Home Blog Page 2768

வெளிநாட்டிலுள்ள இலங்கை மாணவர்களும், சாதாரணதர, உயர்தர பரீட்சை எழுதலாம்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பிள்ளைகளும் சாதாரணதர, உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தூதரகங்களின் ஊடாக வழி செய்யப்படும் முறையொன்றை ஒழுங்குபடுத்துமாறு பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைத் திணைக்ளத்தின் நவீனமயப்படுத்தலுக்கு அமைவாக 2017இல் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் பரிந்துரை பிரகாரம் இணையத்தளம் ஊடாக க.பொ.த சாதாரணதரம், உயர்தரப் பரீட்சைகளை நடத்தி சான்றிதழ்களை இணையத்தளத்தின் ஊடாக வழங்குவதனை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

தான் கல்வியமைச்சராக பொறுப்பேற்று நான்கு வருடங்களில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்களை முன்னெடுத்து பல இடையுறுகளை சந்தித்ததாக கூறினார்.

பரீட்சை சான்றிதழ்களை இணையத்தளத்தின் ஊடாக வழங்கும் முறைமை புதிய வேலைத்திட்டமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத ஒழிப்பிற்கு சிறிலங்காவிற்கு உதவ அமெரிக்கா தயார்

சிறிலங்காவில் பயங்கரவாத ஒழிப்புத் தொடர்பாக அனைத்து உதவிகளையும் வழங்க தாம் தயாராக உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.  இதனை சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா பீ.டெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சருக்கும் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், நல்லிணக்கம் தொடர்பாக பல விடயங்கள் ஆராயப்பட்டன.

சவுதி வானூர்தி நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் – 26 பேர் காயம்

சவுதி அரேபியாவின் வானூர்தி நிலையத்தின் மீது யேமன் ஆயுதக்குழுவினர் இன்று (12) மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், வானூர்தி நிலையமும் சேதமடைந்ததாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யேமன் நாட்டில் உள்ள கூதீஸ் ஆயுதக்குழுவினர் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராட்சியத்தின் படைகளுக்கு எதிராக தமது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இன்று அவர்கள் சவுதியின் அபா வானூர்தி நிலையத்தின் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 26 பேர் காயமடைந்துள்ளனர். பயணிகள் வந்து இறங்கும் இடத்தில் ஏவுகணை வீழ்ந்த வெடித்ததனால் அந்தப் பகுதியும் சேதமடைந்துள்ளது.

காயமடைந்தவர்களில் 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஏனையவர்களுக்கு சம்பவ இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

ஈரான் வழங்கிய ஏவுகணை மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஒரு போர்க்குற்றமாகும் என அது மேலும் தெரிவித்துள்ளது. எனினும் ஈரான் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

கூதீஸ் படையினரால் பதவியில் இருந்து துரத்தப்பட்ட தமது ஆதரவு அரச தலைவரை மீண்டும் பதவிக்கு கொண்டுவரும் பொருட்டு சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு இராட்சியம் யேமன் மீது 2015 ஆம் ஆண்டில் இருந்து வான் தாக்குதல்களையும் படை நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த நடவடிக்கையினால் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பல ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிளுடன் தொடர்பு கோவையில் ஏழு இடங்களில் சோதனை, ஒருவர் கைது

கோவையில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வுத் துறையினர், அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். இங்குள்ள சில நபர்கள் இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளியோடு தொடர்பில் இருந்துள்ளனர் எனவும், தமிழகம் ,கேரளாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்த திட்டங்கள் இருப்பதாகவும் புலனாய்வுத் துறை விசாரணையில் தெரிய வந்ததால் இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளது.

உக்கடத்தை சேர்ந்த முகமது அசாருதீன், சேக் இதயத்துல்லா, இப்ராகிம், போத்தனூரை சேர்ந்த அக்ரம் சிந்தா, சதாம் உசைன், குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது அசாருதீன், ‘khilafah GFX’ என்னும் முகநூல் பக்கத்தின் வழியாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களை பரப்பியுள்ளார். மேலும், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தினை நடத்திய சஹரான் ஹாஷிம் உடன் முகநூல் நட்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் அனைவரும் சஹரானின் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அசாருதீன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வுத் துறையின் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை ஆஜர் படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இப்ராகிம், கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த திட்டமிட்டதாக கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கரோடு நெருக்கமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

சோதனையின் போது , 14 அலைபேசிகள் , 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 மடிக்கணிணிகள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்டு டிஸ்க் டிரைவ்கள், 1 இன்டர்நெட் டாங்கில், 13 காணொளி தகடுகள், 300 ஏர் கன் பெல்லட்டுகள் மேலும், அதிகமான குற்றத்தை சுட்டிக் காட்டுகின்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது

கைப்பற்றிய ஆவணங்கள், மற்றும் நபர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது என தேசிய புலனாய்வுத் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர், அல் அமீன் காலனி, சுண்ணாம்பு கால்வாய் , பொன்விழா நகர் ஆகிய இடங்களில், உள்ளூர் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்போடு புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனையினைத் தொடங்கினர். சந்தேகத்திற்குட்பட்ட நபர்களின் வீடுகள், அலுவலகத்தில் சோதனை செய்தவர்கள் சந்தேகத்திற்குட்பட்ட நபர்களை தனியாக வைத்து விசாரித்து வருகின்றனர்.

முகமது அஸாருதீன் என்ற நபரின் மீது, கடந்த மே மாதம் 30ஆம் தேதி தேசிய புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அசாருதீன் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் கருத்துகளை பரப்புவதாகவும், இலங்கையினைப் போல் தமிழகம் ,கேரளா ஆகிய தென்னிந்திய பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஆள் சேர்த்தி வருகின்றனர் எனவும் குற்றசாட்டுகள் இருப்பதால் இது குறித்து புலனாய்வு விசாரணைகள் நடைபெற்று வருவதாக தேசிய புலனாய்வுத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2100 விவசாயிகளின் கடனை செலுத்திய அமிதாப்

அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையாக வங்கியில் செலுத்துவதாக கூறி இருந்தேன். அவர்களில் சிலரை அழைத்து நேரடியாக கடன் தொகையை வழங்கினேன் எனஅமிதாப் பச்சன் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பீகாரில் கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் சிலரின் வங்கி கடன்களை தான் செலுத்த உள்ளதாக அமிதாப் ஏற்கனவே கூறி இருந்தார். விவசாயிகளுக்கு அமிதாப் உதவுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு உ.பி.,யை சேர்ந்த 1000 விவசாயிகளின் கடன்களை அமிதாப் செலுத்தினார்.

மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டுள்ள அமிதாப், புல்வாமா தாக்குதலில் உயிர்தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் மனைவிகளுக்கு தன்னால் முயன்ற சிறு நிதியுதவியை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் தான் நாட்டின் உண்மையான அரண்கள் எனவும் புகழ்ந்துள்ளார் அமிதாப்.

இன்னும் 10 வருடங்களில் தமிழினம் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் – மகப்பேற்று மருத்துவர் சி.சிவச்சந்திரன்

திருமண வயது முஸ்லிகளுக்கு 23  ஆகவும், சிங்களவர்களுக்கு 25    ஆகவும் உள்ளது. தமிழ்ப் பெண்களின் முதலாவது மகப்பேற்று வயது 35 என்றிருக்கின்றது.ஒரு இனம் நிலைத்திருப்பதற்கு 2 இற்கு மேற்பட்ட பிள்ளைகளை ஒரு பெண் பெற்றிருக்க வேண்டும்.  அல்லது அந்த இனம் சிறிது சிறிதாக அழிவடைந்து போகும். இது எமது தமிழர்களிடையே இரண்டைவிட குறைவாகவே காணப்படுகின்றது. அதாவது எமது இனம் அழிவடையும் சூழலிலேயே உள்ளது என மகப்பேற்று வைத்திய நிபுணர் சி.சிவச்சந்திரன் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

இது எமது நாட்டில் மட்டுமல்ல உதாரணமாக ஐரோப்பிய நாடுகளில் உதாரணமாக பிரான்ஸ் நாட்டில், அந்த நாட்டவரது பிறப்பு வீதமும் இரண்டாக அல்லது அதைவிடக் குறைவாகவே இருக்கின்றது. ஆனால் அங்குள்ள முஸ்லிம்களின் பிறப்பு வீதம் எட்டாக இருக்கின்றது. இதனால் இன்னும் 20 வருடங்களில் பிரான்ஸ் நாடு ஒரு முஸ்லிம் நாடாக மாறிவிடும்.  இது முஸ்லிம்களின் பிரச்சினைகளை கூறுவதற்காக அல்ல. ஒரு நாட்டில் அந்த இனம் அழிந்து வேறொரு இனம் தலையெடுப்பதைக் கூறுவற்கு உதாரணத்திற்காகவே கூறுகின்றார்.

இதே நிலை தான் இலங்கையிலும் வரவுள்ளது.  இலங்கையிலும் அங்குள்ள தமிழ்ப் பெண்கள் இரண்டிற்கும் குறைவான குழந்தைகளையே பெற்றுக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 10 வருடங்களில் நாம் மூன்றாவது இனமாகப் போய்விடுவோம்.

குழந்தைப் பேறு பற்றி ஒரு இனமாக நாம் சிந்திக்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. பொதுவாக இலங்கையில் பிறப்பு வீதம் 17ஆக இருக்கின்றது.  வடக்கில்   இந்த பிறப்பு வீதம் 15ஆக இருந்தது. ஆனால் கடந்த பத்து வருடங்களில் இது 14ஆக இருக்கின்றது. பத்து வருடங்களிற்கு முன்னர் பிறப்பு வீத வித்தியாசம் 2ஆக இருந்தது. ஆனால் இப்போது அதற்கும் அதிகமாக உள்ளது.

இது எதைக் காட்டுகின்றதென்றால், தமிழினம் சிறிது சிறிதாக அழிவடைந்து கொண்டு போகின்றது என்பதைக் காட்டுகின்றது. இதற்கான அடிப்படைக் காரணம் என்னவென்றால், சமூகக் கட்டமைப்பை பார்க்கும் போது, 50 வருடங்களின் முன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குடும்ப வாழ்க்கை என்பதைவிட கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

ஏனைய சமூகத்தினர் 27 வயது வந்ததும் தாம் திருமண வயதை எட்டியதை கருத்தில் கொள்கின்றனர. தமிழர்கள் அப்படியல்ல. மற்றைய சமூகத்தினரை விட தமிழ் சமூகத்தினர் கல்வி, வேலைக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஒருவர் கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்று படிப்பை முடிக்க 26 வயது வந்துவிடும், அதன் பின்னர் அவர் வேலை செய்து அனுபவம் என்று வரும் போது அவருக்கு 30 வயது வந்து விடும். இதை இளைஞர்கள் கடைப்பிடிப்பதால், அவர்களுக்கு உடன் வேலை கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் திருமணம் முடிக்கும் வயது பின்தள்ளப்படுகின்றது.

படிக்காதவர்கள் தங்கள் வேலையை கருத்திற் கொள்கின்றனர். முன்னர் கொழும்பில் வியாபாரத்தில் பெருமளவானவர்கள் தமிழர்களே. காலம் செல்ல செல்ல இவர்களும் படித்துப் பட்டம் பெறவேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கி விட்டனர். அல்லது வெளிநாடு செல்வது  இவ்வாறான காரணங்களினால் தமிழர்களின் திருமண வயது தள்ளிச் செல்கின்றது. இதை இளைய சமூகம் சிந்திக்க மறுக்கின்றது. மற்ற இனத்தவர்களின் திருமண வயது குறைவாக உள்ளது. முஸ்லிகளுக்கு 23  ஆகவும், சிங்களவர்களுக்கு 25    ஆகவும் உள்ளது.

தமிழ்ப் பெண்களின் முதலாவது மகப்பேற்று வயது 35 என்றிருக்கின்றது. இதற்குக் காரணம் திருமண வயது தள்ளிப் போனதாக கூறப்படுகின்றது. இதற்குக் காரணம் பெண்கள் படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, ஒரு நம்பிக்கையான துணை வரும் வரை திருமணத்தைத் தள்ளிப் போடுவதாக அறிய முடிந்தது.

இவர்கள் இனத்தின் அழிவிற்கு தமது பங்கை வழங்குகின்றார்கள் என்று சொல்ல வேண்டும். மற்றையது மொழியின் அழிவிற்கும் இவர்கள் செல்கின்றனர். இது வெளிநாடுகளில் பெரும்பாலும் காணப்படுகின்றது. இது சாஸ்திரக்காரர்களும் முக்கிய பங்கை வகிக்கின்றனர். பிள்ளைக்கு பெயர் சூட்டும் போது, தமிழ் பெயர்கள் வரமுடியாத எழுத்துக்களை அவர்கள் கொடுக்கும் போது, அதில் தமிழ்ப் பெயர்கள் வைக்க முடிவதில்லை.

தமிழ்ச் சமூகத்தில் திருமணம் தள்ளிப் போக முக்கிய காரணம் ஜாதகப் பொருத்தமின்மை. சாஸ்திரத்தை நம்பினாலும் அது எமது சமூகத்தை அழித்துக் கொள்ளாத வகையில் இருக்க வேண்டும். அடுத்தது சீதனப் பிரச்சினை. அடுத்தது திருமணமானவர்கள் எமது நாட்டில் கப்பலில் வேலை செய்கின்றனர். இவர்கள் இரண்டு மூன்று மாதங்களே வீட்டில் தங்குவர். ஏனைய காலங்களில் கப்பலில் வேலைக்கு சென்று விடுவர். இது போன்ற காரணங்களும் குழந்தைப் பேற்றை தள்ளிப்போட வைக்கின்றது.

யாழ். மாவட்டத்தில் 2016இல் பாரிய வீழ்ச்சியடைந்து வந்தது. குழந்தை பிறப்பு வீதம் 11ஆக இருந்தது. ஆனால் தற்போது கடந்த 3 வருடங்களில் அதிகரித்து தற்போது 14 என்ற நிலையை அடைந்துள்ளது.

இனிவரும் காலத்தில் எமது தமிழ் இனம் அழிவடைவதிலிருந்து காத்துக் கொள்ள வேண்டிய கடமை எம்மிடம் உள்ளது. இதற்குரிய தீர்வு என்பது என்னவென்று தெரியாத போதும், இதற்கான காரணத்தை தான் தெரியப்படுத்துவதாக கூறினார்.

 

 

 

 

தமிழர் நிலத்தை அபகரித்து வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக தமிழர் நிலங்களை அபகரித்து மேற்கொள்ளப்படும்  இல்மனைற் அகழ்விற்கு எதிராக வாகரையில் மக்கள் போராட்ட நடத்தி பிரதேச செயலகத்தையும் முற்றுகையிட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் அப்பிரதேச மக்களோடு தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரும், அதன் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் கலந்துகொண்டார்.B010F3C7 4AF7 4117 B533 DFECC9B9FBD4 தமிழர் நிலத்தை அபகரித்து வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்B4E5CE64 7013 4875 97E1 15D35446A77D தமிழர் நிலத்தை அபகரித்து வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

ஜேவிபி அரசாங்கத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம்

மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக டெக்னிகள் சந்தி முதல் ஓல்கொட் மாவத்தை வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதியில் இருந்து புறக்கோட்டை பகுதியை நோக்கி செல்வதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அரசாங்கத்திற்கு தமது எதிர்பை வௌிப்படுத்தியே இவ் ஆர்ப்பாட்டம் மக்கள் விடுதலை முன்னணியினரால் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழர் பிரதேச மயானத்தில் தீவிரவாதியின் உடல் அடக்கம் கிளர்ந்தெழுந்த மக்கள்

கடந்த ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதியின் உடல் இரசாயனப் பகுப்பாய்வின் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு  ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையடுத்து, அந்தப் பிரதேச மக்கள் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்து, கண்டன ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஊர்வலம் நேற்று (11) நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர் இறுதியில் மயானத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழரது புனித மயானத்தில் ஐ.எஸ் தீவிரவாதிக்கு இடமளிக்காதே என்றும், ஆலயப் பகுதியின் புனிதத்தைக் குலைக்காதே, மக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவும் போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் பங்குபற்றியிருந்தார். நிலைமையை அறிந்து அந்த இடத்திற்கு வந்த மட்டக்களப்பு பொலிசார் பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இங்கு சடலம் புதைக்கப்பட மாட்டாது என  நாடாளுமன்ற உறுப்பினரிடம் உறுதிமொழி வழங்கினார்.

 

 

 

மகிழடித்தீவு தமிழினப் படுகொலையின் நினைவு நாள் இன்று

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பெருநிலம் பற்றுறுதி கொண்ட தமிழ் பழைமையூர் பசுமையூர் மகிழடித்தீவு கிராமம் இரத்த வெள்ளத்தில் மிதந்த நாள் ஆம் இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்பு 1991 ம் ஆண்டு யூண்மாதம் 12,ம் திகதி இனவெறி கொண்ட சிங்கள படையின் கொலைவெறியாட்டத்தில் மகிழடித்தீவு கிராமத்தில் சுமார் 65 பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.

அன்று மணல்பிட்டி சந்தியில் இருந்து உழவு இயந்திரத்தில் மண்முனை துறைக்கு றோந்து சென்ற படையினர் மீது விடுதலைப்புலிகள் மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் ஒரு கன்னி வெடித்தாக்குதலை நடத்தினர் இதில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் அதற்கு பழி தீர்க்கும் விதமாகவே ஆயுதங்களுடன் அத்து மீறி மகிழடித்தீவு கிராமத்தில் நுழைந்த கொலைவெறி படையினர் கண்டவர் நிண்டவர் ஆண் பெண் இளைஞர்கள் வயோதிபர் என கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுத்தள்ளினர்.

சிலரை பிடித்துச்சென்று அந்த கண்ணி வெடி இடம்பெற்ற மடுவில் படுக்க வைத்து சுட்டனர் இந்த சம்பவத்தை நேரடியாக பலர் கண்டும் உள்ளனர்

இந்த படுகொலையை அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராச்சிங்கம் உடனடியாக பாராளுமன்த்தில் தெரியப்படுத்திது மட்டும் அன்றி ச்தேச நாடுகளின் கவனத்துக்கும் கொண்டுவந்தார்.

இதனால் இந்த மகிழடித்தீவு படுகொலைக்காக ஒரு விசாரனை குழ அமைக்கப்பட்டு அதில் உயிர் இழந்தஉறவுகளின் உடன் பிறப்புகள் சாட்சியளுத்ததன் விளைவாக உயிர் இழந்தவர்களுக்கு மரணசான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டது.
இந்த படுகொலைக்கான நீதி 27 வருடங்கள் கடந்தும் இதுவரை கிடைக்கவில்லை.

சிங்கள இராணுவத்தின் கோரத்தாண்டவம்.சட்டி தொப்பியுடன் அடோ,அடோ,கொட்டி,கொட்டி என்கின்ற சத்தம் மேலோங்கியது.வீடுகள் எரிந்து புகைமூட்டமானது மகிழத்தீவு.உயிரை காக்க கொக்கட்டிச்சோலைக்கு ஓடும் கூட்டம் ஒரு புறம், உறவை தேடி அலையும் கூட்டம் மறுபுறம்.இந்த இன வெறியர்களின் வெறியாட்டத்தில் குமாரநாயகத்தின் அரிசி ஆலையில் இருந்த சிறுவர்கள்,முதியோர்கள்,பெண்களென வித்தியாசமில்லாமல்65க்கு மேற்பட்ட உயிர்களை நரபலியாடினர்.