ரணில் இந்தியாவில் ஹோம வழிபாடு

மனைவியுடன் இந்தியாவில் தல யாத்திரையை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்தியா கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில், இலங்கை மக்களின் நலனுக்காக நவசண்டிகா ஹோமம் நடத்தினார்.

ரணிலின் வருகையை முன்னிட்டு கொல்லூரில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சீரற்ற காலநிலை காரணமாக ஹெலிகொப்டரில் அழைத்து வராது தரைவழியாக பாதுகாப்பு அதிகாரிகள் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்றனர்.