மஹர சிறைச்சாலையில் இறந்த கைதிகளின் உடல்களை  தகனம் செய்ய உத்தரவு

மஹர சிறைச்சாலை கலவரத்தில் கொல்லப்பட்ட 04 கைதிகளின் உடல்களை அடக்கம் செய்வதற்கான கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும் சடலங்களை இன்று புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை தகனம் செய்ய வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மொத்தம் 11 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

இதில் கொல்லப்பட்ட நான்கு கைதிகளின்  பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, கொல்லப்பட்ட நான்கு கைதிகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் தெரியப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.