அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை/தஞ்சக் கோரிக்கையாளர்களை தடுப்பில் வைக்கும் கொள்கையினை ஓகஸ்ட் 2012க்குப் பின் அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியது. இதனால் படகு வழியாக தஞ்சமடைந்த பல அகதிகள் தடுப்பிலும் தற்காலிக விசாவிலும் உள்ளனர்.
ஆனால், இவ்வாறு இருக்கும் அகதிகள் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தால் அவர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி பெறும் வாய்ப்பு என்பது சாத்தியமற்ற கனவாகவே உள்ளது.