இரத்தக்கறை வேண்டாம், எதிர்ப்பில் ஈடுபட்ட எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்

இரத்தக்கறை வேண்டாம்

ரம்புகன்னையில் நேற்று (19)ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய(20) பாராளுமன்ற அமரவில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இரத்தக்கறை வேண்டாம் என இரத்தக்கறை படிந்த ஆடையுடன் எதிர்ப்பில் ஈடுபட்டார்கள்.

இரத்த வெறி வேண்டாம் போன்ற வாசகங்களை ஏந்தியும் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில்  காவல்துறையினர்  மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதால் நாடாளுமன்ற அமர்வில் எதிர் கட்சி தலைமையில் இவ்வாறான எதிர்ப்புக்களை வெளியிட்டார்கள்.