7பேர் விடுதலை: மதுரை எம்.பியின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பிய குடியரசுத் தலைவர்

ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பாக தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களின் விடுதலை தொடர்பாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழர்களையும் விடுதலை செய்யக் கோரி மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு கடந்த 05ஆம் திகதி கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்திற்கு குடியரசுத் தலைவர் அலுவலகம் பதிலளிக்கையில், “உங்கள் கடிதத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.