சிறீலங்கா மக்கள் கட்டாருக்கு செல்ல தடை

வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தற்போது மத்திய கிழக்கு நாடுகளையும் பாதித்து வருவதால் சிறீலங்கா உட்பட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் கட்டாருக்குள் நுளைவதை கட்டார் அரசு தடை செய்துள்ளது.

இன்று (9) திங்கட்கிழமையில் இருந்து சீனா, சிறீலங்கா, ஈரான், ஈராக், லெபனான், இந்தியா, எகிப்து, பங்களாதேசம், சிரியா, தாய்லாந்து, நேபாளம், பாகிஸ்தான், தென்கெரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் கட்டாருக்குள் நுளைவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தாலியில் இருந்து கட்டாருக்கு வரும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. கட்டாரில் இதுவரை 15 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.