நீங்கள் விரும்மியபடியெல்லாம் செயற்படமுடியாது; மைத்திரி மீது ரணில் காட்டம்

19 ஆவது திருத்தத்தின்படி நீங்கள் நினைத்தபடி அமைச்சர்களை நியமிக்க முடியாது. அரசியலமைப்பை மீறி தவறை செய்திருக்கிறீர்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

அமைச்சர் ஒருவர் பதவி விலகினால் அடுத்த அமைச்சர் ஒருவரை நியமிக்க பிரதமரின் ஆலோசனை பெறப்பட வேண்டும்.அத்துடன் பிரதமர் அனுப்பும் அமைச்சர் பெயர்களை பரிசீலிக்க வேண்டும்.19 ஆவது திருத்தும் இதனை தெளிவாக சொல்கிறது . ஆனால் எடுத்தபடி பதில் அமைச்சர்களை நீங்கள் நியமித்திருப்பது தவறானது.

உங்களின் இந்த நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.