சுயாதீன விஞ்ஞானிகள் குழுவை அமைக்க முயற்சி

கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைகளில் சுயாதீனத் தண்மைகள் குறைவாக உள்ளதாக தாம் கருதுவதாகவும், எனவே விஞ்ஞானிகள் இணைந்து ஒரு சுயாதீன குழு ஒன்றை அமைக்கத் திட்டமிட்டள்ளதாகவும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதம விஞ்ஞான ஆலோசகர் டேவிட் கிங் பிரபு தெரிவித்துள்ளார்.

அரசின் விஞ்ஞான ஆலோசனைக்குழுவின் நடைமுறைகளில் சுயாதீனத் தன்மையை நாம் காணவில்லை. அவர்கள் தமது கருத்துக்களை சுயாதீனமாக வெளியிட வேண்டும். நான் பதவியில் இருந்த போது ஊடகவியலாளர்களை நானே நேரிடையாக சந்தித்திருந்தேன்.

தற்போது பற்றிக் வலன்ஸ் பிரபு அவ்வாறு சந்திப்பதற்கு அனுமதி உடையவரா என்பது குறித்து சந்தேகங்கள் உள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.