இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக களமிறங்கியது ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு

இந்தியா அண்மையில் கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றத்தை அணுகியதால் இந்தியா பதற்றமடைந்துள்ளது.

இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இந்திய குடிமகன் ஒருவர் தொடுத்த வழக்கில் மூன்றாம் தரப்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளதால், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மிச்செல் பசெலற் உயர் நீதிமன்றத்திற்கு தனது பதிலை அனுப்பியிருந்தார்.

ஆனால் குடியுரிமைச் சட்டம் என்பது இந்தியாவின் உள்வி வகாரம் என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ரவீஸ்குமார் கடந்த செவ்வாய்க்கிழமை(03) தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு இறைமையுள்ள நாடு, இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட்டது. உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை நாம் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் தொகையில் 15 விகித்தை கொண்ட மூஸ்லீம் மக்கள் தெரிவித்துள்ளனர்.