அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராலய செயலாளராக முன்னாள் அரசியல்வாதியின் மகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவின் மகள் துல்மினி அத்தநாயக்க அவுஸ்திரேலியாவிற்கான உயர்ஸ்தானிகராலய மூன்றாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு சம்பளம் மற்றும் பணியாளர் ஆணையத்தின் ஒப்புதல் பெறாததால் நிராகரிக்கப்பட்டது. இந்த நியமனத்திற்காக வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன கடந்த செவ்வாய்கிழமை அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருந்தார்.

இப்போது சம்பளம், பணியாளர் ஆணைய ஒப்புதல் பெற்றிருப்பதனால், அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.