்களம் இந்த இடத்தினை எப்படி பொறுப் பேற்றது?

பதில்:- அவர்கள் பொறுப்பேற்றகவில்லை. வழக்கு தள்ளுபடியாகியவுடன் அடுத்த கட்டமாக இந்தக்காணியை கைப்பற்றுவதற்கு திட்டமொன்று இட்டார்கள். நாங்கள் ஒருநாள் காணியைப் பார்க்க வருகின்றபோது காணியில் தொல்பொருள் பகுதி என்று அறிவித்தல் விடுக்கும் பலகையொன்று நாட்டப்பட்டிருந்தது. தொல்பொருள் திணைக்களம் இதனை கையகப்படுத்தவதாக இருந்தால் எமக்கு அறிவித்திருக்க வேண்டும். உத்தியோக பூர்வமான ஆவணங்களை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் எதனையும் வழங்காது ஆட்சியாளர்களின் துணையுடன் வர்த்தமானியில் பிரசுரித்துவிட்டு அறிவித்தல் பலகையை மட்டுமே இட்டிருந்தார்கள். இவ்வாறு அவர்களால் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியை கையகப்படுத்த முடியாது. இருப்பினும் அவர்கள் அவ்வாறு செய்யாது, பிள்ளையார் கோவில் இருந்த வரலாற்று மேடைப்பகுதியை அண்மித்த இடங்களில் எல்லாம் ஆய்வு என்ற பெயரில் தோண்ட ஆரம்பித்தார்கள். அதனை தனியாக எல்லையிடவும் செய்தார்கள். இதற்கு பின்னணியில் வில்கம் விகாரையின் விகாரதிபதியே காரணமாக இருக்கின்றார்.

கேள்வி:- நீங்கள் விகாரதிபதியுடன் பேச்சுக்களை நடத்தினீர்களா?

பதில்:- ஆம், அவர் பலதடவைகள் என்னை வந்து சந்தித்துள்ளார். அவருக்கு என்னிடம் உள்ளஆதாரங்களை முன்வைத்து விடயங்களை புரிய வைத்துள்ளேன். எனினும், அவர் இந்த பகுதியை தமக்கு விற்பனை செய்யுமாறே வலியுறுத்தினார். அதுமட்டுமன்றி சில அரசியல்வாதிகள் கூட பல கோடிகளை வழங்குகின்றோம். அந்த பகுதியை விட்டுவிடுங்கள் என்று கோரினார்கள். அவர்களின் பெயர்களை நான் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. ஆனால் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசியல்வாதிகளே இப்படி இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றபோது கவலையாக உள்ளது. மேலும் 1985ஆம் ஆண்டு பிள்ளையார் ஆலயம் பதிவு செய்ததற்கான ஆதராங்களும் உள்ளன.

கேள்வி:- அடுத்து என்ன செய்வதாக உள்ளீர்கள்?

பதில்:- நான் ஒரு இந்து சமயத்தினை பின்பற்றும் நபர். எனது ஆகமத்தின் வரலாற்றுத் தொன்மம் வாய்ந்த பகுதியை பணத்திற்காக விற்பனை செய்வதற்கு தயாரில்லை. எத்தனை கோடிகளை வழங்கினாலும் அதனை விற்பனை செய்யப்போவதில்லை. பிள்ளையார் கோவிலை கிளறி பிள்ளையாரை அரசமரத்தின் கீழ் தற்போது வைத்துள்ளார்கள். நான் நீதிமன்றத்தினை நாடுவேன். எனது ஆதாரங்களை மன்றில் சமர்ப்பிப்பேன். விகாரதிபதி முடிந்தால் நீதிமன்றில் முன்னிலையாகி பதிலளிக்கலாம். நீதி கிடைக்கும் வரையில் போராடுவேன். எனக்கு பலம் சேர்த்து என்னுடன் கைகோர்த் திருக்கும் ஏனைய மத, சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். சத்தியம் ஒருநாள் வெல்லும். பௌத்தத்தினை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதனை திணிப்பதையும் அதன் பெயரால் எமது இந்து பாரம்பரியத்தினை கையகப்படுத்த முயற்சிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். எனது மூச்சு இருக்கும் வரையில் போராடுவேன்.

கேள்வி:- தமிழ்த்தலைமையும் இந்த மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்ப டுத்துவதாக இருக்கின்ற நிலையில் அவருடன் பேச்சுக்களை நடத்தினீர்களா? இந்து கலாசார அமைச்சர் மனோகணேசனின்  சந்திப்பு எப்படி இருந்தது?

பதில்:- இந்த விடயம் சம்பந்தமாக நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ஆரம்பத்திலிருந்தே இந்த விடயத்தினை மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றேன். ஆனால் அதில் அவர்களின் அக்கறை அதிகமாக இருந்திருக்கவில்லை. தற்போதைய சம்பவத்தின் பின்னர் அமைச்சர் மனோக ணேசனை சந்தித்திருந்தேன். அவரிடத்தில் இந்த பகுதியின் பாரம்பரியத்தினை கூறி மீண்டும் பிள்ளையார் ஆலயத்தினை அமைப்பதற்கு உதவியளிக்குமாறும், பௌத்த ஆக்கிரமிப்பையும், தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பையும் உடன் நிறுத்து மாறும் கோரியுள்ளேன்.

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிவிலகுகின்றனர்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் இன்று மாலை முதல் இராஜினாமா செய்வதாக அலரிமாளிகையில் தற்சமயம் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்திருக்கின்றனர்.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் தற்சமயம் இடம்பெற்றுவருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான கபீர் ஹாஷிம், ரிஷாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்துவித அமைச்சுக்களிலிருந்தும் இன்றுமுதல் இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

கடந்த சம்பவங்களுடன் அமைச்சர்கள் எவரும் ஏதாவது முறையில் சம்பந்தப்பட்டிருந்தால் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை மூலம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அரசாங்க அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து விலகினாலும் நாடாளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினர்களாக அரசாங்கத்திற்குத் தேவையான ஆதரவினை தொடர்ந்தும் வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.

அமைச்சுப் பொறுப்புக்களை இந்த நாட்டில் நிலையான ஐக்கியம், நல்லிணக்கம், சமாதானத்திற்காக அர்ப்பணிப்பு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முடிவுக்கு வந்தது புத்த பிக்குவின் உண்ணாவிரதம்

ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் இராஜினாமா கடிதங்கள், எழுத்துமூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, எம்.பி அத்துரலிய ரத்தன தேரர், அம்பியூலன்ஸ்ஸில், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆளுநர்களையும் அமைச்சர் ரிஷாட் பதியூதீனையும் பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி, இன்றுடன் நான்கு நாள்களாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை, தேரர் முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்தே, அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு முஸ்லீம் ஆளுநர்கள் பதவி விலகினார்கள்

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களில் தொடர்புடைய முஸ்லீம் அமைச்சரும் ஆளுநர்களும் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த துறவியான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய தேரர் மேற்கொண்டு வரும் உண்ணா நிலைப் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவுகள் பெருகி வருவதைத் தொடர்ந்து மேற்கு மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் இன்று (03) தமது பதவிகளைத் துறந்துள்ளதாக சிறீலங்கா அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் தமது பதவி விலகல் கடிதங்களை அரச தலைவரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.

இதனிடையே முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் முழுமையாக தமது பதவிகளைத் துறந்து முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை அலரி மாளிகையில் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் – 10 பேர் பலி

சிரியா மீது இஸ்ரேல் நேற்று (02) மேற்கொண்ட தாக்குதலில் சிரியா இராணுவம் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சனிக்கிழமை இரவு சிரியாவின் ஹெமோன் மலைப்பகுதியில் இருந்து இரண்டு உந்துகணைகள் ஏவப்பட்டதாகவும், அதில் ஒன்று இஸ்ரேலின் கட்டுப்பாட்டுப்பகுதியில் வீழ்ந்து வெடித்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 3 சிரிய இராணுவத்தினர் மற்றும் வெளிநாட்டுப்படையினர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக சிரியாவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் இற்கு அண்மையாக ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா படையினர் தங்கியிருந்த இடத்தின் மீதே ஏவுகணைத் தாக்குதல் இடம்பெற்றதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட போர் அவதானிப்புக்குழு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராக சிரியப் படையினர் ஏவுகணை எதிர்ப்புத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இதுவரையில் சிரியா மீது இஸ்ரேல் 100 இற்கு மேற்பட்ட வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும், சிரியாவுக்கு ஈரான் படையினர் ஆதரவளிப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த 8 வருடங்களாக நடைபெறும் போரில் 370,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் தாய்மொழித் தேர்வில் 4800 மாணவர்கள் 

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்பட்ட நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை இவ்வாண்டுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வை பன்னாட்டளவில் சென்ற 01.06.2019 சனிக்கிழமை 11:00 மணிக்குச் சிறப்பாக நடாத்தியுள்ளது.

அந்த வகையில் யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் இயங்கும் 120 க்கு மேற்பட்ட தமிழாலங்களில் பயிலும் பல்லாயிரம் மாணவர்களில் தேர்வுநிலைக்குத் தகைமையுள்ள ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரையிலான 4800 மாணவர்களும் அத் தேர்வில் இணைந்துள்ளனர்.

தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட 65 விசேடமான தேர்வு நிலையங்களில் முதற்கட்டமான 70 புள்ளிகளுக்கான அறிமுறைத் தேர்வை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதியுள்ளனர். அத் தேர்வை மேற்பார்வை செய்வதற்குத் தமிழாலங்களில் கற்பிக்கும் ஆற்றல் மிக்க 650 ஆசிரியர்கள் தேர்வு மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றினார்கள்.

65 தேர்வு நிலையங்களில் 30 தேர்வு நிலையங்களுக்கான பிரதம மேற்பார்வையாளர்களாக இளைய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் யேர்மனியில் பிறந்து தமிழாலயங்களில் தமிழ்மொழியைப் பயின்று பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களில் ஆசிரியர்களாகப் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அடுத்த நிலையான 30 புள்ளிகளுக்கான செய்முறைத் தேர்வு (புலன்மொழி வளம்) எதிர்வரும் சனிக்கிழமைகளிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆகிய நான்கு நாள்களும் தமிழாலயங்களில் நடைபெறவுள்ளது.

தேர்வெழுதிய 4800 மாணவர்களின் விடைத்தாள்கள் மறுநாளே பிரான்ஸ் – பாரீஸ் நகரில் அமைந்துள்ள தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நடுவச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்களின் மேற்பார்வையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கான பெறுபேறுகள் ஓகஸ்ட் மாத இறுதியில் தமிழாலயங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளன.

யேர்மனியத் தமிழாலயங்களிலிருந்து ஆண்டு 12 இல் தேர்வெழுதிய 310 மாணவர்களில் சித்தியடையும் மாணவர்களை 2020 ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விக் கழகத்தின் 30 வது அகவை நிறைவு விழாவில் சிறப்பாக மதிப்பளிக்கப்படவுள்ளனர்.DC6FC758 416B 45D4 9772 CF8703E79637 ஜேர்மனியில் தாய்மொழித் தேர்வில் 4800 மாணவர்கள் GER 2 ஜேர்மனியில் தாய்மொழித் தேர்வில் 4800 மாணவர்கள் 

பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்மொழிப் பொதுத் தேர்வு

தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில் நேற்று 0106.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.

பாரிசையும் பாரிசைச் சுற்றியுள்ள (Ile de france) ) மாணவர்களுக்கான தேர்வு வழமைபோன்று Maison des examens 7 Rue Ernest Renan 94110 Arcueil என்ற முகவரியில் அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் இடம்பெற்றது.

மதியம் 13.00 மணியளவில், அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவை மேலாளர் திருமதி அரியரட்ணம் நகுலேஸ்வரி, தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத் தேர்வுப்பொறுப்பாளர் திரு.அகிலன், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு. மகேஸ் மற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்களின் முன்னிலையில் ஒப்பமிடப்பட்டு தேர்வுத்தாள் பொதி திறக்கப்பட்டது. தேர்வு தொடர்பான அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து தேர்வு ஆரம்பமானது.

பிரான்சில் இம்முறை மொத்தம் 6085 மாணவர்கள் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். சுமார் 350 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், 500 இற்கு மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் தேர்வுக்கடமையைத் திறம்பட நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்வுக் கடமையில் ஈடுபட்டவர்களுக்கு சிற்றுண்டி, தேநீர், தண்ணீர், மதிய உணவு என்பனவும் வழங்கப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

பிரான்சின் ஏனைய பிற மாவட்டங்களிலும் தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்வு நிலையங்களில் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு நடைபெற்றது. ஸ்ராஸ்பேர்க், நீஸ், துலுஸ், தூர், மூல்கவுஸ், றென், போ, நெவர் ஆகிய பிற மாவட்டங்களிலே தமிழ் மொழிப் பொதுத்தேர்வு இடம்பெற்றுள்ளது.

இம்முறை பிரான்சில் கடும் வெப்பமான காலநிலை நிலவிய போதும், மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தேர்வில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. பெற்றோர்கள் கடும் வெய்யிலுக்கு மத்தியில் காத்திருந்த காட்சி வெள்ளை இனத்தவர்களையும் ஆச்சரியப்படவைத்தது. வெளிநாட்டவர்கள் பலரும் குறித்த தேர்வுதொடர்பான விடயங்களைக் கேட்டுத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததையும் காணமுடிந்தது.dscn3009 0 பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்மொழிப் பொதுத் தேர்வு

சிறிலங்கா ஜனதிபதி சிறிசேன எங்களை ஏமாற்றிவிட்டார் – மாவை­சே­னா­தி­ராஜா

இலங்­கையில் இனி­வரும் காலங்­களில் நடை­பெ­ற­வுள்ள தேர்­தல்­களில் தமி­ழர்கள் எதிர்­காலம் தொடர்­பாக நிதா­ன­மாக சிந்­தித்து பய­ணிக்க வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது. போரின் பின்னர் நடை­பெற்ற ஒடுக்­கு­மு­றை­யான ஆட்­சியை வீழ்த்தி மைத்­திரி – ரணில் தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சினை கொண்டு வந்தோம். இந்த அரசில் அங்கம் வகிக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கொடுத்த வாக்­கு­று­தி­களை மறந்து தமி­ழர்­க­ளுக்கு துரோகம் செய்து வரு­கின்றார். எங்­களை அவர் ஏமாற்றி விட்டார் என்று இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை­சே­னா­தி­ராஜா தெரி­வித்தார்.

யாழ்ப்­பாணம் மாநகரசபை மைதானத்தில் நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற சமுர்த்தி நிவா­ரண உரித்து பத்­திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

மேலும் தெரி­விக்கையில்:

நாட்டில் போர் முடி­வ­டைந்து பல வரு­டங்கள் கடந்­துள்ள போதும் தமிழ் மக்­களின் வாழ்­வா­தாரம் முழு­மை­யாக கட்­டி­எ­ழுப்­பப்­ப­ட­வில்லை.தமி­ழர்கள் விட­யத்­திலும் இனப்­பி­ரச்­சினை விட­யத்­திலும் ஆரம்ப காலத்தில் இருந்து இன்­று­வரை அரசு எவ்­வித ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­யையும் எடுக்­க­வில்லை.தமி­ழின வர­லாற்றில் 60 ஆண்­டு­க­ளாக இனப்­பி­ரச்­சினை விட­யத்தில் ஏமாந்து வரு­கின்றோம்.தென்­னி­லங்கை அர­சினால் தொடர்ச்­சி­யாக வஞ்­சிக்­கப்­பட்டு வரு­கின்றோம்.

போரின் பின்னர் நடை­பெற்ற ஒடுக்­கு­மு­றை­யான ஆட்­சியை வீழ்த்தி மைத்­திரி – ரணில் தலை­மை­ய­லான நல்­லாட்சி அர­சினை கொண்டு வந்தோம்.இந்த அரசில் அங்கம் வகிக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கொடுத்த வாக்­கு­று­தி­களை மறந்து தமி­ழர்­க­ளுக்கு துரோகம் செய்து வரு­கின்றார். எங்­களை அவர் ஏமாற்றி விட்டார்.

நல்­லாட்சி அரசில் நீண்­ட­கால பிரச்­சி­னை­யான இனப் பிரச்­ச­னைக்கு தீர்­வாக கொண்­டு­வ­ரப்­பட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் இடைக்­கால அறிக்கை வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.பின்னர் பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக கூட­வி­ருந்­தது அத்­துடன் வடக்கு, கிழக்கு மாகா­ணத்­துக்கு வரவு செலவுத் திட்­டத்தில் அதிக நிதி ஒத்­துக்­கீடு செய்­யப்­பட இருந்­தது.அனால் அதற்­கி­டையில் எந்தக் கட்­சி­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­ப­டாது திருட்­டுத்­த­ன­மாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை பிர­த­மா­ராக கொண்டு வந்தார்.இதனால் வரவு செல­வுத்­திட்டம் உட்­பட அனைத்து விட­யங்­களும் இழுத்­த­டிக்­கப்­பட்­டன.

தற்­போது ஜனா­தி­பதி இந்­தி­யா­விற்கு சென்­றி­ருந்த சமயம் டெல்­லியில் ஊட­க­வி­யா­ளர்கள் மத்­தியில் ஆற்­றிய உரை எமக்கு வருத்தம் அளிக்­கின்­றது.தமி­ழின வர­லாற்றில் நாம் ஆரம்­பத்தில் இருந்து இன்று வரை வஞ்­சிக்­கப்­பட்டு வரு­கின்றோம்.அண்­மையில் இடம்­பெற்ற குண்டு வெடிப்பு சம்­ப­வங்­களில் கூட அதி­க­மாக தமி­ழர்­களே பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.போரிலும் தமி­ழர்­களே அதி­க­மாக கொன்று அழிக்­கப்­பட்­டனர்.

நாட்டில் இடம்­பெற்ற தீவி­ர­வாத தாக்­கு­தல்­களை அடுத்து சர்­வ­தேச உள­வுத்­துறை மற்றும் சர்­வ­தேச கண்­கா­ணிப்­புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட அரசு தமிழர்களின் அடிப்படை பிரச்சனையான இனப்பிரச்சினை தீர்வில் அக்கறை அரசு செலுத்தவில்லை.இது எமக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கின்றது.எனவே எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தல்களிலும் நாம் தமிழர்கள் விடயத்தில் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாய காலத்தில் உள்ளோம் என்றார்.

சிறிலங்காவில் இயல்பு நிலை திரும்பவில்லை தனது மக்களை எச்சரிக்கின்றது சீனா

சிறிலங்காவில் இயல்பு நிலைமை இன்னும் திரும்பவில்லை என கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் சிறிலங்கா வரும் தனது நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ”முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்” என்று சீனர்களை அது கேட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாத சக்திகளுக்கு எதிராக கடுமையான, தீவிரமான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.