தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டு. மாவட்ட பணிமனை திறப்பு

தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை  கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நீதியரசருமான  முன்னாள் வடமாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், நிர்வாக உபசெயலாளர் எஸ் சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழ உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்ட விவகார உப செயலாளர் ரூபா சுரேந்தர், மகளிர் அணி உப செயலாளர் இளவேந்தி நிமலராஜ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறிதரன், ஊடகம் மற்றும் செயற்திட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிறிபரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், தொகுதி அமைப்பாளர் இரா. மêரதன், கணக்காளர் ராஜா துரைசிங்கம் மற்றும் ஊடக உதவியாளர் எம்.சதீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

vicky east 2 தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டு. மாவட்ட பணிமனை திறப்பு