இன, மத பேதமின்றி கறுப்புக் கொடியை ஏற்றுங்கள், சர்வதேசத்தையும் நாட தயாராகவுள்ளோம் –மெல்கம் ரஞ்சித்

malcolm ranjith 700x400 1 இன, மத பேதமின்றி கறுப்புக் கொடியை ஏற்றுங்கள், சர்வதேசத்தையும் நாட தயாராகவுள்ளோம் –மெல்கம் ரஞ்சித்

இன மத பேதமின்றி கறுப்புக் கொடியை ஏற்றுங்கள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு சூழ்ச்சி நடைபெற்றது போலவே, அந்த தாக்குதலுக்கு தொடபானவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை ஆராய்வதற்கு ஒரே கட்சியைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் கொண்ட உப குழுவொன்றை நியமித்திருப்பது நியாயமானது இல்லை என கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21ம் திகதியன்று தேவலாயங்கள், வீடுகள், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றில் கறுப்பு கொடி ஏந்துமாறு இன, மத, மொழி பேதமின்றி சகலரையும் ஒன்றிணையுமாறு ஆண்டகை சகலருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

படிப்படியாக நாம் உள்நாட்டுக்குள்ளேயே எமது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்துள்ள போதிலும், இனிவரும் காலங்களில் சர்வதேச ரீதியாக தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் தாயரக வுள்ளதாகவும் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021