சிறிலங்காவில் இயல்பு நிலை திரும்பவில்லை தனது மக்களை எச்சரிக்கின்றது சீனா

சிறிலங்காவில் இயல்பு நிலைமை இன்னும் திரும்பவில்லை என கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் சிறிலங்கா வரும் தனது நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ”முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்” என்று சீனர்களை அது கேட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாத சக்திகளுக்கு எதிராக கடுமையான, தீவிரமான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.