இலங்கையின் புதிய வரைபடம் வெளியானது

இலங்கையின் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாக அளவையாளர் நாயகம் பி.சங்ககார தெரிவித்துள்ளார். இறுதியாக 1995ஆம் ஆண்டு வரைபடம் தயாரிக்கப்பட்டது.  அதன் பின்னர் புதிய வரைபடம் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் முதலீட்டில் உருவாக்கப்படும், துறைமுக நகர நிலப்பரப்பை உள்ளடக்கிய வரைபடமே வெளியாகியுள்ளது.  இந்த வரைபடத்தில் கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், நெடுஞ்சாலைகள், மொறகஹந்த நீர்த்தேக்கம் ஆகியவை புதிதாக சேர்க்கப்ட்டுள்ளன.

இந்த வரைபட தயாரிப்பு வேலைகள் மார்ச் மாதம் நிறைவு செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் தற்போது பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வரைபடத்தில் துறைமுக நகரம் உட்பட 25 ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்து மாற்றங்களும் காட்டப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரைபட மாற்றம் மேற்கொள்ளப்படும்.