நல்லூர் கந்தன் மகோற்சவம் வழமை போல் நடைபெறும்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் வழமை போலவே இந்த ஆண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் வெளியான தேர் உற்சவம் தொடர்பான செய்திகளில் உண்மை இல்லை என்றும், வழமை போன்றே தேர் திருவிழா நடைபெறும் என்றும், ஊடக வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் வந்த செய்திகளில் நல்லூர் கந்தன் தேர் திருவிழாவின் போது தேர் வெளி வீதி உலா வராது என்றும், உள்வீதியிலேயே தேர் உலா வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.