Home Blog Page 2409

காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா

காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா இன்று காலை வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் இடம்பெற்றது.

கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் காரைக்கவி கந்தையா பத்மாநந்தனின் பத்து நூல்களின் அறிமுக விழா இன்று வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் இடம்பெற்றது.

இதன் போது கலைநிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததோடு, இந்நூல்களின் அறிமுக உரையினை வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியின் உபபீடாதிபதி பொ.சத்தியநாதனால் நிகழ்த்ததப்பட்டதோடு, நூல்களின் நயவுரைகளை கலாநிதி தமிழ்மணி அகளங்கன், தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி நேலோமி அன்ரனி குரூஸ், தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் ச.பவானந்தன் ஆகியோரால் நிகழ்தப்பட்டதுடன், ஏற்புரையினை நூலாசிரியர் காரைக்கவி கந்தையா பத்மானந்தால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
DSC09355 காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா

DSC09291 காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா

DSC09296 காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி தி.ஜெயகாண்டீபன் தலைமையில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கல்வியற் கல்லூரி முன்னாள் பீடாதிபதி க.சுவர்ணராஜா, ஒளிரும் வாழ்வு அமைப்பின் தலைவர் ஜெகநாதன் சுதாநாதன், கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் பெருந்தலைவர் வே.இறைபிள்ளை மற்றும் கல்வியளாளர்கள், கலைஞர்கள் எனபலரும் கலந்துகொண்டிருந்தனர்.

சர்ச்சைக்குரிய வீடு! சிக்கலில் ரிசாத் பதியூதீனின்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் வங்கிக் கணக்கு அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரிசாத்தின் மனைவி மற்றும் அவரின் சகோதரர்களுள் ஒருவரான ரியாஜ் பதியுதீனின் வங்கிக் கணக்கு அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆவணங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படும் வெள்ளவத்தை வீடு தொடர்பான வழக்கு விசாரணையின் முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் இராணுவ ஆட்சியாக மாறிவருவதாக நளின் பண்டார சாடல்

ஸ்ரீலங்காவில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும் நோக்கிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பில் நேற்றைய தின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

“சேவை தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கிடையில் முரண்பாட்டினைத் தோற்றுவிக்க அரசாங்கம் முற்படுகின்றது.

போக்குவரத்து சேவையில் பொலிசாருடன் இராணுவ பொலிசாரும் இணைத்துக் கொண்டுள்ளமைக்கான நோக்கமென்ன? பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிசார் வீதிப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இராணுவப்பொலிசாரையும் சேவையில் இணைத்து அவர்களுக்கு மாத்திரம் விசேட சலுகைகளை வழங்குவதனால் இருதரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றும் வாய்ப்புக்கள் ஏற்படும்.

நாட்டில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும் நிலைப்பாட்டியேலே அரசாங்கம் செயற்படுகின்றது. அதிலொரு அங்கமாகவே இச் செயற்பாட்டினைக் கருத முடியும்.

எயார் பஸ் கொள்வனவின் போது இடம் பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் நம்பகத்தன்மை அற்றுப்போயுள்ளது. இந்த மோசடியுடன் மஹிந்த குடும்பத்தினரும் தொடர்பு பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த மோசடி தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் . அத்துடன், மஹிந்த தரப்பினர் 2015 இற்கு முன்னராக நாட்டு மக்களை ஏமாற்றியதைப் போன்றதான நடவடிக்கைகளையே இப்பொழுதும் இடம்பெற்று வருகின்றது” என்றார்.

நடமாடும் நீதிமன்ற நடவடிக்கையை ஏற்படுத்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முடிவு

மாதத்தில் இரண்டு தடவை வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்ற நடவடிக்கை ஏற்படுத்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ன தலைமையில் வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது முன்னர் வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் நடமாடும் நீதிமன்றம் இயங்கியது. ஆனால் யுத்த நடவடிக்கைகள் காரணமாக அது பின்னர் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மாதத்தில் இரண்டு நாட்கள் வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்றத்தை ஏற்படுத்தி தருமாறு கிராம மட்ட பொது அமைப்புக்கள் உதவிப் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதனை குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானத்திற்காக முன்வைக்கப்பட்ட போது இது தொடர்பான கருத்துக்களை ஏற்றுக் கொண்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்றத்தை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியதுடன், அதனை ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இத் தீர்மானத்தின் அடிப்படையில் உதவிப் பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட நீதிபதிகளுடன் பேசி குறித்த விடயத்தை முன்னகர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

பூநகரியில் பாரிய கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது.

323 கிலோ எடைகொண்ட 117 கஞ்சா பொதிகளை ஏற்றிச் சென்ற ரிப்பர் வாகனத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி வலைப்பாடு ஊடாக பாரிய கஞ்சா கடத்தல் இடம்பெறுகின்றமை தொடர்பாக கிடைத்த தகவலிற்கமைவாக இன்று (29) அதிகாலை 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே ரிப்பர் வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் வவுனியா மரதன்குளம் பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரையும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளும் நாச்சிக்குடா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவர் மீது கிராம சேவகர் தாக்குதல்

ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவர் க. பார்த்தீபன் மீது நேற்றைய தினம் கிராம சேவகரொருவர் தாக்குதல் நடத்தியதியதாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் அலியார் மருதமடு குளத்தின் கிழ் செய்;கை பண்ணப்படும் வயல் நிலங்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் தலைமையில் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன் போது ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவரின் தலைப்பகுதியில் காயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (28.2)அலியார் மருதமடு குளத்தின் கிழுhன வயல் நிலத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது தொடர்பிலான கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவரும் குறித்த குளத்தின் பங்காளருமான க. பார்த்தீபன் குறித்த கிராமத்தின் கிராம சேவகரை கூட்டத்தில் இருக்க கூடாது எனவும் அவரே கிராமத்தில் பிரச்சனைகளை உருவாக்குகின்றார் என தெரிவித்ததுடன் அவர் ஊடகங்களுக்கு எவ்வாறு கருத்து தெரிவிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கிராம சேவகருக்கும் ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவரும் குறித்த குளத்தின் பங்காளருமான க. பார்த்தீபனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பார்த்தீபன் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில் இருவரும் சபையினருக்கு முன்பாக பிரதேச செயலாளருக்கு முன்பாகவே தள்ளுப்பட்டுள்ளனர்.

இதன்போது பார்த்தீபனின் தலையில் சுவர்ப்பகுதி பட்டமையினால் காயமேற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கிராம சேவகரும் தக்கும் பார்த்தீபன் தாக்கினார் என தெரிவித்து வைத்தியசாலையில் வைத்திசாலையில் சிகிச்சைக்காக சென்றபோது அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளரிடம் கேட்டபோது,
அலியாமடுகுள சிறுபோக நெற்செய்கை தொடர்பாக நேற்றையதினம் கூட்டம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இக்கூட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் க.பார்த்தீபன் கிராமசேவையாளருடன் தன்னால் இருக்க முடியாதுள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் போது கிராமசேவகரும் பார்த்தீபனும் எனது சொல்லை செவிமடுக்காது வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் இருவரும் தள்ளுப்பட்டுக்கொண்டிருந்தனர். இதன் போது யார் முதலில் அடித்தது என்று எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

ஐ.நா தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா வெளியேறியது கவலை தருகின்றது – ஐரேப்பிய ஒன்றியம்

சிறீலங்கா அரசு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணைக்குழுவுடன் தொடர்ந்து பேச்சுக்களை மேற்கொள்வதுடன், இனநல்லிணக்கப்பாடு, நீதி விசாரணை, மனித உரிமைகளை பேணுதல், அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

எதிர்வரும் பொதுத்தேர்தலில் அமைதியையும், இன ஒற்றுமையையும் சிறீலங்கா அரசு முன்னெடுக்க வேண்டும். மேலும் மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், பொது அமைப்புக்களின் பாதுகாப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை என்பன தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக வேறு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். காணாமல்போனோர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். 30/1 தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேறியது எமக்கு கவலையை தோற்றுவித்துள்ளது என தெரிவித்துள்ளது.

சிறீலங்கா அரசு விலகினாலும் தீர்மானம் நடைமுறையில் இருக்கும் – பிரான்ஸ்

ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா விலகினாலும், தீர்மானம் நடைமுறையில் இருக்கும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இனநல்லிணக்கப்பாடு, நீதி விசாரணை போன்ற சட்டவிதிகளில் இருந்து வெளி-யேற முடியாது என சிறீலங்காவுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸின் ஆசியாவுக்கான வெளிவிவகார பணிப்பாளர் தெயிரி மத்தியூ நேற்று (27) தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு புதிய அரசு எடுத்துள்ள அரசியல் ரீதியான முடிவு. ஆனால் அமைதியும், இனஒற்றுமையுமே பிரதானமானது என்பதே எமது நாட்டின் கருத்தாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவின் புதிய அரச அதிபராக க. விமலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரச அதிபராக க. விமலநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக நலனோம்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய க. விமலநாதன் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர்.

மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர் மேலதிக அரசாங்க அதிபராகவும் பல்வேறு அரச உயர் பதவிகள் வகித்து வந்த நிலையிலேயே முல்லைத்தீவுக்கான புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும் நளினி புதிய மனு தாக்கல்

தமிழக ஆளுநரின் ஒப்புதல் இன்றி தமிழக அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக தண்டனை பெற்று வரும் நளினி இன்று (28) சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஆயுள் தண்டனை பெற்று வரும் ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டெம்பர் 9ஆம் திகதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி 2018 செப்டெம்பர் 11ஆம் திகதி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரை மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருந்ததாகவும், தன்னை விடுதலை செய்யக் கோரியும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதிகளான ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தமிழக அரசு தீர்மானம் வெறும் பூஜ்ஜியமே என்றும் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் விடுதலை செய்ய முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது நளினி புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கின்றார். அந்த மனுவில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், அது குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதானது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் தான் எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி ஆளுநர் செயற்படுவதாகவும் நளினி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மாருராம் என்பவரின் வழக்கில் பிறப்பித்த தீர்ப்பிற்கு எதிராக செயற்படுவதாகவும், எனவே ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசே தங்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.