மே 11இல் பாடசாலை 2ஆம் தவணை ஆரம்பம்.

2020ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் எதிர்வரும் மே 11ஆம் திகதி ஆரம்பமாகும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் 20ஆம் திகதி பாடசாலைக்கான 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஏற்கனவே திட்டமிடடதைப் போன்று ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பிக்க முடியாத காரணத்தினால் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளுக்கான 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.