சீனா வழங்கிய தடுப்பூசியை பயன்படுத்துவதில் சிக்கல் – மருத்துவ நிபுணர்கள்  

சினோபார்ம் தடுப்பூசிகள் சீனாவில்  இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அதனை இலங்கைக்கான சீனாவின் தூதுவர்   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று அதிகாரப்பூர்வமாக கைளித்தார்.

இந்நிலையில், சீனா வழங்கிய கொரோனாவைரஸ் தடுப்பூசியை இலங்கைமக்களிற்கு வழங்க கூடாது என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவிததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 600,000 கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவது குறித்து அரச மற்றும் தனியார்துறையை சேர்ந்த சிரேஸ்ட மருத்துவ நிபுணர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சீனாவின் தடுப்பூசி குறித்தும் அதற்கு அவசர அனுமதியை வழங்கலாமா என்பது குறித்தும் ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவை நியமித்தது என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் அந்த குழு சீனாவின் தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் போன்றவை குறித்து உறுதி செய்வதற்கான போதுமான தரவுகள் இல்லை என தெரிவித்துள்ளது என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் சீனாவின் தடுப்பூசியை தற்போதைய சூழ்நிலையில் பயன்படுத்தகூடாது என தீர்மானிக்கப்பட்டது என்றும்  கூறப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார கொள்கைகள் குறித்த நிறுவகத்தின் இயக்குநர் வைத்தியர் ரவீந்திர ரன எலிய சீனாவின் தடுப்பூசி போதுமான தகவல்களை கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில், உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 568ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.