வெளிநாட்டிலுள்ள இலங்கை மாணவர்களும், சாதாரணதர, உயர்தர பரீட்சை எழுதலாம்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பிள்ளைகளும் சாதாரணதர, உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தூதரகங்களின் ஊடாக வழி செய்யப்படும் முறையொன்றை ஒழுங்குபடுத்துமாறு பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைத் திணைக்ளத்தின் நவீனமயப்படுத்தலுக்கு அமைவாக 2017இல் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் பரிந்துரை பிரகாரம் இணையத்தளம் ஊடாக க.பொ.த சாதாரணதரம், உயர்தரப் பரீட்சைகளை நடத்தி சான்றிதழ்களை இணையத்தளத்தின் ஊடாக வழங்குவதனை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

தான் கல்வியமைச்சராக பொறுப்பேற்று நான்கு வருடங்களில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்களை முன்னெடுத்து பல இடையுறுகளை சந்தித்ததாக கூறினார்.

பரீட்சை சான்றிதழ்களை இணையத்தளத்தின் ஊடாக வழங்கும் முறைமை புதிய வேலைத்திட்டமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.