சிறிலங்காவில் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது

எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 07ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இக்காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமென்பது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும், எனினும் தேர்தல் திகதியை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என்றும், ஜனாதிபதி குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக தேர்தலை நடத்த முடியும். ஆனால் இந்த திகதிக்கு அப்பால் தேர்தலை தள்ளிப்போட முடியாது என்றும் தெரிவித்தார்.