கன்னியாவில் நில மீட்பு போராட்டம் – ஆதரவு வழங்க கோரிக்கை

தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சிறீலங்கா அரசு நடவடிக்கைகளை எடுத்துவருவதற்கு எதிராக அதனை தடுக்கும் போராட்டங்களை தமிழ் மக்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

1000 பௌத்த விகாரைகள் அமைப்பது என்ற திட்டத்தின் மூலம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் துணையுடன் ரணில் தலைமையிலான சிறீலங்கா அரசு இந்த நாசகாரத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கு எதிரான போராட்டம் ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவுகளை வழங்கி தமிழ் மக்களின் நிலங்களை மீட்பதற்கு உதவுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.