சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப் பிரதம பிரதி உதவி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் தனது பதவியை 27.07இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கிழக்காசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுகு்குப் பொறுப்பான பணியகத்தின் பிரதம பிரதி உதவி செயலாளராக அவர் பணியாற்றுவார்.
கெஷாப் தனது 25 வருட கால அமெரிக்க இராஜாங்க சேவையில் இந்தியா, மொரோக்கோ, கினியா மற்றும் இலங்கை, மாலைதீவிற்கான தூதுவராகப் பணியாற்றியிருக்கின்றார்.