வவுனியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்து முஸ்லீம் இளைஞன் கைது

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் வைத்து முஸ்லீம் இளைஞனொருவன்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு வாரமாக தற்போது காணப்படும் நிலையில், நேற்றைய தினம் குறித்த ஆலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞனொருவர் தேவாலயத்தினுள் சென்றுள்ளார்.

அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை விசாரித்தபோது கண்டி அக்குரனை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லீம் இளைஞன் என தெரியவந்துள்ளது.

உடனடியாக அவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரம்  சமூக ஊடகங்களை பயன்படுத்தி வஹாபிசத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத விசாரணை பிரிவினரல் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என காவல்துறையினர்  தெரிவித்துள்ளார்.
மேலும் கைதுசெய்யப்பட்ட இருவரும் கட்டாரில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பியவர்கள் என  தெரிவிக்கப்படுகின்றது. கட்டாரில் தொழில்புரிந்த காலத்தில் இவர்கள் வட்ஸ் அப் குழுவொன்றை உருவாக்கி தீவிரவாதம் வஹாபிசம் தொடர்பான கொள்கைகளை அங்குள்ள இலங்கையர்கள் மத்தியில் பரப்பினார்கள் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் நடவடிக்கைகள் குறித்து கட்டார் அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிற்கு எச்சரிக்கை வழங்கியதோடு அவர்கள் இருவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.