சிறீலங்காவுக்கும் வெட்டுக்கிளிகள் பரவும் ஆபத்து

பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள் சிறீலங்காவுக்கும் பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக சிறீலங்காவின் விவசாய பணிப்பாளர் எம். டபிள்யூ. வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

பாலைவன வெட்டுக்கிளிகள் பயிர்களை அழிக்கும் தகமை கொண்டவை. இவை தென்னாசியா நாடுகளுக்கு பரவியுள்ளதுடன், வட இந்தியாவுக்கும் பரவியுள்ளன. தென்னிந்தியாவை நோக்கி அவை செல்லாதபோதும், காற்றின் திசைமாறினால் அவை சிறீலங்காவை நோக்கி வரலாம். எனவே விவசாயிகளும், அதிகாரிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.