உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்கு தலில் தங்களது எல்லைப் பகுதிகட்டமைப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டுகிறது. இதனால், தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வருகிறது. உக்ரைன் தரப்பிலும் படைகள் குவிக்கப்படுகின்றன. இதனால், ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், ரஷ்யா பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘‘21-ம் திகதி (நேற்று) காலை ரஷ்யா-உக்ரைன் எல்லையில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள ரஷ்ய பகுதியான ரொஸ்டோவ் என்ற இடத்தில் உக்ரைன் பகுதியில் இருந்து சிறியரக பீரங்கிக் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.