சூடுபிடிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல்; நாளை இரகசிய வாக்கெடுப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

திருகோணமலையில் நாளை காலை 10.00 மணிக்கு இதற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஶ்ரீதரன் சிவஞானம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக போட்டியிடுகின்றனர்.

தலைவரை தெரிவு செய்வதற்காக தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதல் தடவையாக நடைபெறும் வாக்கெடுப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.