Home செய்திகள்

செய்திகள்

கைது செய்யப்படுவோர்மீது சித்திரவதை – ஐ.நா. மனித உரிமை சபையிடம் அறிக்கை

நாட்டில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படும் சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினால்...

தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக்...

தமிழ் அரசுக் கட்சி வழக்கில் சுமுகத் தீர்வுக்கு இணக்கம் – அரசியல் குழுக் கூட்டத்தில் எட்டப்பட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வழக்கு விவகாரத்தில் சுமுகமான தீர்வை எட்டுவதற்கு சுமந்திரன், சிறீதரன் இணக்கம் எட்டியுள்ளனர். இதன் மூலம், அந்தக் கட்சிக்கு எதிரான வழக்கு விரைவாக நிறைவுக்கு வரும் என்று கருதப்படுகின்றது. இலங்கை...

ஜனாதிபதியுடனான தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு புதன்கிழமை – விக்னேஸ்வரன் தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று...

சா்ச்சைக்குள் யாழ். பல்கலைக்கழக பட்டிமன்ற நிகழ்வு – விசாரணை நடத்துமாறு உத்தரவு

இன நல்லிணக்கத்துக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான பட்டிமன்றம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கல்வி அமைச்சு கோரியுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த...

இடைக்கால ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்

ஜனாதிபதி தேர்தலை எந்தக் காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர்...

மன்னார் காற்றாலை மின் திட்டம் பறவைகளுக்கான மரணப் பொறி?

மன்னாரில் அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் திட்டம் பறவைகளுக்கான மரணப் பொறி என்ற கருத்து நிலவுவதாக இந்தியாவின் பிரபல நாளிதழான தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியாவின் அதானி கிறீன்ஸ் நிறுவனத்தினால்...

அதிகரிக்கும் வெப்ப நிலை – விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்குமாறு அறிவிப்பு

அதிக வெப்பநிலை நிலவுவதால் விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கடும் வெப்பநிலையால் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....

இராணுவ உயர் பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பியது சீனா!

தெற்காசிய நாடுகளுடனான பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி வருகிறது சீனா. இதற்காக தனது இராணுவத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை இலங்கை, மாலைதீவு நேபாளத்துக்கு அந்த நாடு அனுப்பி வைத்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை தெற்காசியாவில்...

இந்திய மீனவர்கள் 19 பேர் இன்று அதிகாலை கைது

யாழ்ப்பாணம் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் இரு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட வேளையே கடற்படையினரால் அவர்கள்...