கொரோனாவால் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு மாற்றம் தொடர்பாக நாசா வெளியிட்டள்ள படம்

உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் வேளையில், உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் இயற்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சுற்றுச் சூழல் மாசு கணிசமானளவு குறைந்து வருவதாக கூறப்படுகின்றது.

வாகன பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள் மூடல் ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய செயற்கைக்கோள் தரவுகள் குறிப்பிடுகின்றது.

வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் உலகின் ஏனைய பகுதிகளையும் நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2015 முதல் 2019 மார்ச் வரையிலான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டை இந்தப் படம் காட்டுகின்றது.

எவ்வாறாயினும் இந்த செயற்கைக் கோள் படம் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றது.