இலங்கையில் கடந்த நான்கு நாட்களில் 5 பேர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்

5 பேர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்

இலங்கை -கொழும்பில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது தமிழ் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவிதுள்ளனர்.

இதேபோல், தங்காலை பகுதியில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 37 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு முன்னர், அஹங்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளுந்த்கம பகுதியில் கடந்த 3ம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 43 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த  துப்பாக்கி பிரயோகங்களுக்கும், போதைப் பொருள் வர்த்தகத்திற்கும் இடையில் தொடர்புகள் காணப்படலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Tamil News