Home Blog Page 2709

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – கோத்தபாயா வேட்பாளராக அறிவிப்பு

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா போட்டியிடுவதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

சுகததாசா அரங்கில் இடம்பெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தின் அதன் தலைவரும், கோத்தபாயாவின் சகோதரருமான எதிர்க்சட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்சா வேட்பாளரை அறிவித்துள்ளார்.

அட்சியின் தலைவராக மகிந்தாவை முன்னள் அமைச்சரும், முக்கிய உறுப்பினருமான ஜி.எல் பீரீஸ் அறிவித்துள்ளார்.

இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு – பிஞ்ஞகன்

மனிதன் – மனித இனம் உயிர் வாழ்வதற்கு உணவு‚ உடை‚ உறையுள்(வீடு) மூன்றும் இன்றியமையாதன. அடிப்படைத் தேவையான உணவுக்கும் உடைக்கும் அப்பால் தான் வாழும் நிலத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான உறவென்பது அவனது அகப்புற வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது. ஒரு இனக்குழுமத்திற்கு தாம் பூர்வீகமாய் வாழ்ந்து வரும் நிலத்துடன் உள்ள தொடர்பானது வாழ்வடன் பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்டுள்ளது. 1990 இல் வலிகாமம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களும் 2006 இல் சம்பூரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களும் ஒரே விடயத்தைத்தான் கூறுகிறார்கள்.

நீங்கள் எங்களுக்கு நிவாரணம் தரவேண்டாம். எங்களை வேறு இடத்தில் குடியேற்றி வீடு கட்டித் தரவேண்டாம். எங்களை எங்களுடைய சொந்த இடத்திற்கு போக விடுங்கள். ஒரு கொட்டிலைப் போட்டு கஞ்சியைக் குடித்தாவது சீவிப்பம்.”

மனிதனுக்கும் அவனது பூர்வீக நிலத்துக்கு மிடையிலான ஆத்மார்த்தப் பிணைப்பானது மேற் கூறப்பட்ட மக்களின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ஒரு இனம் தாம் பாரம்பரியமாய் வாழ்ந்த மண்ணில் உயிர் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரங்களைத் தன்னகத்தே காலங்காலமாகத் தேக்கி வைத்திருக்கும். புறத்தே நேரடியாகக் காணமுடியாத ஒரு வளம் நிலத்தில் – பூர்வீகக் காணியில் இருப்பதை சம்பூரில்‚ வலிகாமத்தில்‚ கேப்பாப்புலவில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் உணர்கிறார்கள். ஒரு மக்கள் கூட்டத்தின் நிலத்தின் மீதான உரிமையைப் பறிப்பதென்பது அவர்களது வாழும் உரிமையைப் பறிப்பதற்குச் சமமாகும்.

இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் 2500 வருடங்களுக்கும் மேலான சரித்திரத்தைக் கொண்டுள்ளனர். தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் மரபுவழித் தாயகமாகும். சிங்களவர்களுக்கு சார்பாக எழுதப்பட்ட மகாவம்சமோ அல்லது இலங்கைத் தமிழரின் சரித்திரத்தை விபரிக்கும் எந்த ஒரு வரலாற்று நூலுமோ கிழக்கிலங்கையையோ‚ வன்னிப் பகுதியையோ அல்லது யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியத்தையோ எந்த ஒரு சிங்கள அரசனும் ஆண்டதாக சரித்திரத்தில் குறிப்பிடவில்லை.

இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களது பாரம்பரிய நிலம் தமிழினப் படுகொலைகளின் ஊடாகத் தமிழ் மக்களை அச்சுறுத்தி பூர்வீகக் காணியில் இருந்து வெளியேற்றியதன் மூலமும் தமிழரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

குறிப்பட்ட ஒரு சமூகக் குழுமம் தன்னை ஒரு தேசிய இனமாகப் பிரகடனப்படுத்திக் கொள்வதற்கு அக் குழுமத்திற்குத் தனித்துவமான மொழி‚ வரலாறு‚ இலக்கியம்‚ கலைகலாசார பின்னணி என்பவற்றுடன் தொடர்ச்சியான நிலப்பரப்பும் அந் நிலப்பரப்புடன் வரலாற்றுத் தொடர்பும் இருத்தல் வேண்டும் என்று மேற்குலக இனவியல் வரலாற்றாசிரியர்கள் வரையறுத்துள்ளனர். தாயக்கோட்பாடு என்ற கருத்தியல் இதிலிருந்தே எழுந்தது. தமிழனத்தின் தனித்துவத்தை இல்லாதொழித்து‚ தங்களைத் தாங்களே ஆளும் சுயநிருணயத்தை கோரமுடியாத சிறுபான்மை சமூகமாக்கி‚ தமிழரின் தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் நோக்குடன் வடக்குக் கிழக்கை இணைக்கும் எல்லைக் கிராமமான மணலாற்றை விட்டு தமிழர்களை விரட்டி வெலிஓயா என்ற சிங்களக் குடியேற்றத் திட்டம் 1980 இல் உருவாக்கப்பட்டது.

தமிழர்களின் மரபுவழித் தாயகக் கோட்பாட்டை சிதைத்து இலங்கைத் தீவானது‚ கௌதம புத்தரால் சிங்களவர்களுக்கு அர்ப்பணிக்கபட்ட பூமி என்ற மகாவம்ச மாயாவாத சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்காக இலங்கைத் தீவு முழுவதையும் சிங்களமயமாக்குதலை நோக்காகக் கொண்டு தமிழர் பாரம்பரிய நிலத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் 1949 முதல் உருவாகத் தொடங்கின.

1949 இல் தொடங்கி 2014 பெப்பிரவரி வரை நின்று பார்க்கையில் இலங்கைத் தீவில் தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்யுமளவுக்கு (Ethnic Cleansing)  தமிழ் நிலத்தில் – வடகிழக்கில் நிலமானது தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு குடிப்பரம்பலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகிறது.

ஒரு புறம் வடகிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழினம் 1949 இலிருந்து தனது நிலத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தாலும் இராணுவ ஆக்கிரமிப்பாலும் படிப்படியாக இழந்து வர மறுபுறம் ஏறத்தாழ 250 வருடங்களாக அரை அடிமைகளாக வாழும் மலையகத் தமிழினம் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களாலும் திட்டமிட்ட இனக் கலவரங்களாலும் தமது பூர்வீக நிலத்தின் மீதான இருப்பையும் உரிமையும் இழந்து வருகிறது.

Budda colonisaton இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் - ஒரு வரலாற்று நோக்கு - பிஞ்ஞகன்கிழக்கு மாகாணத்தில் இன்று தமிழினம் தனது இருப்பை‚ நிலத்தின் மீதான உரிமையை முழுமையாக இழந்துள்ளதுடன் கிழக்கில் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இன்று‚ 2009 மே மாதமளவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதபலம்  அழிக்கப்பட்ட பின்னர் வடபகுதியில் குறிப்பாக வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலம் சிங்கள இராணுவத்தாலும் சிங்களக் குடியேற்றத்தாலும் தொடர்ச்சியாகப் பல்வேறு வழிகளில் சூறையாடப்பட்டு வருகிறது.

காலங்காலமாக காணி அபிவிருத்தித் திட்டம் (Land Development Schemes) என்ற போர்வையில் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் சிங்களக் குடியேற்றத் திட்டத்தை முன்னெடுத்து வந்தார்கள். கிராம விரிவாக்கம்‚ இளைஞர் அபிவிருத்தி‚ விவசாய மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி‚ மீன்பிடி அபிவிருத்தி என்ற வெவ்வேறு பெயர்களில் தமிழர் மரபுவழித் தாயகத்தில் சிங்களவர்களைக் குடியேற்றினார்கள்.

  1. கல்லோயாக் குடியேற்றத் திட்டம்

தமிழர் தாயகத்தில் – கிழக்கு மாகாணத்தில் நிறுவப்பட்ட முதலாவது பாரிய சிங்களக் குடியேற்றம் கல்லோயாக் குடியேற்றமாகும். இதனை ஆரம்பித்து வைத்தவர் இலங்கையின் முதற் பிரதமர்  டி.எஸ்.சேனனாயக்க. இவர் 1931 முதல் 1947 வரை பிரித்தானிய ஆட்சிக்காலப்பகுதியில் விவசாய மற்றும் காணி அமைச்சராக இருந்தவர். தமிழர்கள் பூர்வீகமாய் வாழ்ந்து வந்த பட்டிப்பளை‚ களுவாஞ்சிக்குடி‚ மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களின் எல்லையில் உள்ள கிராமங்களை இணைத்து கல்லோயா என்று பெயரிட்டு கல்லோயா பள்ளத்தாக்கு சிங்களக் “கொலனி” 1949 இல் உருவாக்கப்பட்டது. பட்டிப்பளை என்ற புராதன தமிழ்க் கிராமத்தின் பெயரே கல்லோயா என்ற சிங்களப் பெயராக மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டது. இக் குடியேற்றங்களுக்காக சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் வெளிநாடுகளின் நிதியுதவி பெறப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசத்தில் 1949 – 1952 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தின் மூலம் 80‚000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். 1960 வரை இத்திட்டம் விஸ்திரிக்கப்பட்டது.

Vavuniya Barathypuram இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் - ஒரு வரலாற்று நோக்கு - பிஞ்ஞகன்கல்லோயா குடியேற்றத் திட்டம் இங்கினியாகல என்ற இடத்திலிருந்து ஆரம்பமாகிறது. இங்கு ஆரம்பத்தில் சிங்களவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுதொகையினரே இருந்தனர். 1952 ஜுலை 13 ஆம் திகதி இங்கிருந்த 100 இற்கும் அதிகமான தமிழ்க் குடும்பங்களை குடியேற்றத் திட்டத்திற்கு இடம்பெயருமாறு இராணுவத்தினர் வற்புறுத்தி அவர்களது வீடுகளை எரித்து அழித்தனர். ஆனால் அவர்கள் குடியமர மாற்று நிலம் எதுவுமே வழங்கப்பட வில்லை. அதே நேரம் சிங்களக் குடும்பங்களுக்கு தமிழர்கள் இருந்த இடம் குடியமர வழங்கப்பட்டதுடன் ஒவ்வோரு குடும்பத்திற்கும் ரூபா 10000 உதவித் தொகை வழங்கப்பட்டது.  67 வருடங்களுக்கு முன்னர் இது மிகப் பெரிய தொகையாகும். கல்லோயா குடியேற்றத்தைத் தொடர்ந்து திருகோணமலை கந்தளாயில் சிங்களக் கொலனி உருவாக்கப்பட்டது. இதற்கு தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பு வர இனவிகித அடிப்படையில் இங்கு தமிழர்களுக்கும் காணி வழங்கப்பட்டிருந்தது. 1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் உள்ள பழைய பாராளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பாகத் தமிழ்த் தலைவர்கள் சத்தியாக்கிரகம் செய்தனர். சத்தியாக்கிரகிகள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கொழும்பிலும் தமிழர்கள் வாழும் தென்னிலங்கையின் பகுதிகளிலும் மலையகப் பகுதியிலும் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் பரவின. 1956 இல் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான கலவரத்தின் முதல் இலக்காக கல்லோயா மற்றும் கந்தளாய்ப் பகுதியில் பூர்விகமாய் இருந்த மற்றும் குடியேறிய தமிழர்கள் தாக்கப்பட்டார்கள்.

தமிழினத்தின் மீது முதலாவது பாரிய இனப்படுகொலை இங்கினியாகலவில் ஜுன் 5‚ 1956 இல்  சிங்கள ஆயுதப் படைகளால் நிகழ்த்தப்பட்டது. கல்லோயத் திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையினராலும் ஆயுதப் படையினராலும் இங்கினியாகலவில் உள்ள கரும்புத் தோட்டத்திலும் தொழிற்சாலையிலும் வேலை செய்ய குடியேற்றப்பட்ட 150 தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் எரிக்கப்ட்டு தடயமின்றிச் செய்யப்பட்டார்கள். தாசி விதாச்சி தனது ‘அவசரகாலம் 58’ (Emergency 58) இல் இதனை விரிவாகப் பதிவு செய்துள்ளார். தடயங்களை அழித்தல் 2009 முள்ளிவாய்க்காலில் மட்டும் நிகழவில்லை. 1956 இலேயே ஆரம்பமாகிவிட்டது. 1996 செம்மணியில் அப்போதைய சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாக்கா 600 இற்கும் அதகமான தமிழ் இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதைகுழிகளை நள்ளிரவில் வாகன வெளிச்சங்கள் மூலம் தோண்டி எலும்புக் கூடுகளை அகற்றி தடயமே இல்லாமற் செய்தார்.

  1. இனக் கலவரங்ளும் அனுராதபுரத்திலிருந்து தமிழர் வெளியேற்றமும்

1956 ஐத் தொடர்ந்து 1958‚ 1977‚ 1978‚ 1981‚ 1983 என தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலும் மலையகப் பகுதியிலும் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட கலவரங்கள் தமிழர்களுக்கு உரிமையான நிலங்களையும் சொத்துக்களையும் அபகரிப்பதற்காக இனஅழிப்பை நோக்காகக் கொண்டு ஆயுதப்படைகளின் உதவியுடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. எல்லைக் கிராமங்களிலும் சிங்களவர் மத்தியிலும் வாழ்ந்த தமிழர்கள் இக்கலவரங்களின் போது நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து  வெளியேற்றப்பட்டார்கள்; பாதுகாப்பின்மை காரணமாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

black july இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் - ஒரு வரலாற்று நோக்கு - பிஞ்ஞகன்1983 ஆடிக்கலவரம் இலங்கையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதை உணர்த்தியது. தமிழர்கள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேறி மேற்கு நாடுகளுக்கு புகலிடம் தேடிச் சென்றனர். 1983 இல் இலங்கையின் தலைநகரில் தொடங்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான வன்முறையில் 3000 இற்கும் அதிகமான தமிழர்கள் உயிரோடு எரித்தும் வெட்டியும் கொல்லப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இக்கலவரம் மலையகத்திற்கும் அனுராதபுரம் பொலநறுவை முதலான தமிழர் பிரதேசங்ளுக்கும் பரவியது.

இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றியபோது அனுராதபுரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தனர். ஆங்கில கப்பற் தலைவனான றொபேட் நொக்ஸ் (Robert Knox (8 February 1641 – 19 June 1720)) இலங்கையில் கிழக்கிந்தியக் கம்பனியின் வியாபாரத்தை முன்னெடுக்க வருகைதந்த போது கண்டி அரசனான இரண்டாம் இராஜசிங்கனின் காவலர்களால் கைது செய்யப்பட்டு கண்டி அரசின் கைதியாக 19 வருடங்கள் வாழ்கிறான். றொபேட் நொக்ஸ் கைதியாகவிருந்த போது சிங்கள மொழியைக் கற்றுக் கொள்கிறான். 19 வருடங்களின் பின் ஒருநாள் கண்டி இராச்சியத்திலிந்து தப்பி அனுராதபுரம் வழியாக வருகின்ற போது தான் கைதியாகவிருந்த போது கற்ற மொழியை விடுத்து வேறு ஒரு மொழியில் அப்பிரதேச மக்கள் உரையாடுவதையும் சிங்கள மொழியில் தான் பேசியதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையும் தனது வரலாற்றுக் குறிப்பில் எழுதியுள்ளான். அனுராதபுரத்தில் வாழ்ந்த மக்களை மலபார் என்று பெயரிடுகிறான். மலபார் என்பது தமிழர்களைக் குறிக்கும் சொல். 17 நூற்றாண்டு இலங்கையின் வரலாற்றைக் கூறும் முக்கிய ஆவணமாக “கிழக்கிந்தியக் கம்பனியின் இலங்கையுடனான வரலாற்றுத் தொடர்புகள்” (Knox, Robert (1681). An historical relation of the island Ceylon, in the East Indies. Printed by R. Chiswell.LCCN 15012033) என்ற நூல் விளங்குகின்றது. பிரித்தானியர் வருகைக்கு முன் அனுராதபுரதத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். 1983 கலவரத்துடன் தமிழர்கள் முற்றாகவே அனுராதபுரத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அனுராதபுரம் இலங்கையின் மிகப் பெரிய மாவட்டம். 2200 வருடங்களுக்கு முன்னர் மகாவம்சம் போற்றும் தமிழரசனான எல்லாளன் ஆட்சிசெய்த தமிழ்நிலம். தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த இடம். காலங்காலமாக மேற்கொள்ளப்பட்ட அரச ஆதரவுக் கலவரங்கள் மூலம் சிங்களவர்களின் கைக்குமாறியது.

  1. மட்டக்களப்பு – அம்பாறை இனப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

இலங்கை சுதந்திரமடைந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்களின் சதவீதம் 3 மடங்கால் அதிகரிக்க தமிழர் மற்றும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மாற்றமின்றியிருந்தமையை புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கைகள் தெளிவாகக் காட்டுகின்றன. 1963 இல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பிற்கு முன்பாக 1961 இல் 7002 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 4500 சதுர கிலோமீற்றர் நிலமானது பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. 15000 சிங்களக் குடும்பங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட அம்பாறை  மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டார்கள். அம்பாறை மாவட்டத்தில் தமிழரது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்த இரு நீர்ப்பாசனத் திட்டங்களும் குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்களது பயன்பாட்டுக்கே வந்தன.

1881 – 1981 வரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்ட குடிப்பரம்பல்களின் தரவு

Singala colonisation East இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் - ஒரு வரலாற்று நோக்கு - பிஞ்ஞகன்2007 இல் உள்ள தரவுகளின்படி அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகையில் 60 சதவீதமாக இருந்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் 30 சதவீதமான நிலத்தையே உரிமையாகக் கொண்டிக்க சனத்தொகையில் 30 சதவீதமான சிங்களவர்கள் மாவட்டத்தின் 70 சதவீதமான நிலத்தை உரிமையாகக் கொண்டிருக்கின்றமையக் காணலாம்.

இன்று 2009 மே இற்குப் பின்னர்  அம்பாறையில் சிங்களவர்கள் முஸ்லீம்களின் காணிகளை அத்துமீறிக் கைப்பற்றி வர அங்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் சிங்களவர்களை எதிர்க்காமல் தமிழர்களின் காணிகளைக் கைப்பற்றி வருகிறார்கள்.

மகிந்தா பக்கம் திரும்பும் மேற்குலகம் – கருணை காட்டுவாரா மகிந்தா?

சிறீலங்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று (11) எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஸபக்சாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி தெப்லிஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜி.எல் பீரீஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.

சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மேற்குலகம் பல நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. மகிந்தவின் சகோதரர் கோத்தபாயா வருவதை மறைமுகமாக எதிர்த்த அமெரிக்கா அவர் மீதான வழக்குகளுக்கு அனுசரணையை வழங்கியிருந்தது.

ஆனாலும் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ள கோத்தபாய அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் மகிந்தா தரப்பை தன்னவசப்படுத்தம் காய்நகர்த்தல்களை மேற்குலகம் மேற்கொண்டு வருகின்றது.

அதற்கு ஏதுவாக கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டின் இராஜதந்திரி ஒருவர் மகிந்தாவை தனியாக சந்தித்திருந்தார். இந்த சந்திப்புக்களை பீரீஸ் மறைமுகமாக ஏற்பாடு செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

சீனாவை கடும் புயல் தாக்கியதில் 22 பேர் பலி, மில்லியன் மக்கள் இடம்பெயர்வு

சீனாவை லெகிமா எனப் பெயரிடப்பட்ட புயல் காற்று தாக்கியதில் 22 பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சீனா தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயல் காற்றினால் நேற்று (10) காலை இடம்பெற்ற நிலச்சரிவிலேயே பலர் கொல்லப்பட்டதுடன், 10 பேர் காணாமல் போயுள்ளனர். தாய்வானுக்கும் சீனாவின் பொருளாதார நகரமான சங்காய் நகருக்கும் இடையில் உள்ள வென்லிங் பகுதியிலேயே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த புயல்காற்று கடுமையாக இருக்கும் என முதலில் கணிக்கப்பட்டபோதும், பின்னர் அதன் தாக்கம் குறைந்ததால் அதிக சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புயல் வடபகுதியை நோக்கி சிஜிஜாங் பகுதி ஊடாக நகர்ந்துவருகின்றது. இது 20 மில்லியன் சனத்தொகையை கொண்ட சங்காய் நகரை தாக்கலாம் என கருதப்படுகின்றது.

மீட்பு பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டுவருவதாகவும், வெள்ளம், வீழ்ந்துள்ள மரங்கள், கட்டிட இடிபாடுகள் மற்றும் மின்சாரத் தடை என்பன அவர்களின் பணிக்கு தடையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களுக்கு தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தேவை

இப்போது ஜனாதிபதித் தேர்தலைக் கையாள தமிழர்கள் புதிய யோசனைகளைக் கொண்டு வர வேண்டும். நாம் புறக்கணித்தால், ஜனநாயக வழிமுறையில் பங்கேற்காததற்கு மேற்கு நாடுகள் தமிழர்களைக் குறை கூறும் என வவுனியா பகுதியை சேர்ந்த காணாமல் ஆக்கப்படடோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உண்மையான தமிழ் ஜனாதிபதி வேட்பாளருடன், இந்த ஜனாதிபதித் தேர்தலில் பங்கேற்பதன் மூலம், நாங்கள் எங்களை பலப்படுத்துகிறோம், நமது ஜனநாயக விழுமியங்களை நமக்குள் வைத்திருக்கிறோம். நாங்கள் UNP அல்லது SLFP க்கு விலைபோகவில்லை என்று சர்வதேசத்திடம் கூறுகின்றோம். வலுவான வழியில், நாங்கள் எங்கள் இறையாண்மை தேவை என்று சொல்கிறோம்.

எனவே, வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு தமிழ் வேட்பாளரை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

பின்வருவன பற்றி நாங்கள் சிந்திப்பதற்க்கான சிறந்த விடயம்:

1. தமிழர்களின் அரசியல் தேவைகளை சரியாக வெளிப்படுத்தக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் பங்கேற்க எங்களுக்கு இளம் தமிழர் தேவை.

2. ஜனாதிபதி பிரச்சாரத்திற்காக காங்கேசன்துறையில் இருந்து கல்முனை வரை அடிக்கடி பயணிக்க முடிந்த தமிழர் தேவை

3. தென் சூடான், கொசோவோ, போஸ்னியா, கிழக்கு திமோர் போன்ற புதிதாக உருவான நாடுகளின் கடந்தகால அரசியலைப் புரிந்து நடந்து கொள்ளக்கூடியவர் தேவை .

4. வடகிழக்கில் தமிழர்கள் ஆட்சியின் விழிப்புணர்வையும் பயனையும் தமிழ் மக்களுக்கு புரியவைக்க கூடியவர் தேவை.

5. தமிழர்களின் இறையாண்மையின் முக்கியத்துவத்தையும் தமிழர்களின் தேசியவாதத்தையம் மீண்டும் கொண்டுவர கூடியவர் தேவை

6. தந்தை செல்வாவின் கீழ் நாம் அனைவரும் கொண்டிருந்த அரசியல் கலாச்சாரத்தை கொண்டு வரக்கூடியவர் தேவை . அதாவது நேர்மை மற்றும் நற்பெயர் கொண்ட , உண்மைத்தன்மை, ஊழல் அல்லாதவை உள்ளவர் தேவை .

7. அவருக்கு வாக்களிக்க தமிழர்களிடையே ஒரு உற்சாகத்தை கொண்டு வர கூடியவர் தேவை. தமிழ் ஜனாதிபதி வேட்பாளரை தமிழர்கள் நேசிக்க வேண்டும்

8. சர்வதேச சமூகங்களுடன் பேச சரளமாக ஆங்கிலம் பேச கூடியவர் தேவை

9. தமிழர்களின் அரசியல் தேவைகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்க கூடியவர் தேவை

தமிழர்கள் உலகிற்கு தமக்கு ஏன் சுய ஆட்சி வேண்டியதன் அவசியத்தை அம்பலப்படுத்த நாம் ஜனாதிபதி பிரச்சாரத்தைப் பயன்படுத்தவேண்டும் .

சிங்களவர்களிடமிருந்து தமிழர்கள் வேறுபட்டவர்கள் என்பதை அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் காட்ட இந்த தேர்தல் ஒரு நல்ல நேரம். தமிழர்கள் தனியாக வாழ விரும்புகிறார்கள் என்பதை ஒரு தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் காண்பிப்பார். தமிழர்கள் முஸ்லீம்களைப் போன்றவர்கள் அல்ல, தமிழர்கள் தங்கள் சுய ஆட்சியில் ஆர்வம் காட்டுபவர்கள், முஸ்லீம் தலைவர்களைப் போல பணத்தில் ஆர்வம் காட்டுவதில்லை.

முதலில், தமிழர்களின் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிறுத்த வேண்டும். ஜனாதிபதி வேட்பாளரிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணம் சம்பாதிக்கிறது. இது இரண்டு முறை நடந்தது.

கடந்த இரண்டு இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில், தமிழர்களை அரசியல் விபச்சாரிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்தியது.

சம்பந்தன் கூட்டம் ஒரு கிங்மேக்கர் அல்ல, பணத்திற்காக தமிழர்களின் வாக்குகளை விற்கும் மாமாக்கள்.

சம்பந்தன் ஒரு திருடன் மற்றும் ஒரு நோயியல் பொய்யர்.

2019 ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு ஒரு தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் தேவை, எனவே இந்த வேட்புமனுக்காக மணிவண்ணன் அல்லது காண்டீபன் ஆகியோரை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

யாழ் போதனா வைத்தியசாலை ஸ்கேனர் இயந்திரம்; குழப்பங்களுக்கு விளக்கம்

அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம். ஆர். ஐ ஸ்கேனர் (MRI – Magnetic Resonance Imaging) மற்றும் சி.ரி ஸ்கேனர் (CT – Computerized Tomography) வாங்கப்படுவதாக வெளிவந்த செய்தி பற்றி பொதுமக்களுக்குத்  தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாக யாழ், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ், போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட பகுதியில் வசிக்கும் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட  மக்களது பிரதான வைத்திய சேவையைப் பூர்த்தி செய்யும் ஒரே ஒரு  மூன்றாம் நிலை வைத்தியசாலையான யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம். ஆர். ஐ ஸ்கானரைப் பெற்றுக் கொள்வது என்பது நீண்டகாலக் கனவாகவே இருந்து வந்தது.

ஜப்பானிய அரசு யாழ் போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களுடன் வழங்கிய 3 தளங்களைக் கொண்ட மத்திய செயற்பாட்டுக்கான கட்டடத் தொகுதி – நவீன சத்திர சிகிச்சைக் கூடம், ஆய்வு கூடம், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு , எக்ஸ் கதிரியக்க பரிசோதனை முதலான பல நிழற்பட வசதிகளுடன் (Imaging facilities) 2012 முதல் இயங்கி வருகின்றது.

நாட்டில் யுத்தம் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி நிலவிய 2005 காலப்பகுதியில் இத்திட்டம் (ஜய்க்கா – JICA)  முன்மொழியப்பட்டது.  எனினும் நாட்டில் மீண்டும் ஏற்பட்ட யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னர் இத்திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. 2010 இல் யப்பான் நாட்டு அமைச்சரவை இத்திட்டத்தை அங்கீகரித்தது. 2010 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானம் 2012 யூனில் நிறைவு பெற்றது. யப்பான் நாட்டு மக்களது நன்கொடையில் (இலங்கை ரூபா 2900 மில்லியன்) கிடைத்த இத்திட்டம் வடபகுதி மக்களுக்கு ஒரு வரப் பிரசாதமே. இலங்கையில்  உள்ள மிகச் சிறந்த ஆய்வு கூடங்களில் (Laboratory ) ஒன்று இக்கட்டடத் தொகுதியில் 24 மணிநேரமும் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கட்டடத் தொகுதியானது நவீன ஆய்வுகூட உபகரணங்கள், சத்திரசிகிச்சைக் கூட உபகரணங்கள் , அதிதீவிர சிகிச்சைக் கூட உபகரணங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது. இத்திட்டத்தில் எம். ஆர். ஐ ஸ்கானரை வழங்குவது உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

நான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்பாளராக 2015 ஒக்ரோபரில் நியமனம் பெற்றேன். அனைவருடனும் இணைந்து வைத்தியசாலையின் அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றுவது குறித்து பல்வேறு திட்டங்களை முன்னேடுத்து வருகின்றேன்.

மத்திய அரசாங்கம் யாழ். போதனா வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளதுடன் பல திட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றது.

6 தளங்களைக் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் முதல் 2 தளங்களும் பூர்த்திய செய்யப்பட்டு – 590 மில்லியன் ரூபா பெறுமதியான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு இந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டு – உயர்தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.  மிகுதி 4 தளங்களுக்குரிய ரூபா 1300 மில்லியன் நிதி, அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டு கட்டட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

குவைத் நாட்டின் மக்களது நன்கொடையில் – ரூபா 530 மில்லியன் திட்டப் பெறுமதியில் – அமைக்கப்பட்ட 3 தளங்களைக் கொண்ட மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் (Rehabilitation Centre) கடந்த 25.07.2019 அன்று யாழ். போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது. 11 மாதங்களில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்போது இலங்கையில் வேறு எந்த வைத்தியசாலையிலும் காணப்படாத வசதிகள் – முதுமை , மற்றும் விபத்துக்களால் உடல் அவயவங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்குரிய வசதிகள், உபகரணங்கள் மற்றும் செயற்கை அவயவங்கள் உருவாக்கும் தொழிற் கூடம், உடற்பயிற்சிக் கூடம் முதலானவை  இக்கட்டடத் தொகுதியில் உள்ளன. இன்னும் சில வாரங்களில் இது இயங்கத் தொடங்கும்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு எம். ஆர். ஐ ஸ்கேனர் வாங்குவதுக்காக கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இதற்கான தொழிநுட்பப் பெறுகைக் குழுவை சுகாதார அமைச்சு நியமித்தது. அரச நடைமுறைகளுக்கு அமைவாக சுகாதார அமைச்சு இதனை வாங்கி யாழ். போதனா வைத்தியசாலைக்கு வழங்க உள்ளது.

சுகாதார அமைச்சு எம்.ஆர். ஐ ஸ்கேனர் ஐ வாங்குவதுக்காக இவ்வாண்டு நிதியும் ஒதுக்கியுள்ளது. இவ்வருட இறுதியில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர். ஐ ஸ்கேனர் கிடைத்து விடும்.  பராமரிப்புச் செலவுடன் இதன் பெறுமதி ரூபா 375 மில்லியன் ஆகும். எம்.ஆர். ஐ ஸ்கேனர்  அரச நிதியிலேயே முழுமையாக எமக்குக் கிடைக்க உள்ளது. இதற்காக நாம் எவரிடமும் நிதி சேகரிக்கவில்லை.

மேலும் இந்த ஆண்டு பாதீட்டில் அரசாங்கம் யாழ் போதனா வைத்தியசாலையின் ஒரு பிரிவாக அமையவுள்ள சிறுவர் வைத்தியசாலைக்காக ரூபா 850 மில்லியனை ஒதுக்கியுள்ளதுடன் , ஜய்க்கா கட்டடத் தொகுதியின் ஆய்வுகூட 4 ஆவது தள விரிவாக்கத்துக்காகவும் நிதியினை ஒதுக்கியுள்ளது.

அதேவேளை யாழ். போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்பில்  ஒரு சி.ரி. ஸ்கேனர்  அடுத்த மாதம் பெறப்பட இருக்கிறது.

மேற்குறிப்பிட்ட நன்கொடையில் கிடைக்கின்ற சி.ரி. ஸ்கேனர், அரசினால் கொள்வனவு செய்யப்பட்டு கிடைக்க உள்ள எம். ஆர். ஐ ஸ்கேனர்  ஆகிய இரு விடயங்கள் குறித்தும் மாறுபட்ட கருத்துக்கள் சமூகவலைத் தளங்களில், ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.

கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் பி. ரஞ்சன் (ஐக்கிய இராச்சியம்) அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது யாழ். போதனா வைத்தியசாலைக்கு சி.ரி. ஸ்கானரின் அவசர தேவைப்பாடு குறித்து கேட்டு அறிந்து கொண்டார். தற்போது வைத்தியசாலையில் பாவனையில் இருக்கின்ற சி.ரி. ஸ்கேனர்  9 வருடங்கள் பழைமை வாய்ந்தது. அத்துடன் அடிக்கடி பழுதடைந்து அதன் செயற்பாடு தடைப்படுகின்றமையால் நோயாளிகள் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலையைப் பொறுத்தவரை 2 சி.ரி. ஸ்கேனர்கள் இருப்பது மிகவும் அவசியமானதாகும். ஆகவே இன்னொன்றை அரச நிதியினூடாகப் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். அரச நிதியில் கோரப்பட்டுள்ள சி.ரி. ஸ்கேனர் எமக்குத் தாமதமாகவே கிடைக்கும்.

ஆகவே நன்கொடையாளர்களின் உதவியில் சி.ரி. ஸ்கேனர் ஒன்றை விரைவாகப் பொருத்தும் முயற்சியில் வைத்தியசாலை நிருவாகம் ஈடுபட்டு வருகின்றது.   ரஞ்சன் அவர்கள் 46 மில்லியன் ரூபா நிதியுதவியை நன்கொடையாக வழங்கி இந்தக் கைங்கரியத்தை ஆரம்பித்து வைத்தார். அத்தோடு பல்வேறு அமைப்புக்களை, ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா சுவிற்சர்லாந்து, இலங்கை முதலான நாடுகளில் உள்ள நன்கொடையாளர்களை இணைப்பதிலும் ரஞ்சன் பிரதான பங்கை வகித்து வருகின்றார்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பில் பல மாதங்களுக்கு முன்னர் சுவிற்சர்லாந்தில் வசிக்கும் எஸ்.கதிர்காமநாதன் (எஸ்.கே.நாதன்) அவர்களைத் தொடர்பு கொண்டபோது நிதியுதவி செய்வதாகக் கூறியிருந்தமை எமக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அண்மையில் (கடந்த வாரம்) கதிர்காமநாதன் அவர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து சி.ரி. ஸ்கேனர் ஐக் கொள்வனவு செய்வதுக்காக ரூபா 20 மில்லியனை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிவரும் அபயம் தொண்டு நிறுவனமும் சி.ரி. ஸ்கேனர் கொள்வனவு செய்வதுக்கு நிதிப்பங்களிப்பைச் செய்ததுடன்  ஆரம்பம் முதலே ரஞ்சன் அவர்களுடன் இணைந்து ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நன்கொடையாளர்களை ஊக்குவித்து அனுசரணையும் வழங்கி வருகின்றது.  நன்கொடையாளர்களிடம் இருந்து கிடைக்கின்ற  நிதியானது யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் (Jaffna General Hospital Development Association) வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படுகின்றது.

விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் ஒப்புதலோடு தரமான (160 ஸ்லைஸ்) சி.ரி. ஸ்கேனர் ஐ ஜப்பானில் இருந்து தருவிப்பதுக்காக ரூபா 50 மில்லியன் நிதி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் முற்பணமாக வழங்கப்பட்டது.

வரும் செப்ரெம்பர் மாதமளவில் நவீன சி.ரி. ஸ்கேனர் இயந்திரம் எமது வைத்தியசாலையை வந்தடையும். புதிய சி.ரி. ஸ்கேனர் கிடைத்ததும் அதன் சேவைகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும். இந்த நற்காரியத்துக்குப் பங்களித்த தனிநபர்கள், அமைப்புக்களின் பூரண விவரங்கள் ஆரம்ப வைபவத்தின் போது வெளியிடப்படும் என்பதையும் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

இந்த நவீன சி.ரி. ஸ்கேனர் இயந்திரம் 112.5 மில்லியன் ரூபா பெறுமதியானதாகும். தற்போதுவரை சுமார் 110 மில்லியன் ரூபாய்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில்,  அச்சு ஊடகங்களில் எம்மைத் தொடர்பு கொள்ளாது வெளிவரும் செய்திகள் குறித்து பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். சி.ரி. ஸ்கேனர் ஐக் கொள்வனவு செய்வதுக்கு நிதிப்பங்களிப்போ அன்றி அனுசரணையோ செய்யாதவர்கள் சமூக ஊடகங்களில் பிரசாரப்படுத்துவததையும் காணக் கூடியதாக உள்ளது.

உண்மைக்குப் புறம்பான, குழப்பகரமான செய்திகளை வெளியிடுவதை குறித்த தனிநபர்களும் ஊடகங்களும் நிறுத்திக் கொள்வது இவ்வாறான நற்காரியத்தைச் விரைவாகச் செய்வதுக்கு வழிவகை செய்யும்.

வைத்தியசாலையில் இன்னும் பல அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக தனியான ஒரு மகப்பேற்று விடுதி இல்லாதது மிகவும் கவலைக்குரியதாகும். பழைய மகப்பேற்று விடுதி அபாயநிலையில் காணப்பட்டதால் அது அகற்றப்பட்டு மகப்பேற்று விடுதிக்குரிய நிலம் பல வருடங்களாக வெறுமையாக உள்ளது.

இந்த வேளையில் நவீன சி.ரி. ஸ்கேனர் இயந்திரம் வைத்தியசாலைக்குக் கிடைப்பதுக்குக் காரணமான பிரதான நன்கொடையாளர்களான பி. ரஞ்சன் (ஐக்கிய இராச்சியம்), எஸ். கதிர்காமநாதன் ஆகியோருக்கும் ஏனைய நன்கொடையாளர்களுக்கும், மற்றும் அமைப்புக்களுக்கும் வைத்தியசாலையின் சார்பிலும் வட பகுதி மக்களின் சார்பிலும் நன்றியைத் தெரிவிப்பதோடு ஐக்கியராச்சியத்தில் இயங்கும் அபயம் நிறுவனத்துக்கும், யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி

போர்க்குற்ற விசாரணை, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நீதி உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து செப்டெம்பர் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடத்தப்படும் என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை நடத்துவது தொடர்பான ஆரம்பக் கூட்டம் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எழுக தமிழ்” எழுச்சிப் பேரணியை நடத்துவது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிவிப்பு பல்வேறுமட்டங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக உணர்கின்றேன்.

தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய ஒரு நிகழ்வை நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும் அவசரமானது என்றும் இந்த அறிவிப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் பல்கலைக்கழக சமூகம் முதல் தொழிலாளர் அமைப்புக்கள் வரை எம்மிடம் நேரடியாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி எமது இந்த நிகழ்வை நடத்துவதற்கு ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே இருக்கின்றது. நிகழ்வுக்கான ஏற்பாட்டுக் குழு ஒன்றை நாம் இன்றே உருவாக்கிப் பொறுப்புக்களை பகிர்ந்துகொள்ளவேண்டும்.

நாம் இந்த நிகழ்வை மேற்கொள்ளும் காலம் மிகவும் முக்கியமானது. ஒன்றன் பின் ஒன்றாக தேர்தல்கள் வரும் நிலையில் தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகள், மனோநிலை மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பது மிகவும் அவசியமானது. அதி அவசரமான கோரிக்கைகளையே உடனடியாக முன்னிறுத்த உள்ளோம். ஆகவே, கடந்த முறையைவிட கூடுதலான மக்களை இம்முறை நாம் அணிதிரட்டவேண்டும்.

கிழக்கு மற்றும் ஏனைய இடங்களில் நாம் தொடர்ந்து செய்யவிருக்கும் “எழுக தமிழ்”பேரணிக்கு எமது முதலாவது பேரணி நிகழ்வு உத்வேகம் ஊட்டும் வகையில் அமையவேண்டும்.

முன்னைய“எழுகதமிழ்”பேரணிகள் நடக்கும் போது நாம் பலர் உத்தியோக பதவியில் இருந்தோம். எமக்குப் பதவி வழி அரச அங்கீகாரமும் பாதுகாப்பும் தரப்பட்டன. இம்முறை நாம் அவ்வாறான அரச அங்கீகாரத்துடன் கூட்டத்தில் ஈடுபட முடியாது.

எனவே எமது மக்களின் பாதுகாப்பு விடயங்கள் எத்தகைய அரச அங்கீகாரத்துடன் நடைபெறப் போகின்றன என்பதை நாம் பரிசீலித்துப் பார்த்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

அண்மைய உயிர்த்த ஞாயிறு நடவடிக்கைகளால் நல்லூர் ஆலயத்தில் கூட பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பேரவைக்கு ஏதேனும் பாதுகாப்புத் தடைகள் விடுக்கப்படுமா என்பதில் நாம் கவனம் செலுத்தவேண்டும்.

எங்கள் பேரணியில் தமிழ் மக்களின் மாபெரும் சக்திகளாக விளங்கும் அனைத்துப் பொது அமைப்புக்கள், சமூகநிறுவனங்கள், மத பீடங்கள்,மேற்கத்தைய மற்றும் சுதேச வைத்திய சங்கங்கள், சட்டத்தரணிகள் சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், ஆசிரிய அமைப்புக்கள், மாணவ அமைப்புக்கள், தமிழர் மரபுரிமைப் பேரவை, தொழிற் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள்,விவசாய,கடற்றொழில் சங்கங்கள்,சமாசங்கள்போன்ற அனைத்து அமைப்புக்களும் கட்சி பேதமின்றி செம்ரெம்பர் 16 ஆம் திகதி ஒற்றுமையாய் ஒருங்கு சேரவேண்டும்.

யாவரும் திரண்டெழுந்து தமிழர்களின் எழுச்சிப் பிரவாகத்திற்கு வேகம் கொடுக்க நீங்கள் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். இங்குள்ள நீங்கள் ஒவ்வொருவரும் எம் மக்களை செப்டெம்பர் 16ஆம் திகதிய பேரணியுடன் இணைக்கப் போகும் இணைப்புப் பாலங்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆட்சியாளர்களால் இதுவரை கவனிக்கப்படாத ஆறு விடயங்கள் எமது பேரணியில் வலியுறுத்தப்பட இருக்கின்றன.

அவையாவன,

எமது பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும். இவை சம்பந்தமான மகாவலி அபிவிருத்திச் சபையின் செயல்கள் ஆராயப்பட்டு சபையின் நடவடிக்கைகள் வடகிழக்கைப் பொறுத்தவரையில் உடன் நிறுத்தப்படவேண்டுமா என்பது பரிசீலிக்கப்படவேண்டும்.

சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்குநிலை மாற்றப்பட்டு உடனே சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். அவர்கள் யாவரும் சர்வதேச சட்டக் கொள்கைகளுக்குப் புறம்பான சட்டமொன்றினால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டவர்கள் என்பதை உலகறியச் செய்யவேண்டும். குறித்த சட்டம் இன்னமும் கைவாங்கப்படவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடைபெறவேண்டும். பல மாதக் கணக்கில் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு குறித்த ஒருகாலத்தினுள் விசாரணைகள் நடைபெறும் என அரசினால் உத்தரவாதங்கள் வழங்கப்படவேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களை இராணுவமயமாக்கல் நிறுத்தப்படவேண்டும். தற்போது இலங்கை இராணுவத்தின் மூன்றில் இரண்டு பங்கு வடகிழக்கு மாகாணங்களிலேயே முகாம் இட்டுள்ளனர் என்று தெரிய வருகின்றது.

இடம்பெயர்ந்த எம் மக்கள் அனைவரும் அவரவர்களின் பாரம்பரிய காணிகளில் மீள்குடியமர்த்தப்படவேண்டும்.

மேற்கண்ட ஆறு விடயங்களே எமது பேரிணியில் முக்கியமாக கூறப்படப் போகும் விடயங்கள். எமது அரசியல் தேவைகளை ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவை தமது அரசியல் முன் மொழிவுகள் ஊடாக யாவருக்கும் தெரியப்படுத்தியுள்ளது. அவற்றை நாங்கள் இனிவரும் “எழுகதமிழ்”பேரணியில் வலியுறுத்துவோம்.

எமது பதாகைகள், சுவரொட்டிகள் ஆகியன மேற்கண்ட ஆறு விடயங்களை இப்போதைக்கு வலியுறுத்தினால் போதும் என்று நினைக்கின்றோம். ஏந்தப் படப் போகும் பதாகைகள், மற்றும் ஒட்டப்படப் போகும் சுவரொட்டிகள் எமது தணிக்கைக் குழுவொன்றினால் பரிசீலிக்கப்பட்டே அனுமதிக்கப்படவேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் நிற்கப் போகும் வேட்பாளர்கள் மேற்படி ஆறு விடயங்களையும் இலகுவாக அனுமதிக்க முடியும். அவற்றைச் செய்யுமாறு நாம் அரசை, ஜனாதிபதி வேட்பாளர்களை வேண்டுவது எல்லாவிதத்திலும் நியாயமானது. எனவே இவற்றை இம்முறை வலியுறுத்துவோமாக!

சிலர் எமது பேரணியில் சேரவிருப்போரைத் தடுக்கக் கங்கணம் கட்டியுள்ளதாக அறிகின்றேன். ஆனால் சுயநல காரணங்களுக்காக, கட்சிநலம் சார்ந்து இவ்வாறான தீர்மானங்களை யார் எடுத்தாலும் அது எமது மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே அமையும். நாம் இங்கு கட்சிகளை வளர்க்க முற்படவில்லை. மக்களை ஒன்று சேர்த்து அரசியல் ரீதியாகப் போராடவே ஒன்றுபடுகின்றோம்.

ஒன்றுபட்டு எமது இன்னல்ப்படும் மக்களின் விடிவிற்காகப் போராட நினைத்துள்ளோம். ஆகவே எமது பேரணியை இவ்வாறாகக் குழப்ப எத்தனிப்போர் சம்பந்தமாக விழிப்பாக இருங்கள். எமக்கு ஒத்துழைப்பு நல்காவிட்டாலும் பரவாயில்லை; உபத்திரவம் தராது இருங்கள் என்று அவர்களிடம் நல்லமுறையில் கூறிவையுங்கள்.

எமது தமிழ் மக்களின் வருங்காலம் என்பது இப்பேர்ப்பட்ட சிந்தனையுடையவர்களையும் உள்ளடக்கும். நாம் போராடுவது அவர்களுக்காகவும்தான் என்பதை எவரும் மறத்தல் ஆகாது. அந்தவகையில் அவ்வாறான சிந்தனைகள் எவருக்காவது இருக்குமானால் அவற்றைப் புறந்தள்ளிவைத்து எம்முடன் சேர்ந்து பயணிக்க அவர்களை உள்ளன்புடன் அழைக்கின்றோம்.

இன்றிலிருந்து நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கடமையறிந்து, குறிக்கோள் அறிந்து ஒட்டுமொத்த வடகிழக்கு தமிழ் மக்கள் சார்பில் உங்களால் இயலுமானமட்டில் ஆதரவு வழங்குவீர்களாக என்று கோரி அடுத்து எமது ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடமுற்படுவோமாக என்றார்.

யாழ் நூலகத்தை எரித்தவரின் புதல்வர் யாழ் பயணம் – தேர்தல் திருவிழா ஆரம்பம்

பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கைத்தொழில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸநாயக்கவும், அவரின் குழுவினரும் (10.08) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

காலையில் நாகவிகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். தங்கள் விஜயத்தை நினைவுபடுத்தும் வகையில், நாகவிகாரை வளாகத்தில் தென்னை மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

அதனைத்  தொடர்ந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் யாழ். நாகவிகாரையின் விகாராதிபதி சாஸ்ரபதி கொங்கல ஸ்ரீ தர்மதேரோவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது நாகவிகாரையின் தேவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

நவீன் திஸநாயக்காவின் தந்தை காமினி திஸநாயக்க, இவர் சிறிலங்கா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த போதே யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அத்துடன் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த வேளையிலேயே மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்களவர்களுக்கு வழங்கினார். குறிப்பாக முல்லைத்தீவின் எல்லை கிராமங்களை ஆக்கிரமித்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

தமிழ் தேசிய முன்னணி முல்லை மாவட்ட அமைப்பாளருக்கு கொலை மிரட்டல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜனுக்கு கிராமசேவையாளர் ஒருவரால் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதுடன் அவரின் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சேவையாளர் தன்னை கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளார்.

TNPF let தமிழ் தேசிய முன்னணி முல்லை மாவட்ட அமைப்பாளருக்கு கொலை மிரட்டல்நீண்ட நாட்களாக குறித்த கிராம சேவையாளர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளருக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்துள்ளதாகவும் போலி முகநூல் ஒன்றினை இயக்குவதாகவும் அதனூடாக தன்னுடன் தொடர்புபட்ட விடயங்கள் வெளியிடப்படுவதாகவும் குற்றம் சாட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியுன் அரபு மொழி கற்ற புலனாய்வு அதிகாரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியாகிய தற்கொலைதாரி ஜமால்தீன் என்பவர், முஸ்லிம் தீவிரவாதிகளை விசாரிக்கும் கியூ பிரிவில் பணியாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவருடன் இணைந்து அரபு மொழியை கற்றதாக அறிய முடிகின்றது

அத்துடன் தாக்குதலுக்கு முன்னதாக குறித்த புலனாய்வு அதிகாரி குருநாகலில் உள்ள சஹ்ரான் மனைவி வசித்த வீட்டிற்கு சென்று வந்தமை தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 26 அன்று காத்தான்குடி சாய்ந்தமருது பகுதியில் ஒரு வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்த இரண்டு பெண்கள், குறித்த புலனாய்வு அதிகாரி சென்ற குருநாகல் வீட்டில் வசித்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

விசாரணையில் ஈடுபட்ட குறித்த புலனாய்வு அதிகாரி தன்னுடன் அரபு மொழி கற்ற தற்கொலைக் குண்டுதாரியின் நடவடிக்கைகள் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.