பென்-க்விர் மீது இத்தாலி, பிரான்ஸ் விசாரணைகுழு அமைப்பு
செம்மணியில் அகழ்வு பணிகள் விஸ்தரிப்பு
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் (14) 24 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் நடைபெற்றது.
அகழ்வின் போது, இன்றுடன் 355 மனித என்புத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.
அவற்றுள் 341 என்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
இன்றையதினம் 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன மேலும் 02 என்புக்கூடுகள் வெளிப்பட்டதாக சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்தார்.
இவற்றில் 04 என்புகள் சிறுவர்களுடையதும், 02 வளர்ந்தவர்களுடையதும், ஒன்று குழந்தையினதும் என கண்டறியபட்டுள்ளன.
இதேவேளை, இன்று முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.
பின்லாந்தில் ஒரு புதிய நேட்டோ ஆர்க்டிக் குழு
மயிலிட்டி மக்கள் இரு வேறு இடங்களில் போராட்டம்!
போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள் நாளைய தினம் (15) யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக மக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இதற்கு காணியுரிமைக்கான மக்கள் இயக்கம் பூரண ஆதரவு வழங்கவுள்ளதாகவும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்
மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், புலம்பெயர்ந்தும் வசித்து வருகின்ற மயிலிட்டி மக்கள் தமது சொந்த காணிகளில் வாழ முடியாது துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.
மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது காணியுரிமைக்கான மக்கள் இயக்கத்தின் நிலைப்பாடாகும்.
அதிகளவான தனியார் காணிகள் வடக்கிலே முப்படைகளும் வைத்திருக்கின்றனர்.
வயாவிளான் பகுதியில் மக்களுடைய காணிக்குள் இப்போதும் பாரிய இராணுவ மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு கொண்டிருக்கின்றது என்று காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பலாலி சந்தி பகுதியிலும் நாளைய தினம் காலை 08.30 முதல் மாலை 4.30 வரையில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சீனா எச்சரிக்கை
இறைமையை மீட்டெடுக்க ஈழத்தமிழர் ஒவ்வொருவரையும் தமிழ் புலம்பெயர் செய்தி அழைக்கிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 395
Ilakku Weekly ePaper 395 | இலக்கு-இதழ்-395 | சனி, 13 ஜூன், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 395 | இலக்கு-இதழ்-395 | சனி, 13 ஜூன், 2026
Ilakku Weekly ePaper 395 | இலக்கு-இதழ்-395 | சனி, 13 ஜூன், 2026
Ilakku Weekly ePaper 395 | இலக்கு-இதழ்-395 | சனி, 13 ஜூன், 2026: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- இறைமையை மீட்டெடுக்க ஈழத்தமிழர் ஒவ்வொருவரையும் தமிழ் புலம்பெயர் செய்தி அழைக்கிறது | ஆசிரியர் தலையங்கம்
- வரையறையற்ற சட்டமும் வளைக்கப்படும் ஜனநாயகமும் | விதுரன்
- யாழ்ப்பாணத்தில் இந்தியத்தூதுவர் சந்தோஷ் ஜாவின் சந்தோசம்.! | பா.அரியநேத்திரன்
- ஈஸ்டர் தாக்குதல் திருப்பங்களும் பாடகர் கைதும் – ஐநாவைச் சமாளிக்கும் உத்தி!!! | பத்திரிகையாளர் – அ.நிக்ஸன்
- சங்கீத்சன் கைது: இலங்கையில் தொடரும் இனவழிப்பு ஆட்சியை வெளிப்படுத்துகிறது! | தீபச்செல்வன்
- அழிந்துசெல்லும் வரலாறுகள்: பாதுகாப்பது அவசியம் | மட்டு.நகரான்
- டிட்வா சூறாவளிக்கு பின்னரும் நீடிக்கும் மலையக மக்களின் அவலம்: அரசாங்கத்தின் உத்தரவாதம் | மருதன் ராம்
- இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பேராளுமைக்கு புகழஞ்சலி | திலீபன்
- ரஷ்யா யாருக்கும் எதையும் கடன்பட்டிருக்கவில்லை | தமிழில்: ஆர்தீகன்
களத்தில் சிக்கிய ட்றம்ப் – வெளியேற வழிதேடுகின்றார் | வேல்ஸில் இருந்து அருஸ்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!
நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே விவகாரத்தை மையப்படுத்தி இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே, பொலிஸ் காவலில் உள்ள நிலையில் அவருக்கு மோசமான முறையில் நடத்தப்படுவதாக சமூகத்தில் எழுந்துள்ள விவாதங்களை அடுத்தே இந்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், முன்னர் பொலிஸ் காவலில் இருந்த உங்களது கட்சியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்டு, உயிர் பிரிவதற்கு முன்பாகவே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்ட அந்த காட்டுமிராண்டித்தனமான யுகத்தின் கொடூரமான வடுக்கள், இந்த ஜனநாயக நாட்டில் மீண்டும் பதிவாகக் கூடாது என்பதே அனைவரினதும் அசைக்க முடியாத நம்பிக்கையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, ஜனாதிபதி முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து உண்மைகளையும் சமநிலையான முறையில் ஆய்வு செய்து, முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானியையும் ஒரு சாதாரண சந்தேக நபராகக் கருதி, அவருக்கான சட்டத்தின் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு அந்த கடிதத்தின் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சட்டத்தரணி டிலான் பெரேரா, டி.பி. ஹேரத், கலாநிதி குணபால ரத்னசேகர, கரு கொடிதுவக்கு, வைத்தியர் திலக் ராஜபக்ஷ, வைத்தியர் உபுல் கலப்பத்தி, லலித் எல்லாவல மற்றும் கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.
ஆப்கனில் புர்கா விதிகளை மீறியதாக 30 பெண்கள் கைது – ஐநா அமைப்பு தகவல்
ஆப்கானிஸ்தானில் புர்கா விதிகளை மீறியதாக 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெண்களுக்கான உரிமைகளை முன்னெடுக்கும் ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புர்கா அணிய வேண்டும், வாசனை திரவியங்களைப் பயன்படுத்தக் கூடாது போன்ற உத்தரவுகளை மீறியதாக 30-க்கும் மேற்பட்ட பெண்கள் ஜூன் 9-ம் தேதி தலிபான்களால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெண்களில் சிலர் விடுவிக்கப்பட்டாலும், இந்த நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தான் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளன.
இந்த நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும் தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதில், குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமை நிபுணர்கள் கூறும்போது, “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. எனினும், இதற்காக உயிரிழப்பை ஏற்படுத்தும் வன்முறையைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது. ஆப்கானிஸ்தானில் நடைமுறை அதிகார மையமாகத் திகழும் தலிபான்கள், ஆப்கானிஸ்தான் கையெழுத்திட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
சமத்துவம், அமைதியான முறையில் ஒன்று கூடுதல், கருத்து சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், தடுப்புக் காவலில் இருந்து பாதுகாப்பு ஆகிய அடிப்படை உரிமைகள், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் நிலைமை மேலும் மோசமடைவதை தடுப்பதற்கும் அவசியம்” என தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஐநாவின் பணிகளை வழிநடத்தும் துணை சிறப்பு பிரதிநிதி ஜார்ஜெட் காக்னான் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் ஒரு பெண் கைது செய்யப்படுவது அல்லது தடுத்து வைப்பது சமூகத்தில் அவருக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இதனால், விடுதலையான பிறகும் அவர்கள் குடும்ப வன்முறைக்கும் சமூக வன்முறைக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் செம்மணிக்கு பயணம்: அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
செம்மணி தொடர்பான விடயத்தில் நீதி வழங்குவதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது அது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு பற்றிய அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் அவ்விடத்திற்கு செல்லவுள்ளார். இதன்படி செம்மனி தொடர்பில் ஆழமான கருத்தாடல்கள் நடத்தபப்படவுள்ளன. அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார். இதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்குள்ள பிரதேச சபைகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்குள்ள பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் நடக்கவுள்ளது என்றார்.

