விசா காலாவதியாகியதால் இலங்கைக்கு திரும்ப முடியாதவர் ‘அகதியாக’ பதிய முயன்றதாக கைது

இலங்கைக்கு திரும்ப முடியாதவர் கைது

தமிழகம் இராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் நேற்று முன்தினம் இலங்கை சேர்ந்த சீனிவாசன் (வயது 50) அகதி என பதியும்படி மரைன் காவல்துறையினரிடம்   கோரியுள்ளார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், 2021 ம் ஆண்டு கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னை வந்து ஈரோட்டில் வசித்து வரும் அவரது  சகோதரன் வீட்டில் தங்கியுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், விசா காலம் முடிந்ததால் மீண்டும் இலங்கை செல்ல முடியாமல் போயுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் அகதியாக படகில் தனுஷ்கோடியில் வந்து இறங்கியதாக  தெரிவித்துள்ளார். இதையடுத்தே தன்னை அகதியாக பதியும் படி கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர்  அவர் மண்டபம்  காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாது.

Tamil News