சிறிலங்கா ஜனதிபதி சிறிசேன எங்களை ஏமாற்றிவிட்டார் – மாவை­சே­னா­தி­ராஜா

இலங்­கையில் இனி­வரும் காலங்­களில் நடை­பெ­ற­வுள்ள தேர்­தல்­களில் தமி­ழர்கள் எதிர்­காலம் தொடர்­பாக நிதா­ன­மாக சிந்­தித்து பய­ணிக்க வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது. போரின் பின்னர் நடை­பெற்ற ஒடுக்­கு­மு­றை­யான ஆட்­சியை வீழ்த்தி மைத்­திரி – ரணில் தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சினை கொண்டு வந்தோம். இந்த அரசில் அங்கம் வகிக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கொடுத்த வாக்­கு­று­தி­களை மறந்து தமி­ழர்­க­ளுக்கு துரோகம் செய்து வரு­கின்றார். எங்­களை அவர் ஏமாற்றி விட்டார் என்று இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை­சே­னா­தி­ராஜா தெரி­வித்தார்.

யாழ்ப்­பாணம் மாநகரசபை மைதானத்தில் நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற சமுர்த்தி நிவா­ரண உரித்து பத்­திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

மேலும் தெரி­விக்கையில்:

நாட்டில் போர் முடி­வ­டைந்து பல வரு­டங்கள் கடந்­துள்ள போதும் தமிழ் மக்­களின் வாழ்­வா­தாரம் முழு­மை­யாக கட்­டி­எ­ழுப்­பப்­ப­ட­வில்லை.தமி­ழர்கள் விட­யத்­திலும் இனப்­பி­ரச்­சினை விட­யத்­திலும் ஆரம்ப காலத்தில் இருந்து இன்­று­வரை அரசு எவ்­வித ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­யையும் எடுக்­க­வில்லை.தமி­ழின வர­லாற்றில் 60 ஆண்­டு­க­ளாக இனப்­பி­ரச்­சினை விட­யத்தில் ஏமாந்து வரு­கின்றோம்.தென்­னி­லங்கை அர­சினால் தொடர்ச்­சி­யாக வஞ்­சிக்­கப்­பட்டு வரு­கின்றோம்.

போரின் பின்னர் நடை­பெற்ற ஒடுக்­கு­மு­றை­யான ஆட்­சியை வீழ்த்தி மைத்­திரி – ரணில் தலை­மை­ய­லான நல்­லாட்சி அர­சினை கொண்டு வந்தோம்.இந்த அரசில் அங்கம் வகிக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கொடுத்த வாக்­கு­று­தி­களை மறந்து தமி­ழர்­க­ளுக்கு துரோகம் செய்து வரு­கின்றார். எங்­களை அவர் ஏமாற்றி விட்டார்.

நல்­லாட்சி அரசில் நீண்­ட­கால பிரச்­சி­னை­யான இனப் பிரச்­ச­னைக்கு தீர்­வாக கொண்­டு­வ­ரப்­பட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் இடைக்­கால அறிக்கை வெளி­யா­கி­யி­ருக்­கி­றது.பின்னர் பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக கூட­வி­ருந்­தது அத்­துடன் வடக்கு, கிழக்கு மாகா­ணத்­துக்கு வரவு செலவுத் திட்­டத்தில் அதிக நிதி ஒத்­துக்­கீடு செய்­யப்­பட இருந்­தது.அனால் அதற்­கி­டையில் எந்தக் கட்­சி­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டலில் ஈடு­ப­டாது திருட்­டுத்­த­ன­மாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை பிர­த­மா­ராக கொண்டு வந்தார்.இதனால் வரவு செல­வுத்­திட்டம் உட்­பட அனைத்து விட­யங்­களும் இழுத்­த­டிக்­கப்­பட்­டன.

தற்­போது ஜனா­தி­பதி இந்­தி­யா­விற்கு சென்­றி­ருந்த சமயம் டெல்­லியில் ஊட­க­வி­யா­ளர்கள் மத்­தியில் ஆற்­றிய உரை எமக்கு வருத்தம் அளிக்­கின்­றது.தமி­ழின வர­லாற்றில் நாம் ஆரம்­பத்தில் இருந்து இன்று வரை வஞ்­சிக்­கப்­பட்டு வரு­கின்றோம்.அண்­மையில் இடம்­பெற்ற குண்டு வெடிப்பு சம்­ப­வங்­களில் கூட அதி­க­மாக தமி­ழர்­களே பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.போரிலும் தமி­ழர்­களே அதி­க­மாக கொன்று அழிக்­கப்­பட்­டனர்.

நாட்டில் இடம்­பெற்ற தீவி­ர­வாத தாக்­கு­தல்­களை அடுத்து சர்­வ­தேச உள­வுத்­துறை மற்றும் சர்­வ­தேச கண்­கா­ணிப்­புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட அரசு தமிழர்களின் அடிப்படை பிரச்சனையான இனப்பிரச்சினை தீர்வில் அக்கறை அரசு செலுத்தவில்லை.இது எமக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கின்றது.எனவே எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தல்களிலும் நாம் தமிழர்கள் விடயத்தில் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாய காலத்தில் உள்ளோம் என்றார்.