பயங்கரவாத ஒழிப்பிற்கு சிறிலங்காவிற்கு உதவ அமெரிக்கா தயார்

சிறிலங்காவில் பயங்கரவாத ஒழிப்புத் தொடர்பாக அனைத்து உதவிகளையும் வழங்க தாம் தயாராக உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.  இதனை சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் எலைனா பீ.டெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சருக்கும் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், நல்லிணக்கம் தொடர்பாக பல விடயங்கள் ஆராயப்பட்டன.