பிரான்ஸில் தாயும், நான்கு பிள்ளைகளும் படுகொலை

பிரான்ஸில் மனைவியையும், நான்கு பிள்ளைகளையும் படுகொலை செய்த நபர் ஒருவரை காவல்துறையினர் இன்று(26) கைது செய்துள்ளனர்.

நேற்று நத்தார் பண்டிகையின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் பரீஸில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள மெயக்ஸ் பகுதியில் உள்ள அவர்களின் வீட்டில் இருந்து நேற்று இரவு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தாயும் இரண்டு பெண்குழந்தைகளும் பல தடவைகள் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர், அவர்களுக்கு இளையவர்களான இரண்டு சிறுவர்களும் தண்ணீரில் அமுக்கி கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் குழந்தைகளின் தந்தையாரான 33 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு மனைவியை கத்தியால் தாக்க முனைந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோதும், பின்னர் அவரின் மனநலம் பாதிக்கப்பட்டது தொடர்பாக வழக்கு கைவிடப்பட்டிருந்தது.