2100 விவசாயிகளின் கடனை செலுத்திய அமிதாப்

அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். பீகாரைச் சேர்ந்த 2100 விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையாக வங்கியில் செலுத்துவதாக கூறி இருந்தேன். அவர்களில் சிலரை அழைத்து நேரடியாக கடன் தொகையை வழங்கினேன் எனஅமிதாப் பச்சன் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பீகாரில் கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் சிலரின் வங்கி கடன்களை தான் செலுத்த உள்ளதாக அமிதாப் ஏற்கனவே கூறி இருந்தார். விவசாயிகளுக்கு அமிதாப் உதவுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு உ.பி.,யை சேர்ந்த 1000 விவசாயிகளின் கடன்களை அமிதாப் செலுத்தினார்.

மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டுள்ள அமிதாப், புல்வாமா தாக்குதலில் உயிர்தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் மனைவிகளுக்கு தன்னால் முயன்ற சிறு நிதியுதவியை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் தான் நாட்டின் உண்மையான அரண்கள் எனவும் புகழ்ந்துள்ளார் அமிதாப்.