398 Views
தஞ்சக் கோரிக்கையாளர்களை அனுப்பும் இங்கிலாந்தின் திட்டம்
அடக்குமுறைக்கு உள்ளாகி அதிலிருந்து தப்ப வெளியேறுபவர்களை காப்பதற்கு பதிலாக தண்டிக்கும் கொள்கை முன்மொழிவை இங்கிலாந்து அரசு கைவிட வேண்டும் என யூத மதக்குருக்களும் இங்கிலாந்து யூத சமூகத்தவர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
இங்கிலாந்தில் படகு வழியாக தஞ்சமடையும் அகதிகளை சுமார் ஆறாயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்தை இங்கிலாந்து அரசு சமீபத்தில் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.