Home Blog Page 2398

நாம் அனைவரும் உறுதி பூணும் சர்வதேச மகளிர் தினம்!-கனடாவில் இருந்து இராஜினி பற்றர்சன்

தேசிய பெண்கள் தினம் முதன் முதலில், அமெரிக்கா நியூயோர்க்கில் 1909ஆம் ஆண்டு பெப்ரவரி 28 இல் கொண்டாடப்பட்டது. அதற்கடுத்த வருடம் மற்றைய நாடுகளுக்கும் அது பரவ,  1911 மார்ச் 19அன்று, முதல் தடவையாக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி, தமது வாக்கு மற்றும் சம உரிமைக்காக போராடினார்கள். 1914 மார்ச் 8 அன்று ஜேர்மனியில் முதன் முதல் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டதையடுத்து, தொடர்ந்தும் இதே நாளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளை புரிவதுடன், பல துறைகளிலும் சாதனைப் பெண்களாக பரிணமித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது. தமிழீழ பெண்களின் சாதனைகள் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் அது மிகையாகாது. ஆனாலும் பல பெண்கள் இன்றும் பல இன்னல்களுக்கு முகம் கொடுப்பதையும், அடிமைத்தனங்களில் இன்னலுறுவதையும் பார்க்கலாம்.Nőnap Petrográd 1917.03.08 நாம் அனைவரும் உறுதி பூணும் சர்வதேச மகளிர் தினம்!-கனடாவில் இருந்து இராஜினி பற்றர்சன்

பெண்ணிய விடுதலை என்பது பெண்கள் தெரிந்தெடுத்து பயணிக்க வேண்டிய ஒரு பாதையாகும். அதே நேரம் ஆண்கள் பெண்களின் உரிமையை மதித்து அவர்களை பாதுகாத்து, ஊக்குவித்து வழிநடத்தும் போது அழகான ஒரு சமத்துவம் மிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால், எப்படி பெண்ணின் பங்களிப்பு உள்ளதோ, அதேபோல் பெண்களின் வெற்றிக்கு பின்னால் பல ஆண்களின் பங்களிப்பு தேவை என்பது நிதர்சனமாகும்.

அதே போன்று, சக பெண்களும் உறுதுணையாகி, பெண்களின் சமத்துவத்தை மதித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க பாடுபட வேண்டும். குறிப்பாக, வீரத்திற்கும், சாதனைக்கும் சொந்தக்காரரான தமிழீழப் பெண்கள் மீண்டும் தங்கள் நிலையை சிந்தித்து, கடந்து வந்த பாதையை நினைவுபடுத்தி, பல புரட்சிகர மாற்றத்தை உருவாக்க முன்வர வேண்டும். எமது சமூகத்தில் தலை விரித்தாடும் அடிமைத் தனங்களில் இருந்து விடுதலையை கொண்டு வருவதுடன்,எமது சமூகத்தை ஆரோக்கியம் மிகுந்ததாக மாற்றவும் முன்வர வேண்டும்.law college convoc நாம் அனைவரும் உறுதி பூணும் சர்வதேச மகளிர் தினம்!-கனடாவில் இருந்து இராஜினி பற்றர்சன்

தமிழர் வரலாற்றில் ஒப்பீட்டளவில் பெண்களுக்கான முன்னுரிமையும், மதிப்பும் காலங்காலமாக வழங்கப்பட்டு வந்தாலும், காலப்போக்கில் பிற சமூகங்களின் கலாச்சார தலையீடுகளும், சமூக வல்லாதிக்கமும், இவற்றை மாற்றியமைக்க காரணமாகின.

குறிப்பாக சொத்துக்கள் பெண்களினூடாகவே பகிர்ந்தளிக்கப்படும்.  தாய்வழி பாரம்பரிய சொத்து பேணும் முறை மிகவும் முற்போக்கான ஒரு நடைமுறையாக இருந்தது. இதன் மூலம் ஓர் சமூகத்தின் சொத்துக்கள் அச்சமூகத்தின் உழைப்பால் பெறப்பட்டவை எனும் வகையிலும், அவை தம் வழித்தோன்றல்களிடமே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனும் நியாயமான சிந்தனையின் அடிப்படையிலும் விரும்பி வழங்கப்படும் ‘சீர்தானம்’   ஆக சிதறி வாழ்ந்த தமிழ் சமூக பரம்பரைகளிடையே வழக்கிலிருந்து வந்தது.

ஆனால் காலப்போக்கில் மக்கள் தொகை அதிகரிப்பு, நகர வாழ்க்கை முறை என்பவற்றினூடான சனத்தொகை அடர்த்தி அதிகரிப்பு, சமூகங்களுக்கிடையேயான நெருக்கம் என்பன கலப்பு திருமண சூழ்நிலைகளை உண்டு பண்ணியது. பல்வேறு சமூகத்தை சார்ந்த இளையோர் கூடிப்பழகும் வாய்ப்பும், திருமண பிணைப்புகளும் தாமாக எழுந்தன. இப்போது சொத்துக்கள் ஒரு சமூகத்திடமிருந்து இன்னொரு சமூகத்திற்கு கைமாறும் நிலை வந்தது. இதற்கான பேரம் பேசல்கள் விரும்பி வழங்கும் தானத்திலிருந்து வலிந்து பெறும் ‘சீதனம்’ ஆகி தமிழ் பெண்களின் வாழ்வையும் எம் சமுதாயத்தின் மேம்பாட்டை சீரழிக்கும் காரணியாகவும் மாறியது.manakkodaichchattam நாம் அனைவரும் உறுதி பூணும் சர்வதேச மகளிர் தினம்!-கனடாவில் இருந்து இராஜினி பற்றர்சன்

தொழில் நுட்பம், மற்றும் நாகரீகம் வளர்ச்சியடைந்த இந்த காலகட்டத்திலும் எமது சமூகத்தில் வேரூன்றி இருக்கும் சீதனக் கொடுமையை முறியடிக்க எமது சமூகத்தின் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் முன்வந்தால், வெகுவிரைவில் எம்முள் வேரூன்றி கிடக்கும் இச்சமூக குறைபாட்டை நீக்க முடியும் என்பதில் ஐயமில்லை. “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்னும் அறிவுரைக்கிணங்க, எம் சமூகத்தில் அனைவரும் சீதனக் கொடுமையை எதிர்த்து நின்றால், இந்த நடைமுறையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக அகற்ற முடியும்.

அடிமைத்தனம் என்றால் என்ன, மனித குலத்தின், ஒரு சமூகத்தின், ஒரு குடும்பத்திற்குரிய கட்டுக்கோப்பு என்ன என்பதற்குரிய தெளிவான அறிவைப் பெறுதல் மிகவும் அவசியமானதாகும். கணவனுக்கு கீழ்ப்படிதல். தகப்பனுக்கு கீழ்ப்படிதல் அடிமைத்தனம் என்று நினைக்கும் பெண்கள் எம் மத்தியில் உள்ளனர். தவறான தெளிவூட்டல் குடும்பக் கட்டுக்கோப்பை சிதைத்து விடும். நேர்கொண்ட சிந்தனையும், தெளிவான பாதையும் சரியான இலக்கினை அடைய வழிவகுக்கும்.

ஆண், பெண் என்பது விருத்தியடைந்த உயிரினங்களின் இலிங்க முறை இனப்பெருக்கத்திற்கான கூர்ப்பியல் பரிமாண விருத்தியாகும். இது தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிர்களினதும் இன விருத்திக்கான இயற்கையின் ஏற்பாடாக அமைகிறது. அவ்வகை இன விருத்திக்கான தேவைகளின் அடிப்படையிலேயே பெண்களும் ஆண்களும் சிலவகை உடலியல் மற்றும் உளவியல் வேறுபாடுகளை கொண்டு விளங்குகின்றனர்.

ஆனால் செயல் திறனில் இருபாலாரும் ஒருவரை விட ஒருவர் குறைந்தவர் அல்ல. இந்த தெளிவு எம்முள் இருக்குமானால், மனித வாழ்வின் தேவைகளுக்கான செயற்பாடுகளை உரிய வகையில் பகிர்ந்து சரிநிகர் சமானமாக நாம் வாழ முடியும். இவ்விழிப்புணர்வு இல்லாமையே கடந்த காலங்களில் பெண் அடிமை செயல்களாக பரிணமிக்கவும் பெண் விடுதலைக்கான போராட்டமாகவும் வடிவெடுத்தது.

அனைத்துலக மகளிர் தினம் என்பது இவ்விழிப்புணர்வை கொண்டு வரும் ஒரு தினமாகவே இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதுடன், பின்தங்கிய சமூகங்களிடையே பெண்களுக்கான சம உரிமையை வலுப்படுத்தும் செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தும் ஓர் நாளாகவும் அமைகிறது. மனித குலத்தின் மேம்பாட்டுக்கு, பெண் அடிமைத்தன சிந்தனைகளை விடுத்து ஒவ்வொரு பெண்ணும் ஆணும், பங்களிப்போம் என இந்த சர்வதேச மகளிர் தினத்தில் மீண்டும் உறுதி பூண்டு உழைப்போம்.

 

விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் (நேர்காணல்)

விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தி விமர்சிப்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்  என என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறுப்பினரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் இலக்கு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

கேள்வி -ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த கால ஜனாதிபதி தேர்தலிலும் அதற்கு பிற்பட்ட காலப்பகுதியிலும் தமிழரசுக் கட்சி  தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன?

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்குமிடையில் நீண்ட காலமாக உறவு இருக்கின்றது. இது முழுவதும் கட்சி நலன் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. அதன் ஒரு தொடர்ச்சியாகவே 2015இலிருந்து 2019 வரைக்கும் தமிழரசுக் கட்சி , ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் இணைந்தே செயற்பட்டன. தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்குப் பதிலாக  நிபந்தனையற்ற
ஆதரவை வழங்கிவருகிறது.

தமிழரசுக் கட்சியினதும் ஐக்கிய தேசியக் கட்சியினதும் உறவை பற்றிக் கூறுவதானால், தமிழரசுக் கட்சியின் தாய்க் கட்சியே ஐக்கிய தேசியக் கட்சி என்று சொல்லலாம். இது காலாகாலமாக தொடர்ந்து வருகின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு பகிரங்கமான உண்மை.

கேள்வி -1965 இல் டட்லி சேனநாயக்க இருந்த காலப்பகுதியில் வழங்கப்பட்ட ஆதரவானது மக்களுக்கு எவ்வாறான நலத்திட்டங்களை பெற்றுக் கொடுத்தது?

மக்களுக்கு நன்மையான காரியங்களைப் பெற்றுக் கொடுப்பது என்பதற்குப் பதிலாக அவர்கள் ஐ.தே.க. கும் தமிழரசுக் கட்சிக்கும் இருந்த உறவில்  1979ஆம் ஆண்டு  ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு இவர்களும் அதற்கு ஒரு உடந்தையாக இருந்துள்ளனர்.

அந்த பயங்கரவாத தடைச் சட்டமே 30, 35 வருடங்களாக நாட்டில் பல ஆயிரக் கணக்கான இளைஞர்களை கைது செய்வதற்கும், நாட்டில் நடைபெற்ற படுகொலைக்கும் காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே ஐ.தே.க. தமிழரசுக்  கட்சிக்கும் இருக்கும் உறவு தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் பெற்றுக் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக பல்வேறுபட்ட அநீதிகள் இழைக்கப்படுவதற்கு ஒரு காரணமாக இருந்துள்ளது.

கேள்வி – ஐ.தே.க.உடன் அதிகமாக உறவுகளை வைத்திருக்கும்  தமிழரசுக் கட்சி, ஏன் மற்றைய கட்சிகளுடன் உறவுகளை பேணவில்லை?

நான் முன்னர் குறிப்பிட்டது போல் ஐ.தே.க. தமிழரசுக் கட்சியின் தாய்க் கட்சி. ஆகவே அவர்களுக்குள் நீண்ட காலமாக இருந்த உறவு, தங்கள் நலன் சார்ந்தே பேணுகின்றார்களே தவிர, மக்கள் நலன் சார்ந்து உறவை வைத்துக் கொள்ளவில்லை. தவறான விடயங்களை விமர்சிப்பது வேறு. ஒரு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிக் கொண்டு தமிழ் மக்களை படுகுழியில் தள்ளுவது என்பது முழுக்க முழுக்க அவர்களின் சுயநலன் சார்ந்த விடயம்.

கேள்வி – நீங்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஊடக அறிக்கையொன்றை வழங்கியிருந்தீர்கள் அந்த ஊடக அறிக்கை தேசிய அளவில் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. அந்த ஊடக அறிக்கை பற்றி கூறுங்கள்?

யாழ்ப்பாணத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்வில் திரு சுமந்திரன் அவர்கள்  தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று தனியாக இருப்பதற்கு பல்வேறு இயக்கங்களை சகோதரப் படுகொலை மூலம் இல்லாமல் செய்தது தான் காரணம் என சொல்லியிருந்தார்.

இந்தக் கருத்தானது ஊடகங்கள், சர்வதேச வலைத்தளங்கள் ஊடாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. என்னைப் பொறுத்தளவில் நாங்களும் ஓர் ஆயுதப் போராட்டத்திலிருந்து வந்தவர்கள் என்ற வகையில்,  தமிழ் மக்களின் விடுதலைக்காக பல அமைப்புகள் ஆயுதம்  தூக்கிப் பேராடியது. தமது உயிரை  துச்சமென பணயம் வைத்து பல ஆயிரக் கணக்கான போராளிகள் மடிந்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட அமைப்புகளிடையே சில கசப்பான  சம்பவங்கள் நடந்ததென்பது பகிரங்கமான உண்மை. அதை யாரும் மறுப்பதற்கில்லை.

இருந்தாலும்,  2001ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள்  ஆயுதப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்த எங்களைப் போன்றவர்களை அழைத்து ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி தமிழ் மக்களுக்கு ஒரு நிலையான ஒரு கௌரவமான ஓர் அரசியல் தீர்வை  எட்டுவதற்காக  ஒரு கொள்கையின் அடிப்படையில் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

அப்படியான ஒரு கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு அந்த கூட்டமைப்பின் பெயரையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும், மாவீரர்களையும், போராளிகளையும் தேர்தல் காலத்திலே அவற்றை பேசி வாக்குகளைப் பெற்று அதற்குப் பிற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுடைய தலைவரைப் பற்றி அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றி பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சுமந்திரன் மட்டுமல்ல திரு சம்பந்தன் அவர்களும் கூட மிக மோசமாக விமர்சனம் செய்திருக்கின்றார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இந்த பழைய விடயங்களை கிளறி மேலும் மேலும் தமிழ் மக்களை  அல்லது இருக்கக்கூடிய கட்சிகளிடையே முரண்பாடுகளை  வளர்க்க   விரும்பவில்லை. ஆனால்  இவர்கள் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவர் பிரபாகரனையும் கொடூரமானவர்கள், பயங்கரமானவர்கள் என்று பாராளுமன்றத்திற்குள்ளே திரு.சம்பந்தன் பேசிய உரைகள் இன்று ஒளி, ஒலிவடிவில் ஹன்சாட்டில் உள்ளது. அதேபோல் பல தடவைகள் சுமந்திரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமாக  பகிரங்கமாக வைக்கப்பட்ட விமர்சனங்கள் இருக்கின்றது.

ஆகவே இந்தக் கருத்துக்களோடு  தொடர்ச்சியாக முன்வைக்கின்றவர்கள்  தமிழீழ விடுதலைப் புலிகளும், மாவீரர் குடும்பங்களும் , அல்லது ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக அந்த இயக்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவரையும் , கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களாக இருக்கக்கூடிய திரு சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் மிகக் கொடூரமான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பை  தமிழீழ விடுதலைப் புலிகள், மாவீரர் குடும்பம், போராளிகள் குடும்பம் எந்த வகையில் இவர்களை ஆதரிக்க முடியும் என்பது தான் எங்களின் முக்கியமான கேள்வியாக உள்ளது.

 

உலகம் எதிர்பார்க்காத விளைவுகளை கொடுத்து வருகின்றது கோவிட் -19 : பொருளாதார இழப்பு 347 பில்லியன் டொலர்கள்

கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் உலகம் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகவும், மோசமாகவும் பரவி வருவதால், உலக நாடுகள் எங்கும் ஒரு அச்சமான நிலை தோன்றியுள்ளது.

உலகம் எங்கும் 3522 மக்கள் இதுவரை பலியாகியுள்ளதுடன், 103,738 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள போதும், தற்போது அது உலகம் எங்கும் உள்ள 100 இற்கு மேற்பட்ட நாடுகளில் மோசமாக பரவி வருகின்றது.

தென்கொரியா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 45 பேர் பலியாகியுள்ளதுடன், 7000இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 500 பேர் புதிதாக தொற்றுதலுக்கு உள்ளாகி வருகின்றனர். 28500 அமெரிக்கப் படையினர் தங்கியுள்ள தென்கொரியாவின் படைத் தளங்களிலும் நோய் பரவியுள்ளது. படைத்தளங்களில் பணியாற்றும் இருவர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசியாவின் நான்காவது பெரும் பொருளாதார நாடான தென்கொரியாவின் பாதிப்பும், யப்பானின் பாதிப்பும் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. யப்பானில் கடந்த வியாழக்கிழமை வரையில் 1000 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த வருடம் ஜுலை மாதம் இடம்பெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இடம்பெறும் என யப்பானின் ஒலிம்பிக் அமைச்சர் சிகோ கசிமோட்டோ தெரிவித்துள்ளார்.http com.ft .imagepublish.upp prod eu.s3.amazonaws உலகம் எதிர்பார்க்காத விளைவுகளை கொடுத்து வருகின்றது கோவிட் -19 : பொருளாதார இழப்பு 347 பில்லியன் டொலர்கள்

இதனிடையே, தென்கொரியாவுக்கு அடுத்த நிலையில் ஈரானில் மிக அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 120 பேர் அங்கு மரணமடைந்துள்ளதுடன், 3500 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் 20ஆம் நாள் வரையில் மூடப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் தற்போது மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன.

இவற்றில் இத்தாலியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரையில் 233 பேர் பலியாகியுள்ளதுடன், ஏறத்தாள 6000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலையே ஐரோப்பிய நாடுகளை அதிகம் பாதித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலியே உள்ளது.அங்கு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அரசு 8.4 பில்லியன் டொலர்களை அவசரகால நிதியாக ஒதுக்கியுள்ளது.

அதேசமயம், பிரித்தானியாவில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளதுடன், 206 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவும் அவசரகால நிதியாக 8.3 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
இதனிடையே, கோவிட்-19 வைரஸ் உலகின் பொருளாதாரத்தை அதிகம் பாதித்து வருவதால், உலகம் மிகப்பெரும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் செல்லும் ஆபத்துக்கள் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெருமளவான மக்கள் தமது விடுமுறை பயணங்கள் மற்றும் சுற்றுலாப் பயணங்களை இரத்துச் செய்து வருவதால், கடந்த வாரம் ஐரோப்பாவில் ஆயிரக் கணக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜேர்மனியை தளமாகக் கொண்ட லுப்தான்சா என்ற விமான நிறுவனம் மார்ச் மாதம் ஐந்தாம் நாள் வரையிலும் 7100 விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.OQJBEDOK5FGGJGO3E3EETYVKUY உலகம் எதிர்பார்க்காத விளைவுகளை கொடுத்து வருகின்றது கோவிட் -19 : பொருளாதார இழப்பு 347 பில்லியன் டொலர்கள்

ஏனைய விமான சேவை நிறுவனங்களும் தமது சேவைகளை 25 விகிதமாக குறைத்துள்ளன. விமான சேவை நிறுவனங்களின் இழப்பு 113 பில்லியன் டொலர்கள் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்ற போதும், இது பல மடங்கு அதிகரிக்கலாம் என அனைத்துலக வான் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னர் இந்த தொகை 29 பில்லியன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, பிரித்தானியாவின் பிளைபீ என்ற விமான சேவை நிறுவனம் முற்றாக முடங்கியதால் அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளதுடன், 2000 பேர் வேலையிழந்துள்ளனர்.பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் இல் 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் இறந்துள்ளனர். ஜேர்மனியில் 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தாகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஆபிரிக்க நாடுகளில் குறைவாக காணப்பட்ட இந்த நோய், தற்போது அங்கும் பரவ ஆரம்பித்துள்ளது. தென்ஆபிரிக்காவில் முதல் நபர் கடந்த வியாழக்கிழமை தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இது தமது நாட்டின் பொருளாதாரத்தை அதிகம் பாதிக்கும் என தென்ஆபிரிக்காவின் அரச தலைவர் சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தில் இதுவரையில் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிலும் நோய் அதிகம் பரவி வருவதால் ஜேசுநாதர் அவதரித்த பெத்தலகாம் தேவாலயம் மூடப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்திலும் மசூதிகளும் மூடப்பட்டுள்ளதுடன், பல இஸ்லாமிய நாடுகளில் தொழுகைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம், பல்வேறு தகவல்கள் சமூகவலைத் தளங்களில் பரவி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருவதாக அமெரிக்காவின் வெளிவிவகாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்பட்ட வைரஸ் கிருமியே உலகில் பரவ விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்துக்களை இரண்டு மில்லியன் பேர் ருவிட்டரில் பகிர்ந்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.இதனிடையே, உலகம் எங்கும் உள்ள பல நாடுகள் தமது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடியுள்ளதால் 290 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

வைரசின் தாக்கம் பொருளாதாரத்தை அதிகம் பாதிக்கும் என அனைத்துலக நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்ரலீனா யோர்ஜீவா தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஒத்த நெருக்கடியை உலகம் எதிர் நோக்குவதாகவும், வறிய நாடுகளுக்கு உதவியாக 50 பில்லியன் டொலர்களை தாம் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.merlin 169663641 9a8074ee ad12 4b05 bfef 6088d5e94bdf articleLarge உலகம் எதிர்பார்க்காத விளைவுகளை கொடுத்து வருகின்றது கோவிட் -19 : பொருளாதார இழப்பு 347 பில்லியன் டொலர்கள்

விமான நிறுவனங்கள், சுற்றுலாத்துறை, சுற்றுலாத்துறை கப்பல் நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள், களியாட்ட விடுதிகள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் என்பன கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பங்குச் சந்தையும் பாரிய சரிவைச் சந்தித்துள்ளது. வெள்ளிக்கிழமை (6) அது 61 பில்லியன் பவுண்களை இழந்துள்ளது. உலக மக்களின் வேலை வாய்ப்புக்களில் சுற்றுலாத்துறை 319 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கிவருகின்றது. உலகப் பொருளாதாரம் 347 பில்லியன் டொலர்கள் இழப்பை சந்திக்கலாம் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

யப்பானின் அஞ்ஜெஸ் மருந்து உற்பத்தி நிறுவனம் ஒசாக்கா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிட்-19 வைரசிற்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

செய்தித் தொகுப்பு: ஆர்த்திகன்

கொரோனா வைரஸ் – இரண்டு வாரங்களில் 19 பில்லியன் ரூபாய்களை இழந்தது சிறீலங்கா

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இன் தாக்கத்தால் உலகின் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளது. சிறீலங்காவில் உள்ள தமது வங்கி முறிகள் மற்றும் கடன் பத்திரங்களை மீளப் பெறுவதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களில் சிறீலங்காவில் இருந்து 19.6 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணம் சிறீலங்காவில் இருந்து வெளியேறியுள்ளதாக சிறீலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வைரசின் தாக்கம், உலகின் அவசர சுகாதார நடவடிக்கை என்பன சிறீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சீனாவுடன் சிறீலங்கா நெருங்கிய வர்த்தக தொடர்புகளை கொண்டிருப்பதனால், பெருமளவான நுகர்வுப் பொருட்களை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்து வருகின்றது. தற்போது இந்த வழங்கல்களில் ஏற்படும் தாமதம், உலகப் பொருளாதார பின்னடைவு என்பன கடுமையாக சிறீலங்காவை பாதித்து வருகின்றது.

சிறீலங்காவின் சுற்றுலாப் பயணத் துறையும் முற்றாக முடங்கும் நிலையை அடைந்துள்ளது. உலக நாடுகளில் உள்ள மக்கள் பயணங்களை தவிர்ப்பது ஒருபுறமிருக்க, சீன பயணிகளின் வரவு நிறுத்தப்பட்டதும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

கதிரை மீதான காதலே புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றது -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்

கதிரைகள் மீதான பற்றே இன்று புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றதே தவிர வேறெதுவும் இல்லை என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

மாற்றுத்தலைமை என இன்று பலர் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்காக கட்சிகளை உருவாக்கவில்லை. மக்கள் நலனுக்காகவும் கட்சிகளை உருவாக்கவில்லை. அவர்கள் கதிரைகள் மீது உள்ள பற்றின் காரணமாகவே கட்சிகளை உருவாக்கினார்கள். இன்று எம் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். அந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதேசவாரியாக மக்களுக்கு விளக்கத்தினை வழங்க தயாராகவே இருக்கின்றேன்.

யாரையும் பெயர் குறிப்பிட நான் விரும்பாவிட்டாலும். யாராவது இவ்வாறு தெரிவித்தனர் என்றால் அவர்களைப் பற்றி கூற நானும் தயாராக இருக்கின்றேன். அவர்களைப் பற்றி முழு விபரமும் என்னிடம் இருக்கின்றது. யார் யார் எவருடன் தொடர்பினை வைத்திருந்தனர் யாருடைய நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டார்கள் என்ற முழு ஆதாரமும் என்னிடம் உள்ளது. இதேவேளை தமிழர்களின் நிரந்தரமான தீர்வுக்கு அரசியல் அமைப்பு மாற்றம் என்பது அவசியமானதாகும்.

அதன் மூலம் தான் தமிழர்கள் முன் உள்ள பிரச்சனைகளுக்கு 80 வீதமான தீர்வு கிடைக்கும். வடக்கு கிழக்கு தமிழர்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசமாக இருந்தது. ஆனால் இன்று தமிழர்களது இனவிகிதாசாரத்தினை குறைக்கும் அளவிற்கு சிங்கள குடியேற்றங்கள் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அவர்கள் கையாளும் தந்திரம் மகாவலி திட்டமாகும்.

DSC 0348 6 கதிரை மீதான காதலே புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றது -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்

DSC 0334 6 கதிரை மீதான காதலே புதிய கட்சிகள் உருவாக காரணமாகின்றது -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்

இந்த நிலையில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு அல்லது தமிழரசுக்கட்சி 100 வீதம் சரியாக செயற்பட்டது என்று நான் கூறவில்லை. ஆனால் மக்களுக்கு உண்மையாக இருக்கின்றது. தமிழ் இனத்தின் அடையாளத்திற்காக கொள்கை ரீதியாக தனித்துவமாக பயணிக்கின்றோம்.

மக்கள் நலன்சார்ந்த முடிவுகளை நாங்கள் சிந்தித்து கட்சியாக எடுத்திருக்கின்றோம். இதனால் விலைபேச முடியாத சக்தியாக இருக்கின்றோம் என்பதனை தெரிவிக்கின்றேன். கூட்டமைப்பின் வேட்பாளர்களை பலப்படுத்துவதனால் எமக்கு எதிராக உள்ள சர்வதேச விடயங்களானாலும் சரி, சிங்கள குடியேற்றமானாலும் அபிவிருத்தி விடயங்களிலும் கையாளக்கூடிய நிலை ஏற்படும்.

எனவே எம்மில் பலரது கருத்துக்கள் மக்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அது அவர்களது தனிப்பட்ட கருத்துக்களேயாகும். அது கூட்டமைப்பின் கருத்துக்கள் இல்லை என்பதனை பகிரங்கமாக கூறுகின்றேன். அவர்களின் கருத்துக்களை வைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஒதுக்கிவிடகூடாது என தெரிவித்தார்.

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற -18 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் – கண்டி A9 வீதியின் திருப்பனே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று வந்து கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று (09) அதிகாலை 3.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக பேருந்து பாதையை விட்டு மின்கம்பம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்தில் பயணித்த 55 பேரில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருப்பனே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மியான்மார் இனஅழிப்பு அரசுக்கு ஆதரவு – சூகிக்கு வழங்கப்பட்ட விருதை பறித்தது லண்டன் நகரசபை

மியான்மார் நாட்டின் அரசியல் தலைவர்களில் ஒருவரான ஆங் சான் சூகி தனது நாட்டின் ரோகிங்கியா முஸ்லீம் மக்கள் மீதான இன அழிப்பை கண்டிக்கத் தவறியதுடன், அரசுக்கு ஆதரவாக செயற்பட்டதற்காக அவருக்கு வழங்கப்பட்ட விருதை இரத்துச் செய்வதாக பிரித்தானியாவின் லண்டன் நகரசபை தெரிவித்துள்ளது.

அண்மையில் கேக்கில் இடம் பெற்ற இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளின் போதும் சூகி அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதுடன், அரசுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டதாக அவருக்கு வழங்கப்பட்ட கௌரவ விருதை பறிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுச்சபை தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு முஸ்லீம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் சூகி அரச குழு ஒன்றை வழிநடத்தியிருந்தார்.

மியான்மார் அரசுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்ததாலும், சுதந்திர விண்ணப்ப குழுவின் கடிதங்களுக்கு அவர் பதில் அளிக்காததாலும் 2017ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட விருதை இரத்துச் செய்வதாக சுதந்திர பயன்பாடுகள் குழுவின் (City of London Corporation’s Freedom Applications Committee) தலைவர் டேவிட் வூட்டன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்காக அவர் பல ஆண்டுகள் மேற்கொண்ட அகிம்சை வழியிலான போராட்டத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அகிம்சை போராட்டத்திற்காக அவருக்கு 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா மக்கள் கட்டாருக்கு செல்ல தடை

வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தற்போது மத்திய கிழக்கு நாடுகளையும் பாதித்து வருவதால் சிறீலங்கா உட்பட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் கட்டாருக்குள் நுளைவதை கட்டார் அரசு தடை செய்துள்ளது.

இன்று (9) திங்கட்கிழமையில் இருந்து சீனா, சிறீலங்கா, ஈரான், ஈராக், லெபனான், இந்தியா, எகிப்து, பங்களாதேசம், சிரியா, தாய்லாந்து, நேபாளம், பாகிஸ்தான், தென்கெரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் கட்டாருக்குள் நுளைவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தாலியில் இருந்து கட்டாருக்கு வரும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. கட்டாரில் இதுவரை 15 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக களமிறங்கியது ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு

இந்தியா அண்மையில் கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றத்தை அணுகியதால் இந்தியா பதற்றமடைந்துள்ளது.

இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இந்திய குடிமகன் ஒருவர் தொடுத்த வழக்கில் மூன்றாம் தரப்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளதால், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மிச்செல் பசெலற் உயர் நீதிமன்றத்திற்கு தனது பதிலை அனுப்பியிருந்தார்.

ஆனால் குடியுரிமைச் சட்டம் என்பது இந்தியாவின் உள்வி வகாரம் என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ரவீஸ்குமார் கடந்த செவ்வாய்க்கிழமை(03) தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு இறைமையுள்ள நாடு, இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட்டது. உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை நாம் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் தொகையில் 15 விகித்தை கொண்ட மூஸ்லீம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் சீனாவிடம் இருந்து பில்லியன் டொலர்கள் கடன்

சீனாவிடம் இருந்து 1.3 பில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கு சிறீலங்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 1 தொடக்கம் 2 பில்லியன் டொலர்கள் கடனாக கோரப்பட்டதாகவும், ஆனால் 1.3 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு சீனா சம்மதித்துள்ளதாகவும் சிறீலங்கா மத்திய வங்கியின் பிரதித் தலைவர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் இந்த நிதி உதவி சிறீலங்காவின் பொருளாதார நெருக்கடியை குறைக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் சிறீலங்கா அரசு வங்கிகளிடம் இருந்து 120 பில்லியன் ரூபாய்களை கடனாக பெற்றிருந்தது.

இதனிடையே, அமெரிக்காவின் மிலேனியம் சலஞ்ச் உடன்பாட்டின் 480 மில்லியன் டொலர்களை புறக்கணித்துள்ள சிறீலங்கா, மீண்டும் சீனாவிடம் கடன் பெற்றுள்ளது.