நாளை (4) இடம்பெறவுள்ள சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சாவின் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் கலந்துகொள்ளாது என அதன் செயலாளர் அகிலவிராஜ் இன்று (3) தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் கட்சியும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என முடிவெடுத்துள்ளது. ஜக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி ஆகிய கட்சிகளும் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வது இங்கு குறிப்பிடத்தக்கது.