மனித உரிமை விவகாரம் குறித்து இலங்கை விஜயத்தின் போது எடுத்துரைத்தேன் -பிரிட்டன் அமைச்சர்

இலங்கை விஜயத்தின் போது எடுத்துரைத்தேன்

இலங்கை விஜயத்தின் போது எடுத்துரைத்தேன்: மனித உரிமை விவகாரம், சட்டத்தின் ஆட்சி நல்லாட்சி ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டிய கட்டாயம் குறித்து இலங்கைக்கான தனது விஜயத்தின் போது எடுத்துரைத்ததாக ஐக்கிய இராச்சியத்தின் மத்திய தென்னாசியாவிற்கான அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர்,

கருத்து வேறுபாடுடைய விடயங்கள் உள்ளன, ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில்நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சமாதானத்தை கட்டியெழுப்புதல் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் தீர்மானம் உள்ளது.

ஐக்கியநாடுகளின் செயற்பாடுகளிற்கான பிரிட்டன் ஆதரவுகுறித்து நான் இலங்கை ஜனாதிபதியுடனும் அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களுடனும் ஆராய்ந்தேன்.

இலங்கை அரசாங்கம் மனிதஉரிமைவிவகாரம்,சட்டத்தின்ஆட்சி நல்லாட்சி ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டிய கட்டாயம் குறித்து நான் எடுத்துரைத்தேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News