2027 வரவு, செலவுத் திட்டத்தில் சொத்து வரி அரசாங்கம் – நாணய நிதியம் கருத்து வேறுபாடு

2027ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இரண்டாம் நிலை சொத்து வரியை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

குறித்த விடயம் சம்பந்தமாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில், கூடுதலாக உள்ள அல்லது இரண்டாம் நிலை குடியிருப்பு சொத்துக்களை இலக்கு வைத்து சொத்து வரியை எதிர்வரும் வரவு,செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் யோசனை முன்வைத்துள்ளது.
இருப்பினும், 2027 வரவு,செலவுத் திட்டத்திற்கு முன்மொழியப்படும் பிற வருமான வழிமுறைகளே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையப் போதுமானது என்பதால் இந்த வரி தேவையில்லை என்றும், சொத்துக்களின் உரிமையாளர்கள் பற்றிய துல்லியமான தரவுத்தளங்களைத் தயாரிப்பதற்கு கணிசமான காலம் எடுக்கும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.