Tamil News
Home செய்திகள் 7பேர் விடுதலை: மதுரை எம்.பியின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பிய குடியரசுத் தலைவர்

7பேர் விடுதலை: மதுரை எம்.பியின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பிய குடியரசுத் தலைவர்

ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பாக தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களின் விடுதலை தொடர்பாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழர்களையும் விடுதலை செய்யக் கோரி மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு கடந்த 05ஆம் திகதி கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்திற்கு குடியரசுத் தலைவர் அலுவலகம் பதிலளிக்கையில், “உங்கள் கடிதத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version