இலங்கையில் 400,000 பேர் கஞ்சா பயன்படுத்துகின்றனர்- தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கூற்றுப்படி, இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 பேர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர்.

கிட்டத்தட்ட 4 இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாக அதன் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்களும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் 40,000 புதிய நபர்கள் சிகரெட், மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் இணைகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.