சிறீலங்காவில் 120 பேர் கோவிட்-19 நோயினால் பாதிப்பு
சிறீலங்காவில் இன்று (30) கோவிட்-19 வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு இதுவரை மொத்தம் 120 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் இறந்துள்ளார். 11 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே,...
சமய காரணங்களுக்காக வைத்திருக்கும் நிதியை மக்களுக்கான நிவாரணங்களுக்காக வழங்கவேண்டும்.
சமய காரணங்களுக்காக வைத்திருக்கும் நிதியைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ்சால் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு வணக்கஸ்தலங்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் மற்றும் அறநிலையக் காப்பாளர்களிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமிழ் மக்கள்...
ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்தினால் 100 குடும்பங்களுக்கு நிவாரனம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று பிரசித்திபெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினால் 100 குடும்பங்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வீடுகளில் இருந்து வரமுடியாது முடங்கிக் கிடக்கின்ற நிலையில்...
ஊரடங்குச் சட்டத்தின்போது இந்தியாவில் இலங்கை அகதிகளின் நிலை.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 144 தடையுத்தரவு நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் பெறுவது தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அரசாங்கம் சில ஏற்பாடுகளை செய்து வீட்டை விட்டு...
கொரோனாவினால் இதுவரை 33,968பேர் பலி..
உயிர்க்கொல்லி வைரஸான கொரோனா வைரஸை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன.
உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை...
இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்படுகின்றது.
மார்ச் மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வருகை தந்த அனைவரும் தனிப்பட்ட...
கொரோனா வைரஸ் – மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,000
கொரோனா வைரசின் தாக்கதால் உலகில் உள்ள 177 நாடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33,000 இற்கும் அதிகமாகும் என ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று (29) தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் அதிகமானவர்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள் அங்கு 10,779...
கோவிட் -19 – ஜேர்மனின் மாநில நிதி அமைச்சர் தற்கொலை
கொரோனா வைரசினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பின் எதிர்விளைவுகளால் அதிர்ச்சியடைந்த ஜேர்மனின் கெஸ் மாநில நிதி அமைச்சர் தேமஸ் ஸ்காபேர் (54) இன்று (29) தற்கொலை செய்துள்ளார்.
புகையிரத பாதை அருகில் இன்று அவர் இறந்த...
பிரான்ஸில் 3 ஈழத்தமிழர்கள் கொரோனா வைரசுக்கு பலி
பிரான்ஸ் நாட்டில் பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 3 ஈழத்தமிழ் மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குணரட்னம் கீர்த்திபன், சாந்தன் மற்றும் பொன்னன் குலசிங்கம் ஆகியவர்களே பிரான்ஸ் நாட்டில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்துள்ளனர்.
இதுவரை பிரான்ஸ்...
கோவிட்-19- லண்டனில் ஈழத்தமிழர் பலி
கொரோனா வைரசின் தொற்றுதலுக்கு உட்பட்டு சிகிச்சை பலனளிக்காததால் பிரித்தானியாவின் ரூட்டிங் பகுதியில் வசிப்பவரான சுந்தரலிங்கம் மெய்யழகன் (45) இன்று (29) லண்டன் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.










